Thottal Thodarum

Feb 8, 2011

ஜன்னல்

open_window_by_Linlithரெண்டு மூன்று நாட்களாகவே அந்த பக்கத்து மாடி வீட்டு ஜன்னலை பார்க்கும் போதெல்லாம் மனதுக்குள் குறுகுறுவென இருந்தது நவநீதகிருஷ்ணனுக்கு. அவன் ஒரு உதவி இயக்குனன். ஷூட்டிங்கில்லாக் காலங்களில் அவன் வசிக்கும் மேன்ஷனின் மொட்டை மாடியில் பேடு, பேப்பர், பென்சில், ஸ்கெட்ச் பென், அரைபாக்கெட் கோல்ட் ப்ளேக் பில்டருடன் தமிழ் சினிமாவை புரட்டிப் போட ஆயத்தமாவான். சமயங்களில் சிந்தனை தடைபடும் போது, ஒரு சிகரட்டை பற்ற வைத்து இலக்கில்லாத பார்வை பார்த்தபடி வாய் விட்டு தன் கதையை பேசிப் பார்த்துக் கொண்டிருப்பதை, பக்கத்து வீட்டு மொட்டை மாடிக்கு துணி உலர்த்த வரும் பெண்கள் பார்த்து மிரண்டு போய் ஓடுவார்கள். ஆனால் இதெல்லாம் அவனுக்கு தெரியாது. அப்படி ஒரு சிந்தனை தடையேற்பட்ட நேரத்தில் தான் அந்த ஜன்னலை பார்த்தான்.


அந்த வீடு அவன் இருந்த மேன்ஷனுக்கு அடுத்த பில்டிங். மேன்ஷன் இரண்டு மாடி கொண்டது. அடுத்தது மூன்று மாடி. அதில் மூன்றாவது மாடி வீட்டின் ஜன்னல் தான் அவனை அலைக்கழித்தது. எப்போதும் அந்த வீட்டின் கதவு மூடியே இருக்கும். சில சமயம் ஜன்னல் மட்டும். திறந்திருக்கும். அந்த வீட்டில் ஒரு நாற்பது வயது மாதுவும், பதினாறு வயது பெண்ணும் இருப்பதை ப்ளாட்டை தாண்டிப் போகையில் பார்த்திருக்கிறான். பெண் கொஞ்சம் சிக்கெனவே இருப்பாள். ஒரு நாள் ராத்திரி கனவில் வந்து, சொப்பன ஸ்கலிதம் செய்திருக்கிறாள். ஆனால் இப்போது அவனுக்கு அவள் முக்கியமில்லை. அந்த வீட்டின் ஜன்னல் தான் பிரச்சனை. ஜன்னல் திறந்திருந்தால் வீட்டின் கதவு பாதி திறந்திருக்கும். ஜன்னல் மூடியிருந்தால் முழுதாய் எல்லாக் கதவும் மூடியேயிருக்கும். எப்போதும் மூடியே பார்த்த கதவை திறந்து பார்க்கையில் கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஜன்னல் கதவு திறந்தவுடன், மெல்ல வீட்டின் கதவு திறக்கப்பட, அந்த வீட்டு மாது மெல்ல சுற்றும் முற்றும் வெளியே வந்து பார்த்து விட்டு, செல்போனில் பேசியபடியே, கதவை சாத்திக் கொண்டாள். அவளின் நடவடிக்கை நவநீதகிருஷ்ணனுக்கு ஒரு மாதிரி குன்சாகவே பட்டது. ஏதோ ஒரு சதிக்கான ஏற்பாடு நடக்கவிருப்பதை அவன் உள்மனம் சொல்லிய நேரத்தில் ஒரு இருபது, இருபத்தியிரண்டு வயதுடய ஒரு பெண் சுற்றிப் பார்த்தபடி படியேறினாள். நவநீதகிருஷ்ணனுக்கு அவளை பார்த்த மாத்திரத்தில் மூச்சடைத்தது. இவ்வளவு அழகான பெண்ணை சமீபத்தில் சந்தித்ததேயில்லை. சுண்டினால் ரத்தம் வரும் கலரில் அளவெடுத்துச் செய்தது போன்ற உடலமைப்பில், சிகப்பு நிற சூடிதாரில்,  கை துறுதுறுக்கும் முலைகளோடு, அவள் படியேறியதை பார்க்கப்பார்க்க, ஸ்வப்பனம் இல்லாமலேயே ஸ்கலிதம் ஆகிவிடும் போலிருநதது. சரியாய் வீட்டு வாசலில் வந்து நின்று மீண்டும் ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு பாதி திறந்திருந்த கதவுக்குள் நுழைத்துக் கொண்டு, மூடிவிட்டாள்.

நவநீதகிருஷ்ணனுக்கு குப்பென வியர்த்துவிட்டது. என்னா..பிகர்டா..? ம்ஹும்.. என்று பெருமூச்செறிந்தான். உதவி இயக்குனன் வாழ்க்கையில் இதுமாதிரி விஷயங்கள் எல்லாம் ஒரு சாபக்கேடு. ரூம் கிடைத்தால் ஆள் இருக்காது. ஆள் கிடைத்தால் ரூமிருக்காது. எலலாம் கிடைத்தால் காசிருக்காது. பல சமயம் பெருமூச்சும், சுய திருப்தி மட்டுமே மிஞ்சும். சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு அந்த வீட்டின் கதவையே பார்த்துக் கொண்டிருந்த போது, கறுப்பாய் ஒரு இளைஞன் கையில் ஒரு கேரி பேக்கோடு மெல்ல அவசரமில்லாமல் படியேறினான். அவனின் நடையில் சத்தமெழுப்பாமல் நடக்கும் முயற்சி இருந்தது. மாடியில் வந்து நின்று மிகவும் கேஷுவலாய் சுற்றிப்பார்த்து, ஒற்றைக்கதவை மட்டும் திறந்து கொண்டு கால் செருப்போடு, உள்நுழையும் போது கையிலிருந்த கேரிபேக் கதவின் முனையில் மோதி, கண்ணாடி பாட்டில்கள் மோதிக் கொள்ளும் சத்தம் நவநீதகிருஷ்ணனின் பாம்பு காதிற்கு துல்லியமாய் கேட்டது. “ஆஹா.. என்னா ஒர் அநியாயம்.. சரக்கு போவுது உள்ள.. மொதல்ல ஒரு பிகரு. பின்னாடியே இதுவரை இந்த ஏரியாவில் பார்க்காத ஒரு ஆள்.. “ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே.. சூடிதார் பெண் ஜன்னலருகே வந்து ஜன்னல் கதவையும் மூடினாள். இப்போது அந்த வீட்டின் கதவுகள் எல்லாமே பூட்டப்பட்டிருக்க, நவநீதகிருஷ்ணன்  முடிவுக்கே வந்துவிட்டான். ஆம்.. அதுவே தான் நடக்கிறது.. என்னா ஒரு அநியாயம் பத்து குடுத்தனம் இருக்கும் வீட்டில இப்படி செய்யுறாங்களே.. இந்தமாதிரி மொள்ளமாரித்தனம் பண்ணிட்டு இருக்கிறவங்கனாலத்தான் மத்தவங்களையும் தப்பா பார்க்க வேண்டியிருக்கு.. வீட்டுல ஒரு வயசுப் பொண்ணை வச்சிட்டு என்னா கொடுமையிது.. இவ வீட்டுக்கு வர்றவன் போதையில, கீதையில வரும்போது வேற யார் வீட்டுக் கதவையாவது தட்டமாட்டான்னு என்ன நிச்சயம்?. என்று தனக்குள் பொரும ஆரம்பித்தான்.. “த்தா.. இத விடக்கூடாது.. கையும் களவுமாய் பிடிக்கணும்” என்று முடிவெடுத்து இருந்த சிகரெட்டையெல்லாம் தொடர்ந்து அடிக்க.. அவன் கண்கள் மட்டும் அந்த வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தன. ஒரு மணிநேரமாய் அப்படியே உட்கார்ந்து இருந்தது பசியைக் கிளப்பிவிட்டது. முனைக்கடை ஐயர் மெஸ்ஸில் தயிர்சாதம் சாப்பிடத்தான் காசிருந்தது. இருந்தாலும் அவனுக்குப் போக மனசில்லை.. பக்கத்திலிருந்த சொம்பிலிருந்து மடக் மடக்கென தண்ணீரை ஒரே மூச்சில் குடித்தான். கொஞ்சம் பசியாறியது போல இருந்தாலும், நமநமவெனத்தான் இருந்தது. சிகரெட் பிடிக்கலாம் என்றால் அதுவும் காலியாகிவிட, வாங்கிவரக் கீழே போக வேண்டும்.. அதற்குள் இவர்கள் ”எஸ்” ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற யோசனையும் வர, எப்படி வந்தாலும் கீழேதான் வந்தாக வேண்டும். பக்கத்துக் கடையில் சிகரெட் வாங்கிவிட்டு உடனே வந்துவிடலாம். என்று முடிவெடுத்து, பரபரவென பக்கத்து மாடியை பார்த்தபடியே கீழிறங்கினான். இறங்கும் போதும் அவன் கண்ணிலிருந்து அந்த வீடு மறையும்வரை பார்த்த படியே இறங்கி.. வேகவேகமாய் நாயர் டீக்கடையில் அக்கவுண்டில் ஒரு டீயும் ஒரு பாக்கெட் பில்டரும் வாங்கி அதில் ஒன்றை பற்ற வைத்து பக்கத்துவிட்டு வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான். ரோட்டு ஓரத்தில் இருந்த மரத்தடியில் ஒரு புது புல்லட் இருந்தது.

உள்ளேப் போய் கதவைத் தட்டி என்னவென்று பார்த்துவிடலாமா? என்ற அதிரடி யோசனையும் வரத்தான் செய்தது. உறுதி செய்யாமல் ஏதுவும் செய்ய முடியாது... பிரச்சனையாகிவிடும். என்று யோசித்தபடி இரண்டாவது சிகரெட்டைப் பற்ற வைத்து, நாயரின் அக்கவுண்ட் புக்கில் எழுதிவிட்டு திரும்புகையில் புல்லட் ஸ்டார்ட் செய்யும் சத்தம் கேட்க, அவசர அவசரமாய் வெளிவந்து அவனைப் பார்ப்பதற்குள் தடதடவென கிளம்பிவிட்டான். அவன் தான் அவனே தான்.. அந்த கருத்த, பெருத்த உடம்பு அவனை உறுதி செய்ய.. அட.. மிஸ்ஸாகிவிட்டதே என்று யோசித்துக் கொண்டிருந்த போது.. சூடிதார் பெண் மெல்ல, தலைகுனிந்தபடி ப்ளாட்டின் வெளியே வர.. அவளைப் பார்த்த மாத்திரத்தில் உடலெங்கும் ஜிவ்வென சூடேறியது.. கொஞ்சம் கலைந்து சேர்வாக காணப்பட்டாள். நவநீதகிருஷ்ணன் கொஞ்சம் அவளை நடக்கவிட்டு அவளை பின் தொடர ஆரம்பித்தான். ஒரு இருபதடி விட்டு மெல்ல பராக்கு பார்கிறாற்போல சுற்றிப் பார்த்தபடி தெடர்ந்தான். மிக அழகான நடை. பிருஷ்டம் வரை தொங்கிய அவளின் கூந்தல் இடது வலதென ஆடியபடியே போனதைப் பார்க்க ஒரு உற்சாகம் வரத்தான் செய்தது. கழுத்தில், அக்குளில் வேர்வை வழிந்து, ஈரமாயிருந்தது காமத்தை கிளப்பிவிடக் கூடியதாயிருந்தது.

அவளின் நடையில் கொஞ்சம் வேகம் கூட, இவனும் கூட்டினான். போனை எடுத்து யாரிடமோ பேசியபடி நடந்தாள். ஒரு கட்டத்தில் மார்க்கெட்டின் அருகே வர ட்ராபிக் அதிகமாக, அவளின் நடையின் வேகம் குறைய, நவநீதகிருஷ்ணன் மிக அருகில் அவளிடம் போய்.. “என்ன சீக்கிரம் கிளம்பிட்டே..?” என்றான். அவள் கண்களில் ஒரு பதற்றம் தெரிந்தது.

“யார் நீங்க? என்ன வேணும் உங்களுக்கு?”

”சாந்திக்காதான் சொன்னாங்க.. அவங்க வீட்டுலதானே இருந்தீங்க அதுக்குள்ள கிளம்பிட்டீங்க..” என்ற நவநீதகிருஷ்ணனை பார்த்து முகத்தை கடுகடுப்பாய் வைத்துக் கொண்டு

“த..பாருங்க.. நான் அப்படியெல்லாம் கிடையாது.. என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே தடதட புல்லட் சவுண்ட் கேட்க, திரும்பிப் பார்த்தபோது புல்லட்காரன். அவனை பார்த்ததும்.. புல்லட்டின் பில்லியனில் அவள் ஏறி உட்கார, அவன் பார்வையில் ஓர் எச்சரிக்கையும், அதட்டலும் இருந்தது.

நிச்சயமாகிவிட்டது.. அதுவே தான்.. இதை சும்மா விடப்போவதில்லை. என்று முடிவெடுத்து, எப்படி உள்ளே போவது.? வேண்டுமானால் ரூம்மேட்டுகள் வந்தவுடன் அவர்களிடம் சொல்லி கும்பலாய் போகலாமா? இல்லை அடுத்த முறை யாராவது உள்ளே நுழையும் போது கதவைத்தட்டி போகலாமா? அதிரடியாய்.. உள்நுழைந்து சத்தம் போட்டு ஊரைக்கூட்டலாமா? என்றெல்லாம் பலமான யோசனையோடு இருந்த ஒரு பாக்கெட் சிகரெட் காலியாகும் வரை யோசித்து, சட்டென ஒரு முடிவெடுத்து விறுவிறுவென பக்கத்து ப்ளாட் மாடியேறி, மூன்றாவது மாடிக்கு வந்து நின்றான். ஜன்னல்கதவு திறந்திருந்தது. படியேறும் போது அவனும் அந்த கருப்பனைப் போல சத்தமில்லாமல் தான் ஏறினான். அங்கிருந்து பார்த்தபோது அவன் உட்கார்ந்திருந்த இடம கண்ணுக்கு தெரியவில்லை. தண்ணீர் சொம்பு மட்டும்தான் தெரிந்தது. நின்று நிதானமாய் மூச்சிழுத்து விட்டபடி கதவைத் தட்ட, கதவு திறந்து கொண்டது.

உள்ளே சடாரென நுழைந்த நவநீதகிருஷ்ணனை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அந்த மாதுவின் முகத்தில் ஒரு விதமான கலக்கம் தெரிய.. “என்ன தம்பி. என்னா. வேணும்?” என்ற தொனியில் லேசான அதட்டல் தெரிய.. ஒஹோ.. எடுத்தவுடன் அவள் கத்திவிட்டால்.. முந்திக் கொள்ளலாம் என்ற எண்ணமா? என்று யோசித்தபடி.. “என்ன நடக்குது இங்க..? அஹ..” என்று நவநீதகிருஷ்ணன் குரலை உயர்த்தி. கேட்க.. அவன் குரல் கேட்டு சின்னப் பெண் ரூமிலிருந்து வெளியே வந்தாள். இவனையும், அந்த மாதுவையும் மாறி மாறிப் பார்த்தாள். அவள் கண்களில் லேசான மருட்சி தெரிய..

”என்னா தம்பி சொல்றீங்க.. பொம்பளைங்க தனியா இருக்கிற வீட்டுல வந்து சத்தம் போடறீங்க..?:”

“என்னாது சத்தம் போடுறனா..? பொம்பளைங்க இருக்கிற வீட்டுலையா.? அப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்துட்டு போன ஆம்புளை யாரு?. அந்த சூடிதார் பொண்ணு யாரு..? ஹ... என்னாங்கடி.. பிலிம் காடுறீங்க..?” என்று மேலும் குரல் உயர்த்த..

“தம்பி.. சத்தம் போடாதீங்க.. மானம் மரியாதை போயிரும்.. பத்து குடுத்தனம் இருக்குறவீடு..” என்று பதைத்தாள்.

”மானம் மரியாதைய பத்தி பேசுற ஆளைப் பாரு.. பத்து குடுத்தனம் இருக்குற வீட்டுலத்தான்.. இந்த வேலைய செய்வீங்களோ..?” என்றதும்.. அந்த மாதுவின் முகத்தில் கலவரம் வெடிக்க, மெல்ல நவநீதகிருஷ்ணனின் அருகில் வந்து

“தம்பி.. கொஞ்சம் உட்காருங்க.. வேணி தண்ணி கொண்டுட்டு வா..” என்று அவன் தோள் தொட்டு, உட்கார வைக்க முற்பட, நவநீதகிருஷ்ணன் தோள் உதறி அவளை விலக்கினான். வேணி என்கிற அந்த பதினாறு கையில் தண்ணீர் பாட்டிலுடன் வந்து அவன் கையை பிடித்து உட்கார வைக்க, அப்போது சட்டென கதவு திறந்து, சுடிதார் பெண் உள்ளே வந்தாள். உள்நுழைந்ததும் கதவை உள்பக்கமாய் பூட்டிவிட்டு.. அந்த மாதுவை பார்த்து..

”என்னம்மா.. தெரிஞ்சிரிச்சாமா? என்ன சொல்லுறாரு..” என்றபடி அவனருகில் வந்து உட்கார்ந்தபடி.. “ என்ன இப்ப கண்டுபிடிச்சிட்டீங்க அவ்வளவுதானே? நீங்க நினைச்சது சரிதான்.. இங்க வந்த மூணு மாசத்தில யாருக்கும் எந்தவித சந்தேகமும் இல்லாம ரொம்ப டீசெண்டாத்தன் நடத்துறோம். எப்படி கண்டுபிடிச்சீங்கன்னு தெரியல. யாருக்கும் தெரியாமத் பகல்ல மட்டும் வேலைக்கு போற மாதிரி வந்து போயி சம்பாரிச்சிட்டிருகோம். என்ன நீங்க பிரச்சனை பண்ணீங்கன்னா.. போலீஸ் அது இதுன்னு கொஞ்சம் அவமானமாவும்.. எப்படியும் இன்னும் நாலு மாசத்தில வேற வீட்டுக்கு போயிருவோம்.. பெரிய மனசு பண்ணி விட்டீங்கன்னா.. உங்களுக்கு நானும் இவளும் எப்பவும் ஃபீரி.. இல்லேன்னா இப்பவும் ஏதும் பிரச்சனையில்லை. இன்னைய வரைக்கும் யாருக்கும் எங்களைப் பத்தி தெரியாது. வீடு பூந்து கைய பிடிச்சி இழுத்தான்னு சொன்னேன்னா.. ஆவுற பிரச்சனையை பாத்துக்கலாம் என்ன சொல்றீங்க..?” என்று இன்னும் நெருக்கமாய் அமர..

நவநீதகிருஷ்ணன் இரண்டு பக்கத்திலும் நெருக்கமாய் அமர்ந்திருந்த இரண்டு பெண்களையும் ஒரு முறை ஆழமாய் பார்த்தபடி இருவர் தோள்களிலும் கையை போட்டு “இனிமே ஜன்னலை மூடாதீங்க..” என்றான்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

21 comments:

அகமது சுபைர் said...

ரைட்டு...

Unknown said...

அருமை

Philosophy Prabhakaran said...

// ரெண்டு மூன்று நாட்களாகவே அந்த பக்கத்து மாடி வீட்டு ஜன்னலை பார்க்கும் போதெல்லாம் மனதுக்குள் குறுகுறுவென இருந்தது //

பிகர் ஏதாவது தெரிஞ்சிருக்குமோ...???

உளவாளி said...

அருமை

Anonymous said...

>>> உழைப்பாளி படத்தில், விவேக் கல்யாணத்தில் கவுண்டமணி – ரஜினி பேசும் காட்சிகள் நினைவிற்கு வருகிறது.

குறையொன்றுமில்லை. said...

ஓ, கே, ஓ, கே, ரைட் போலாம்.

ம.தி.சுதா said...

////“இனிமே ஜன்னலை மூடாதீங்க..”///

சரீங்க.. அப்படியே செய்வோம்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.

எல் கே said...

ஆரம்பத்திலியே ஊகிக்க முடிஞ்சது

Unknown said...

உதவி இயக்குனர் என்றில்லை, வேலையத்த அத்தனை ராசாக்களும் இப்புடித்தான்..

வணங்காமுடி...! said...

ஒரு உதவி இயக்குனரின் தாகம் தணிய உதவியதற்கு நன்றி.

அது எப்படி ஐயா, பெண்களை இப்படி வரிந்து வரிந்து வருணிக்க உங்களால் மட்டும் முடிகிறது...? படிக்கிறவனை கிளர்ச்சியடையச் செய்யும் வரிகள்..

// அவளை பார்த்த மாத்திரத்தில் மூச்சடைத்தது. இவ்வளவு அழகான பெண்ணை சமீபத்தில் சந்தித்ததேயில்லை. சுண்டினால் ரத்தம் வரும் கலரில் அளவெடுத்துச் செய்தது போன்ற உடலமைப்பில், சிகப்பு நிற சூடிதாரில், பார்த்த மாத்திரத்தில் கை துறுதுறுக்கும் முலைகளோடு, அவள் படியேறியதை பார்க்கப்பார்க்க, ஸ்வப்பனம் இல்லாமலேயே ஸ்கலிதம் ஆகிவிடும் போலிருநதது.//

இந்த ஒரு வருணனைல இரண்டு விஷயங்கள் புரியுது.. அந்தப் பொண்ணு ரொம்ப ரொம்ப அழகு...அந்த உதவி இயக்குனர் ரொம்ப காஞ்சு போயிருக்கார்...

கலக்கல் கதை சார்...

R.Gopi said...

சங்கர் ஜி....

தமிழ் டிஜிடல் சினிமா சைட்ல நீங்க படம் இயக்குவதை பற்றி போட்டிருந்தார்கள்...

http://tamildigitalcinema.com/?p=8509

என்ன அந்த நியூஸ் வர்ற பேஜ்ல, உங்க ஃபோட்டோ மேல பூரா ஒரே குஜிலி ஃபோட்டோஸா இருக்கு...

சும்மா சொல்லக்கூடாது தல... சும்மா ஜில்லுனு இருக்கீங்க....

வாழ்த்துக்கள் சங்கர் ஜி....

'பரிவை' சே.குமார் said...

அண்ணா...
அருமையான கதை....
நிஜத்தின் பிம்பம்.

Prasanna Rajan said...

ஜன்னல் என்ற சுஜாதாவின் அருமையான கதை உண்டு. அதை காறி உமிழ்ந்தது போல் இருந்தது உங்கள் கதை.

Cable சங்கர் said...

நன்றி பிரசன்னா.. சுஜாதா போல எழுத நானெதற்கு..:))

Prasanna Rajan said...

நான் உங்களை சுஜாதா போல் எழுதச் சொல்லவில்லை. நீங்கள் நீங்களாகவே எழுதுங்கள்.

இருப்பினும் எழுதுவதற்கே எத்தனையோ இருக்கையில் இதை எழுதுவானேன். காமத்தை பற்றி எழுதுவது என்றால் கொஞ்சம் மெனக்கெடல் வேண்டியிருக்கிறது. அப்படி இல்லையென்றால் திரிந்து மூன்றாம் தர மேட்டர் கதை ஆகி விடுகின்றது...

Jaleel said...

மூடியிருக்கும் ஜன்னல்களை பார்ப்பதும், உள்ளே என்ன இருக்கும் என கற்பனை செய்வதற்கும் எந்த வேலையில்லாமலிருக்க வேண்டும் அல்லது மிகவும் காய்ந்து இருக்க வேண்டும்.

Cable சங்கர் said...

@அகமது சுபைர்
என்ன ரைட்டு..?:))

@ஹாஜா மொஹைதீன்
நன்றி

2பிலாசபி பிரபாகரன்
முழுசாபடிக்கலையா?:))

2உளவாளி
நன்றி

@சிவகுமார்
ம்

@லஷ்மி
நன்றி

2ம.தி.சுதா
சரி

@எல்.கே
ம்..

@கே.ஆர்.பி
அது சரி.. அவனுக்குத்தானே இதெல்லாம்தெரியும்..

@வணங்காமுடி

நன்றி

@ஆர்.கோபி
நன்றி..

@சே.குமார்

நன்றி

@பிரசன்ன ராஜன்
நான் நானாகத்தான் எழுதுகிறேன் பிரசன்னா.. ஏன் இதை எழுதக்கூடாது..? எழுதக்கூடிய விஷயங்களில் காமமும் ஒன்றுதானே.. அது மட்டுமல்லாமல், மெனக்கெடல் இல்லாமல் ரெண்டு வரிக்கூட எழுத முடியாது. காமம் ஒன்றும் தீண்டத்தகாதது அல்ல.. மூன்றாம் தர மேட்டர் என்பது பர்ஷப்ஷனை பொறுத்தது என்பது என் பர்ஷப்ஷன். ஏனென்றால் நான் இது வரை காமம் சார்ந்த கதைகளை மட்டுமே எழுதியதில்லை. போன வாரம் நான் எழுதிய கருணை என்றொரு கதை எழுதியிருந்தேன். அதற்கும் மெனக்கெடலுடன் தான் எழுதியிருந்தேன் ராஜன்.. ஸோ.. வாழ்க்கையில் பார்க்கும், கேட்கும், அனுபவிக்கும் எல்லாமே எழுதப்பட வேண்டியது என்பது என் கருத்து.

Rafeek said...

வழக்கமா இது போன்ற கதைகளில் நாம் நினைத்தற்கு மாறாக ஒரு ட்விஸ்ட் இருக்கும்.. மொக்கை வாங்குவது போல. இதில், அது போலவே பில்டப்புகளுடன் எடுத்து சென்று அது போலவே முடித்திருப்பது சிறப்பு. :-)

தோமா said...

இனிமேல் பக்கத்துவீட்டு ஜன்னல்களை உத்து கவனிக்கணும்!!!, அல்ப ஆசைதான் ;))

அருண் said...

கதை கலக்கல்,நீங்க படம் இயக்க போறத பத்தி வாசிச்சேன்,வாழ்த்துக்கள். அப்பிடியே நம்மளையும் மறந்துராதிங்க.
-அருண்-

aru(su)vai-raj said...

// இவ வீட்டுக்கு வர்றவன் போதையில, கீதையில வரும்போது வேற யார் வீட்டுக் கதவையாவது தட்டமாட்டான்னு என்ன நிச்சயம்?//
இத வரியில் போதை, கீதைனு வருதே.. இது இந்துக்களை அவமதிப்பதற்கா (கமல் போல..) அல்லது இதுவும் பின் நவீனத்துவமா ..?? (ஹி ஹி.. மாட்டி விட்டேனா..)