Ad Space

30,000 ரூபாயில் தயாரிப்பாளர் ஆக முடியுமா..? முடியும்.. விபரங்களுக்கு sankara4@gmail.com

Jun 29, 2009

துரை, நான், ரமேஷ் சார்.. (உரையாடல், சிறுகதை போட்டிக்காக..)

10gcydh

ரமேஷ் சாருக்கு என்னை பார்த்து என்ன பேசறுதுன்னு தெரியாம முவமெல்லாம் வேர்த்து போயிருந்தார். அழகாய் ஒரு பொம்மை லாகா.. பார்த்த என்னை, இப்படி இந்த இடத்தில பாக்கிறதுக்கு அவருக்கு கஷ்டமாதானிருக்கும். என் பேச்சில் ரொம்ப தெலுகு வந்திச்சின்னா மன்னிச்சிக்கங்க.. ரேணிகுண்டா தான் என் ஊரு.. நா பேரு ராஜீ..



ஆந்திராவிலிருந்து ஓடி வந்து ’துரை’னி பெல்லி சேசின.. அதான் கல்யாணம் செஞ்சதுக்கப்புறம், சாப்பாட்டுக்கு இல்லாமல் துரை ப்ரெண்டு வீட்டில் தங்கியிருந்த போது.. துரை என்னை பார்த்து ‘நீ ஏன் சினிமால நடிக்க கூடாதுன்னு” கேட்டான். அவன் ப்ரண்டு சினிமால சாப்பாடு போடுற வேலையில இருந்தான். எனக்கும் சின்ன வய்சிலேர்ந்து மனசுல ஆசை இருந்திச்சு. நா கொஞ்சம் கறுப்பா இருந்தாலும் களையாத்தான் இருக்கேன்னு எங்கம்மா சொல்லிகிட்டேயிருக்கும். வாணிஸ்ரீ, ரோஜா எல்லாம் கருப்புதானாமே..? எவனாச்சும் கொத்திக்கிட்டு போயிருவான் நா கூத்துர என்று சொல்லிக்கிட்டேயிருப்பாள். அவளோட சின்ன வயசில நிறைய ஆசைப்பட்டு ஆகல. ஆனா அவள ஆசப்பட்டவங்க நிறைய பேர். அப்படி ஆசைபட்ட ஒருத்தனுக்கு பொறந்தவதான் நான்.



துரை அப்படிதான் என்னை கொத்திகிட்டு போக வந்தான். பக்கத்தூரூ ரைஸ்மில் ஓனருடய மகன். சென்னையில் படிச்சுட்டு ஊருக்கு வந்தவனை மயக்கி போட்டேன்னு, அம்மா புத்திதானே எனக்கும் வரும்னு என்னன்னவோ பேசினாங்க.. நா அம்மா குரிஞ்சி அந்தரூ செப்பினதி தப்பில்ல. நிசம் தானே அவஙக் சொன்னது. பணம், குடும்பம் எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு யாரும் வேணாம்னு எனக்காக வந்தவன் நா துரை.. என் மேல அவ்வளவு லவ்வா..ன்னு கேட்டப்ப ஒரு மாதிரி சிரிச்சி என்னை கட்டிக்கிட்டான். உள்ளுக்குள்ள சந்தோஷமா இருந்திச்சி..



சென்னை வந்து வேலைதேடி அலைஞ்சப்பதான் தெரிஞ்சுது அவனிக்கு படிப்பு பெரிசா இல்லைன்னு. அவனால லைன் குடித்தனவீட்டில கக்கூஸூ லைன்ல கூட நிக்க முடியல.. வசதியா வாழ்ந்த புள்ள.. எனக்காக கஷ்டப்படுறத பார்த்தா மனசு கேக்கல. துரை என்னை சினிமால நடிக்கிறியானு கேட்டதும்.. அதுனாலதான் ஏதும் பேசாம உடனே சரின்னுட்டேன்.  யார் கேட்டாலும் ”என் அக்கா வீட்டுக்கார்ன்னு” துரை சொல்ல சொன்னான். ஏன் கேட்டதுக்கு கல்யாணமான பொணணுன்னா சான்ஸ் கிடைக்காதுன்னான். கழுத்தில இருக்கிற தாலிய கழட்டி வச்சிருன்னு சொன்ன போதுதான் மனசு ரொம்பத்தான் கஷ்டப்பட்டுது. எங்கம்மாவுக்கு கிடைக்காதது.. சரி இவ்வளவும் துரைக்காகத்தானேன்னு மனசை தேத்திக்கிட்டேன்.



அப்பத்தான் ரமேஷ் சாரை பார்த்தேன்.. நான் மொத, மொத நடிக்க போன படத்தோட அஸோஸியேட் டைரக்டர். “நீ தமிழா.. இதுக்கு முன்ன நடிச்சிருக்கியா..? டயலாக் பேசுவியான்னு? கடகடன்னு கேள்வி கேட்டுகினே இருக்க, நான் சட்டுனு தமிழ்ல சொல்லாம தெலுகுல “லேது.. நேனு தெலுகண்டி..” என்று சொல்லிவிட்டு, நாக்க கடிச்சிகிட்டே கொஞ்சம் நாணி கோணி நின்னதை ஒரு நிமிஷம்.. என்னை உத்து பாத்துட்டு ”சரி நாளைலேர்ந்து சூட்டிங்குக்கு வான்னு சொன்னாரு”. எனக்கு தெரிஞ்சு.. நான் டைட்டா போட்டுட்டு போயிருந்த டீசர்ட் பனியனை பார்த்துகிட்டே பேசுனவங்க நடுவுல ரமேஷ் சார்தான் முஞ்சிய பார்த்து பேசுனாரு. நாக்கு சால சந்தோஷம்.. அதுல எனக்கு ஹீரோயின் பிரண்டு கேரக்டரு.. ஷூட்டிங்ல ஆளாளுக்கு ஒன்னு சொன்னாங்க, நா மொரண்டு போயி நின்னப்ப எல்லாம் ரமேஷ் சார் தான் வந்து பொறுமையா சொல்லி கொடுப்பாரு.. என்னவோ தெரில அவரு சொன்னா நா உடனே செஞ்சிருவேன். அதனால அங்க இருந்தவங்க, சாரை கிண்டல் பண்ணாங்க.. ஆனா அவரு அதை பத்தி கவலைபடவேயில்ல..



சூட்டிங் நடந்த முத அஞ்சு நாள்ல ஏதாச்சும் சாக்கு வச்சு என்னய தொட்டவங்க சாஸ்தி.. ஹீரோ ஒரு தடவ இங்க வந்து நில்லுன்னு கூப்பிடற மாதிரி என் மாரை அழுத்தினான். துரைகிட்ட சொன்னப்ப.. சினிமான்னா அப்படித்தான்னு அட்ஜஸ்ட் பண்ணிக்க சொன்னான்.. உள்ளுக்குள்ள கூசிச்சு.. துரைக்காக பொறுத்துகிட்டேன்.

கடைசி நாளனைக்கு டைரக்டர் பச்சையாவே என்கிட்ட கேட்டுட்டாரு.. எனக்கு அழுகையா வந்திருச்சு.. என் அம்மா ஞாவகம் வந்திச்சு.. என் முவத்தை பாத்தவரு.. ஏதும் பேசாம.. போயிட்டாரு. அதுக்கு அப்புறம் என் கிட்ட எறிஞ்சு, எறிஞ்சு விழுந்தாரு.. ஏன்னே தெரியல.. எல்லாத்தையும் விட்டு ஓடிடலாமான்னு நினைச்சா துரைய பாக்க பாவமாயிருந்தது. இதோட கடைசின்னு முடிவு பண்ணி பல்லை கடிச்சிட்டு நடிச்சேன்.. ரமேஷ் சார் தான் பாவம்.. டைரக்டர் கிட்ட நிறைய திட்டு வாங்கினாரு..



இதுக்கு பொறவு நான் நடிக்க மாட்டேன் சொன்ன போது தான் துரை என்னை மொத, மொதலா அடிச்சிட்டான். உள் கன்னத்துல பல்லு பட்டு ஒரே ரத்தம். ரண்டு ரோஜூ  நான் அவனோட பேசல.. சூட்டிங் போய் வந்த காசுல ஒரு அஞ்சு நா ஓடிச்சி., திரும்பவும் கையில காசில்லாம அலைய ஆரம்பிச்சோம். அந்த நேரத்திலதான் மறுபடியும் அந்த படத்து டைரக்டர் கூப்ட்டு அனுப்சாரு..



”தபாரு.. வயசிருக்கும் போதே எல்லாத்தையும் பார்த்தாத்தான் உனக்கும் நாலு படம் கிடைக்கும், சும்மா அது, இதுன்னு பேசினேன்னு வச்சிக்க நாலு வீட்டுல பத்து பாத்திரம் தேய்க்க வேண்டியதுதான்.”ன்னுனார் டைரக்டர். இதை பேசும் போதும் என் மாரை பாத்துக்கிட்டேதான் பேசுனாரு. யாராச்சும் முதுகு பக்கம் உத்து பாத்தாலே எனக்கு உள்ளுக்குள்ள உறுத்தும். துரைய பாத்தேன். அவன் டைரக்டர பாத்து வழிஞ்சிட்டு சிரிச்ச மாறி இருந்திச்சு. “நான் சொல்லி கூட்டியாறேன் சார்.” என்று அவரிடம் சொல்லிவிட்டு என் கையை பிடித்து வெளியே வந்து லிப்டில்.. என்னிடம் “அவரு சொன்னது புரிஞ்சுது இல்ல..?” என்றான்.



“என்ன இவன்.. புரிஞ்சிட்டுதான் சொல்றானா..? கட்டின புருஷனே இன்னொருத்தனோட படுக்க சொல்றது என்ன அநியாயம்..?” ன்னு கோபம்..கோபமா வந்திச்சு... எதுவும் பேசாம வீட்டுக்கு வ்ந்திட்டோம்.. வந்து சாப்டவுடனே.. பெட்ல வந்து என் பக்கத்துல படுத்துக்கிட்டு என்னை கட்டிகிட்டான். மெதுவா என் கன்னத்துல முத்தம் கொடுத்தான். அவன் முகத்தில அவனுக்கு ”ஏங்காவாலி”ன்னு புரிஞ்சிச்சி.. அவன் கேட்ட கேள்விக்கு அவன் மேல கோபம் இருந்தாலும், என்னால துரைக்கு முடியாதுன்னு சொல்ல முடியாது. அவன் முடிக்கிற வரைக்கு படுத்திருந்தேன்.. எல்லாம் துரைக்காக..



அன்னைக்கு துரை ரொம்பவே முரட்டுதனமா இருந்தான். வேர்த்து முடிஞ்சி பக்கத்தில படுத்தப்ப.. “இப்ப என்கூட படுத்தப்ப... இருந்தியே அதேபோல டைரக்டர் கூட படுத்தேன்னா என்ன குறைஞ்சா போயிருவே..?”ன்னு கேட்டதும். எனக்கு அழுகை அழுகையா வந்திச்சு. அவன் சீரியஸ்சதான் பேசுறான்றது புரிஞ்சிச்சு.. எனனை லவ் பண்ணின துரையா இப்படி பேசுறான்னு தோணிச்சு. ஓன்னு வாய் விட்டு அழுதேன். கோவத்துல ”ஒரேய்.. தொங்கனா கொடுக்கா. கட்டின நீயே கூட்டி கொடுக்கிறீயே.. உனக்கு வெக்கமாயில்லை..”ன்னு கத்தி அவனை அடிச்சேன். கத்தினேன். ஆர்பாட்டம் பண்ணேன். துரை எல்லாத்துக்கு அமைதியாவே இருந்தான். ஓஞ்சு போய் உக்காந்தப்ப.. “ நல்லா யோசிச்சு பாரு.. எனக்கோ படிப்பில்ல.. நான் வேலைக்கு போய் சம்பாதிச்சு நல்லா வாழ்றதுங்கறது அவ்வளவு ஈஸியில்ல.. சான்ஸு வருது. இன்னைக்கு என்கூட படுக்கிறதுக்கு உனக்கு இஷ்டமில்லைன்னாலும்.. கண்ணை மூடிட்டு படுத்தேயில்ல அதே போல அவன் கூட படுத்தா.. சான்ஸுக்கு சான்ஸு.. பணத்துக்கு பணம்.. ஒரு வாட்டி.. எனக்காக ஒருவாட்டி.. அதுக்கப்புறம் வாணாம்.. நாம செட்டில் ஆவணும் ராஜீ.. ஒரு நாலு படம் பண்ணிட்டன்னு வச்சிக்க.. அப்புறம் நம்மள எல்லாம் தலைல தூக்கி வச்சு ஆடுவாங்க.. வசதியா ஊரை சுத்திட்டேன்.. என்னால கஷ்டப்பட முடியாது..மூட்டை தூக்கியாவது காப்பாத்துறேன்னு சொல்றது சினிமால வேணும்னா நல்லாருக்கும் நிசத்துக்கு ஆவாது.. ஒருவாட்டி.. ஒரே ஒரு வாட்டி”னு கெஞ்சினான். துரையோட நிஜ முக தெரிஞ்சிச்சி..



எனக்கு அவன் சொல்றது புரிஞ்சிச்சி.. அவனால கஷ்டப்பட முடியாது. அப்படியே அவ்னை தள்ளிவிட்டுட்டு ஊருக்கே திரும்ப போலாமான்னு தோணிச்சு.. போனா.. மறுபடியும் அம்மாவுக்கு கிடைசச் பேருதான் எனக்கு கிடைக்கும். அங்க போய் பேர் கெட்டு.. அம்மா தொழிலையே செய்யறதுக்கு.. இங்க புருசன் ஹெல்போட செய்யப்போறேன். அவ்வளவுதான். அதிலேர்ந்து வெளிய வரணும்னுதான் நான் துரைனி லவ் பண்ணினேன். தேவுடு சித்தம்.ன்னு நினைச்சிகிட்டு.. கால் மனசா சரின்னு சொன்னேன். அப்படி சொன்னாலும்.. மனசுக்குள்ள அழுகை, அழுகையா வந்திச்சு.. இதுவரைக்கு துரை தவிர யாரும் என்னை தொட்டது கூட கிடையாது. நிசங்கா.. நா மீது ஒட்டு.. அம்மாவுக்கு தெரிஞ்சவங்க பதிமூணு வயசில என்னை கூப்ட போது கூட நா முடியாதுன்னு சொன்னவ.. இன்னைக்கு துரைக்காக..



டைரக்டர் ரொமப் லவ் ஆளு.. பாட்டு பாடுனாரு.. ஒரு க்ளாஸுல பீரை ஊத்தி எனக்கு ஊட்டி விட்டாரு... ஓரே கசப்பு.. சில்லுன்னு உள்ளுக்குள்ள இறங்கிச்சு.. சாப்டான ஆளு.. மொதல்ல அவரு தொடும் போது, கூசிச்சி.. துரை ஞாபகம் வந்திச்சு.. இன்னொரு க்ளாஸ் பீரை குடிச்சதும்.. கொஞ்சம் கிரக்கமா இருந்திச்சு.. அதுக்கு அப்புறம்.. கூச்சம் குறைஞ்சிச்சு.. இன்னொரு க்ளாஸ்.. க்ளாஸ்... க்ளாஸ் என்று கூச்சம் எனக்கு குறைய.. குறைய.... டைரக்டர்க்கு வெறி பிடிச்சு.. புரட்டி எடுக்க. அடுத்த படத்துல செகண்ட் ஹீரோயின் சான்சு தரதா சொல்லி, இருபதாயிரம் பணம் கொடுத்தார். ”அடுத்த வாரம் புரொடியூசர் வர்றாரு வந்து ஒரு வாட்டி பாத்துரு”ன்னாரு.. துரைக்கு ஒரே சந்தோசம்.. வெளியே வரும் போது ரமேஷ் சார் பக்கத்து ரூமிலேர்ந்து வெளியே வ்ந்தாரூ.. என்னை பார்த்தாரூ.. தெரியாத மாதிரி போயிட்டார். எனக்கு ஒரு மாதிரியா இருந்திச்சு..



அனனிக்கு பூரா துரை என்னை கட்டி பிடிச்சு முத்தம் கொடுத்துகிட்டே இருந்தான். வீட்டுலேயே பீர் வாங்கி வந்து குடிச்சான்.. என்னை பார்த்து குடிக்க்றியானு கேட்டான். நான் வேணாம்னு சொல்லிட்டேன். என் பதிலுக்கு எதிர்பாக்காம கடகடன்னு குடிச்சான். ரொம்ப சந்தோஷமாயிருந்தான்.. அவன் சந்தோஷமா இருக்கிறதுக்கு எது வேணும்னாலு செய்யலாம்னு தோணிச்சு. அவன் என்னை யூஸ் பண்றானோன்னு கூட தோணிச்சு... உடம்பு வலிச்சுது.. இப்ப கூட கெட்டுறல.. ராஜீ.. போயிருன்னு மனசு சொல்லிச்சு.. ஆனா எல்லாம் என் துரைக்காகத்தானே...



அடுத்த நாள் ரமேஷ் சார்.. என்னை ஷூட்டிங் ஸ்பாட்டில வந்து பார்த்தாரூ.. ஏதுவும் கேட்கல.. ஆனா நானா சொன்னேன். டைரக்டர் அடுத்த படத்துல செகண்ட் ஹீரோயின் கேரக்டர் தர்றேன்னு சொன்னதை.. சிரிச்சாரூ.. நீ இத்தோட அஞ்சாவது செகண்ட் ஹீரோயின்னாரு.. எனக்கு தூக்கி வாரி போட்டிச்சு.. அன்னைக்கு உன்னை கூட்டி வந்தது யாருன்னு கேட்டாரூ.. அது என் மாமான்னதும் சிரிச்சாரு.. நான் தயங்கி என் வீட்டுக்காரர்ன்னு சொன்னேன். வேணாம்னு சொல்லல எடுத்தவுடனேயே இதுல மாட்டின சீரழிச்சுருவாங்க.. ராஜீ.. ஏதாவது வேலை வெட்டி பாக்க சொல்லு உன் புருசனை.. இதுல சம்பாரிச்சு பழகிட்டான்னா.. உனக்கு இதிலேர்ந்து வெளிய வர விடவே மாட்டான். உன் வீட்டுகாரருக்கு டிரைவிங் வேலை தெரிஞ்சா சொல்லு.. எனக்கு தெரிஞ்ச டிராவல்ஸுல வேலை வாங்கி தர்றேன்னு சொன்னாரு.. சொல்லிட்டு ஏன் இவ்வளவு பேர்ல உன் கிட்ட மட்டும் இன்வால்வ்மெண்டுன்னு புரியல..ன்னு எம் கண்ணை பார்த்து சொல்லிட்டு போயிட்டாரு.. டைரக்டர் நாங்க பேசுறத பாத்து அவரை தாண்டி போன ரமேஷ் சாரை கூப்ட்டு கோபமா பேசினாரு.. ரமேஷ் சார்..தலைகுனிஞ்சியிருக்க, திடீர்னு அவரு கையில இருந்த பேப்பர் பேடை எல்லாம் டைரக்டர் பக்கத்தில வச்சிட்டு.. அங்கிருந்து ஒரு மாதிரியா என்னை பார்த்துட்டு வெளியே போயிட்டாரூ. அவரு என்னை லவ் ப்ண்ணுறாறோன்னு தோணிச்சு. அதுக்கு அப்புறம் அவரு சூட்டிங்கிக்கு வரவேயில்லை.



துரைகிட்ட வேலை பத்தி சொன்னதும் விழுந்து, விழுந்து சிரிச்சான். ”நாம நினைச்சா இன்னும் ஒரு வருசத்துல பத்து காருக்கு டிரைவர் போடலாம்.. காரியம் கைகூடுறப்போ இந்த மாதிரியெல்லாம் எவனாவது எதையாவது சொல்லிட்டுதானிருப்பான்.”



ரமேஷ் சாரை யாரோன்னு துரை சொன்னது வருத்தமாயிருந்தது. அவர்தானே என்னை முதல்ல செலக்ட் செஞ்சாரு.. துரை அதுக்குள்ள மற்ந்துருச்சேன்னு வருத்தமாயிருந்தது.



கையில கிடச்ச காசுல தனியா சாலிக்கிராமத்துல வீடு எடுத்து, தினம் ஒரு ப்ரோடியூசர், டைரக்டர்னு போட்டோ எடுத்துட்டு துரை அலைய ஆரம்பிச்சான். ஒன்னு ரெண்டு படத்துல ஹீரோயின் ப்ரெண்டு, கல்யாண பெண் சிநேகிதின்னு சான்ஸ் வரத்தான் செஞ்சிச்சு.. நடிச்சதுக்கு பணம் வாங்கினதைவிட, படுத்ததுக்கு வாங்கினதுதான் ஜாஸ்தி.. ஒவ்வொரு வாட்டியும் இத்தோட லாஸ்டு.. இத்தோட லாஸ்டுன்னுதான் சொல்லுவான். இப்பெல்லாம் துரை என் கிட்டயே வரதில்லை. ஆனா எனக்கொன்னுன்னா துடிச்சிருவான். ரமேஷ் சார் சொன்ன மாரி.. முத டைரக்டர் சொன்ன படத்துல செகண்டு ஈரோயினின்னு சொன்னது டுபாக்கூர்னு தெரிஞ்சிருச்சு.. அவர் கிட்ட கேட்டேன். எப்ப சொன்னேன்னார்.. தொங்க சச்சினோடான்னு மனசுக்குள்ள திட்டிட்டு வந்திட்டேன்.



எனக்கு இப்ப சினிமா புரிஞ்சிருச்சு.. துரை இல்லாமயே ஷூட்டிங் போக ஆரம்பிச்சிட்டேன். கையில ஓரளவுக்கு காசு தேற ஆரம்பிசிருச்சு.. டைரக்டரோ.. புரோடியூசரோ.. பாக்கிற பர்வையிலேயே அவங்களுக்கு என்ன் தேவைன்னு எனக்கு தெரிஞ்சிரும். ஒரு ரோஜூ உடம்புக்கு முடியல.. யாரோ புரொடியூசரை பாக்கணும்னு சொன்னான். முடியல வேணாம்னு சொன்னேன்.. நம்ம கிட்ட தான் காசு கொஞ்சம் இருக்கு.. வேற வேலை பாக்காலாமே.. எதாவது கடை கிடை போட்டுக்கலாம்னு சொன்னதுக்கு.. இப்பதான் வாழ்கையில சந்தோஷமா இருக்கேன். அது ஒனக்கு பொறுக்கலையான்னு கேட்டான். எனக்கு புரிஞ்சி போச்சு.. இனி இவன் நம்மள வச்சுதான் பொழைகக் போறான்னு.. கோவம் வந்திச்சு.. ஆனா அவனை விட்டு பிரிய முடியல.. ஏன்னே தெரியல.. சில சமயத்துல் இந்த மாரி வலிக்க, வலிக்க, அடங்கிட்டுருக்கிறது கூட ஒரு மாதிரி நல்லாத்தான் இருக்குன்னு தோணுது.. எல்லாம் என் துரைக்காகத்தானே..



where_is_my_love___by_Geistig ஒரு நாள் ஷூட்டிங் கேன்சலாகி கூட்டிட்டு போறதுக்கு துரைக்கு போன் பண்ணேன். எடுக்கவேயில்ல.. சரின்னு யூனிட் கார்லேயே கிளம்பி வீட்டுக்கு போனப்ப.. ஆடிப்போயிட்டேன். ரூமில துரையும், வீட்டுகார அம்மா பொண்ணும்.. ஒட்டு துணியில்லாம செஞ்சிட்டுருந்தாங்க.. சத்தம் கேட்டு திரும்புனவன்.. எதுவும் நடக்காத மாதிரி.. அந்த பொண்ணை அனுப்பிச்சிட்டு.. பதட்டமேயில்லாம லுங்கிய கட்டிட்டு வந்தான். என் கண்ணுல தண்ணி வ்ந்திட்டேயிருந்தது. உள்ளுக்குள்ள அவன் எனக்கு செஞ்ச துரோகம் புரியவேயில்லை. அப்படியே அவன் தலை முடிய பிடிச்சி இழுத்து உலுக்கினேன். ”எந்துக்குரா.. எந்துக்குரா.. இலா சேசாவூ.. “ன்னு வெறிபிடிச்ச மாதிரி அவனை அடிச்சேன்.. ”நூகோசம்.. அன்னி நூகோசம்.. உனக்காத்தானே.. இப்படியெல்லம் சம்பாரிக்கிறேன். எனக்கு நீ இப்படி பண்ணலாமா..?னு கேட்டேன். அவன் அப்படியே பதில் சொல்லாம கூட விட்டிருந்தா பரவாயில்லை. நேரே என்னை பாத்து “உன் கூட படுத்தா.. எனக்கு அயிட்டம் கிட்ட படுக்கிற மாரி இருக்கு.. எவ்வளவு நாள்தான் .. அதனாலதான்.. நான் அவளை கட்டிக்க போறேன்னான்.” எனக்கு அப்படியே துர்கம்மா போல ஆவேசம் வந்திச்சு பாருங்க அப்படி ஒரு ஆவேசம் எங்கிருந்து வந்திச்சினே தெரியல.. துரையோட சந்தோஷத்துக்காக.. அவன் கஷ்டபடக்கூடாதுங்கிறதுக்காக,னு எல்லாத்தையும் அவனுக்காகவே செஞ்சி இப்ப வேற ஒருத்திய கட்டிக்க போறேன்ன் சொன்னத கேட்டவுடனே.. பக்கத்து டேபிள் மேல இருந்த கத்திய எடுத்து அவனோடத பிடிச்சி அழுத்திட்டே.. “இது இருக்கிறதுனாலதானே.. இவ்வளவு திமிரா பேசினே..ன்னு கத்திட்டே.. சர..சர.. சர...ன்னு அறுத்திட்டேன்.. ரூம் பூரா உடைச்ச பைப்லேர்ந்து வர்றா மாதிரி ரத்தம் பீச்சிச்சி.. என் மூஞ்சி.. உடம்பு, மாரூ.. இடுப்பு எல்லா இடத்திலேயும்..அவன் துடிச்சி.. துடிச்சி.. மயங்கி செத்ததை பாத்துகிட்டேயிருந்தேன்... கொஞ்சம் சுதந்திரமாவும் எனக்கு தோணிச்சு.கொல கேசாயிருச்சு.. கேஸுக்கு வக்கீல் வைக்க, கொள்ளன்னு ஹெல்ப் வேணுமில்ல.. யாராச்சும் தெரிஞ்சவங்க இருந்தா கூப்பிடுன்னு சொன்னாங்க்.. எனக்கு தெரிஞ்சி இங்க எனக்கு உதவுறதுக்கு உங்கள விட்ட யாரும் தெரியாது. இஷ்டமிருந்தா உதவி செய்ங்க.. இல்லேன்னா தேவுடு சித்தம்..னு சொன்னவுடனே.. ரமேஷ் சார். என் கைய அழுத்தி பிடிச்சாரூ.. கண்ணு கலங்கி இருந்தது.. அவரு பிடியில ஒரு நம்பகம் ஒச்சிந்தி. எனக்கென்னவோ ரமேஷ் சார் இப்பவும் என்னை லவ் பண்றாரூன்னு தோணுது. அன்னி தேவுடு சித்தம்..



&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&.



இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

கொத்துபரோட்டா – 29/06/09

கல்வியும், மருத்துவமும் வியாபாரம் ஆகிவிட்டது என்பதை அந்த நிறுவனங்களை நடத்துபவர்களே உண்மை என்று ஒத்து கொள்வது போல்  அவர்களுடய நிறுவனங்களின் விளம்பரங்கள் தொலைக்காட்சியில் ஸ்பான்ஸர் நிகழ்ச்சி நடத்துவதிலிருந்தே தெரிகிறது. நேற்றைய சன் டிவியின் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் டாக்டர். எம்.ஜி.ஆர். பல்கலைகழகம் ஸ்பான்ஸர் செய்தது. ஒரு பல்கலைகழகம்  ஏதாவது ஒரு கல்வி சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியை தயாரித்து புகழ் பெற்ற சன் டிவி போன்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பலாம். ஆனால் இவர்கள் ஒரு சினிமா விழா ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்கிறார்கள். அப்படியானால் என்ன அர்த்தம் வியாபாரத்தில் போட்டி அதிகமாகிவிட்டது என்று தானே அர்த்தம்?. மக்களை கவரும் ஒரு நிகழ்ச்சியில் விளம்பரம் செய்ய பணம் செலவிடும் இம்மாதிரியான நிறுவனங்கள் அப்படி செலவு செய்த பணத்தை, தங்களிடம் சேரும் மாணவர்களிடம் தானே பிடுங்கும்.? என்ன கொடுமடா சாமீ….

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
டிவி டேலண்ட் ஹண்ட் ஷோக்களில் எனக்கு பல வருடஙக்ளாய் பிடித்த ஒரு நிகழ்ச்சி ஜெயாடிவியில் வரும் ராகமாலிகா  நிகழ்ச்சி. மிக அழகாய் பாலாஜியால் காம்பர் செய்யபட்டு, மிக நீட்டாக பிரசண்ட் செய்யப்படும் நிகழ்ச்சி. வழக்கமாய் வரும் பல நிகழ்ச்சிகளை போல . தோற்பவர்கள், ஜெயிப்பவர்களின் உணர்வுகளை எக்ஸ்போஸ் செய்வதை நம்பாமல் நல்ல திறமையான குரல்களை தெரிவு செய்து  நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்து, அவர்களின் திறனை வெளிபடுத்த வைக்கிறார்கள். ஹாட்ஸ் ஆப் சுபஸ்ரீ தணிகாசலம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

விளம்பரங்களில் சமீப காலமாய் என்னை மயக்கியது, வோடோபோனின் ஜூஜூ விளம்பரங்களை விட  AXE விளம்பரங்கள்தான் . வோடொபோன் விளம்பரஙக்ள் வேறு வகை.. ஆனால் இந்த் ஆக்ஸ் விளம்பரங்களில் வரும் பெண்களின் எக்ஸ்ப்ரஷன்ஸ் இருக்கிறதே. சூப்பர்ப்.. அதிலும் அந்த பர்கர் ஷாப் பெண் பர்கரில் நம்பர் எழுதும் போது முகத்தில் காட்டும் காமம், வேகம், சிம்ப்ளீ சூப்பர்ப்.  என் நண்பி ஒருத்தி சொன்னாள் அவளுக்கு பிடித்தது அந்த மாதிரி எக்ச்ப்ரஷன்களை புரியாமல் விழிக்கும் இளைஞனின் முகபாவம் தான் பிடிக்கும் என்று. நண்பர் பினாத்தல் சுரேஷ் சொன்னார். ஸ்பெயினில் ஒரு முறை மொத்தமாய் இது எத்தனை ஆக்ஸ் விளம்பரஙக்ள் வந்ததோ அத்தனை விளம்பரஙக்ளையும் ஒரு சேர ஒரு மணி நேரம் போட்டார்களாம். நானும் அவங்க விளமபரத்த நம்பி வாங்கி, பொண்ணுங்க துறத்துராங்களோ இல்லையோ.. மளிகைகடைக்காரன் பில்லு கேட்டு துறத்துரான்.


பல நாடுகளில் தடை செய்யப்பட்ட AXE விளம்பரம்
http://www.youtube.com/watch?v=g_ySo29c-Gg&feature=player_embedded

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

தேனி பஸ்ஸ்டாண்ட் ஜக்‌ஷன் அருகில் நாகர் பரோட்டா கடை என்று ஒரு கடையிருக்கிறது. தேனிக்கு போகிறவர்களோ.. அல்லது அந்த பக்கமாய் தாண்டி போகிறவர்களோ.. தவறாமல் இந்த பரோட்டா கடையை மிஸ் செய்யாதீர்கள்.  அப்படி ஒரு அருமையான பரோட்டா. நன்றாக அடித்து பிசையப்பட்ட மாவு என்று அதனுடய சாப்ட்னஸில் தெரிந்தது. சும்மா பொன் கலரில் சற்றே அதிக எண்ணையுடன் கிரிஸ்பாக.. வந்த பரோட்டாவை, ஒரு கிண்ணம் கிரேவியுடன் ஊர வைத்து வாயில் போட்டால்.. ம்ம்ம்ம்ம்ம்ம்.. டிவைன்.
Image0162 

சென்னை என்.எஸ்.சி போஸ் ரோட், தங்கசாலை சந்திப்பில் இரவில் மட்டும் ஒரு கடையின் வாசலில் ஊரில் உள்ள அததனை சேட்டுக்களும், குடும்பம், குடும்பமாய் தெருவில் நின்று கொண்டு இட்லியும், ஊத்தப்பமும் சாப்பிட்டு கொண்டிருந்தால் அது சீனா பாய் கடையாய் தான் இருக்கும்.  அவ்வளவு சூப்பரான டேஸ்ட். இட்லி என்றால் சாதாரண இட்லி இல்லை. மீடியம் சைஸ் இட்லி ஒரு எட்டை  சுடச்சுட ப்ளேட்டில் வைத்து அதன் தலை மேலே இரு இரண்டு கரண்டு உருக்கிய நெய்யை தாராளமாய் ஊற்றி. அதன் மேல் நன்றாய் நைஸாய் அரைத்த மிளகாய் பொடியை தூவி, அதுக்கு தொட்டுக்க வெங்காய தக்காளி சட்னி, புதினா சட்னியும் வைத்து அதில் புரட்டி ஒரு வாய் உள்ளே தள்ளினால்…  ம்ம்ம்ம்..  ”சீனா பாய்  இன்னொரு ப்ளேட் இட்லி”. உள்ளங்கை அளவு ஆனியன் ஊத்தப்பத்துக்கு இதே ட்ரீட்மெண்ட்தான்.

பின் குறிப்பு : நெய், கொலஸ்ட்ரால், என்பவர்கள் தயவு செய்து சஞ்சீவனத்துக்கு  போகவும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஏ ஜோக்

மகள் : அம்மா என் பாய் ப்ரெண்டை இன்னைக்கு நல்லா ஏமாத்திட்டேன்

அம்மா:  எப்படி?

மகள் :  நான் என் காசை என் பாண்ட் பாக்கெட்டுல ஒளிச்சு வச்சிட்டு கண்டு பிடிக்க சொன்னேன். பாவம் அவன் ரெண்டு மணி நேரம் என் ப்ராவுக்குள்ள கைய விட்டு தேடி தேடி ஏமாந்துட்டான்..

அம்மா: :(?



நீஙக்ள் உறவு கொள்ளும் போது மிகவும் பிடிக்காத மூன்று வார்த்தை எதுன்னு ஒருவனிடம் கேட்டபோது அவன் சொன்ன பதில்

“டியர். நான் வந்தாச்சு” என்றான்.

ஜோக்

டிவி லைவ் ஷோவில் ஒரு நேயரிடம் கொகுப்பாளினி

தொ: வணக்கம், நீங்க எங்கிருந்து பேசறீங்க..?

நே : சைதாப்பேட்டையிலிருந்து..

தொ: அட நானும் சைதாப்பேட்டைதான். எந்த ஏரியா..?

நே : ஜெயராஜ் தியேட்டர் பக்கம் அனு ப்ளாட்ஸ்..

தொ: அட நான் கூட அந்த ப்ளாட்ல தான் இருக்கேன். ப்ளாட் நம்பர் என்ன..?

நே : ஏ1

தொ: ஏங்க கிண்டல் பண்ணாதீங்க.. அது என் ப்ளாட் நம்பர்..

நே : ஏய்.. நான் புருஷந்தான்.. சாவியை எங்க வச்சு தொலைச்ச..?

நன்றி : சஞ்செய்காந்தி..

Jun 27, 2009

வால்மீகி - திரைவிமர்சனம்

vaalmiki-vikatan-talkies-movies-tamil-cinema-ads

திருடனாய் இருந்த வால்மீகி பின்னர் திருந்தி இராமாயணம் எழுதினார் அந்த வால்மீகி.. சென்னையின் பிக்பாக்கெட்டான பாண்டி தன் காதலியின் நினைவாய் தன் வாழ்கையை மாற்றி எழுதிக் கொள்கிறான் இந்த வால்மீகி.

வர வர தமிழ் சினிமாவில் படித்த பெண்கள் எல்லாம், ரவுடி, பிக்பாக்கெட், விபசாரம் செய்பவன்,  மொள்ளமாறி, முடிச்சவுக்கியைதான் காதலிக்கிறார்கள். அவர்கள் காதலிப்பது தவறில்லை ஆனால் அவர்கள் எதனால் காதல் வயப்படுகிறார்கள் என்று காட்சிப்படுத்த தவறுகிறார்கள்.  அந்த தவறை தன் மோசமான திரைக்கதையினாலும், மேக்கிங்கினாலும் சொதப்பி எடுத்திருக்கிறார்கள்.
vikadan-talkies-vaalmiki

பாண்டி என்பவன் சென்னையின் ப்ரொபஷனல் பிக்பாக்கெட், ஹீரோயின் வந்தனா ஒரு பணக்கார ஷோஷியல் கான்ஷியஸ் உள்ள, குழந்தைகளை காதலிக்கும், ப்ளே ஸ்கூல் நடத்தும் பெண், இப்படி ஒரு கேரக்டரை வைத்துவிட்டு, ஆங்காங்கே பார்க்கும், பிச்சைக்காரன், அனாதை சிறுவர்களை பாராட்டி சீராட்டினால், நடு ரோடில் பிக்பாக்கெட் அடிக்கும் பாண்டியை காதலிப்பதற்கு  காரணம் கேட்க முடியாதில்லையா..? படத்தின் இன்னொரு கதாநாயகியாக வரும் பூக்கடை கனகாவுக்கு பாண்டியின் மேல் வரும் காதலுக்கான அழுத்தமான காரண காட்சிகள்  கூட, கதாநாயகி வந்தனா பாண்டியின் மேல் காதல் கொள்ள வைத்திருக்கும்  காட்சிகளில் இல்லை. சும்மா குளத்திலிருந்து காப்பாற்றினாலே அவன் நல்லவனாகிவிடுவானா.?  அவனின் எந்த குணங்களை வைத்து  அவன் நல்லவன் என்று முடிவுக்கு வருகிறாள் வந்தனா. இம்மாதிரியான படத்துக்கு மிக அழுத்தமான லவ் டிராக் வேண்டும், அப்போதுதான் இருவரின் பிரச்சனைகளின் வலி பார்க்கும் பார்வையாளனுக்கு புரியும். அவனும் உருக ஆரம்பிப்பான்.
Vaalmiki - Tamil Movie Gallery14

அதே போல் பாண்டியினால் ஏமாற்றப்பட்ட ஒரு பெண்ணை ஒரு லோக்கல் விபசாரியாய் பார்த்தவுடன் பாண்டி மனசு மாறுவது எல்லாம் டிராமா.  சினிமாவில் கதாநாயகியாய் நடிக்க வந்து ஏமாந்தவள், ஸ்லம் விபசாரியாய் மாறும் அந்த நிகழ்வுகள் நம்மை எவ்வளவு பாதிக்க வேண்டும்?  வந்தனாவின் பேரை பாண்டியின்  மார்பில் பச்சை குத்தியிருப்பதை பார்த்து தன் காதல் தோல்வியை உணரும் கனகாவுக்கு காட்சி வைத்த இயக்குனர்,  அந்த பெயரை  படத்தின் க்ளைமாக்ஸில் வந்தனா  குறிப்பிட்டு இது தான் நீ கண்டிப்பா மாறுவேன்னு நம்பிக்கை கொடுத்திச்சு என்று சொல்கிறார். இந்த காட்சிக்கு முன்னால் அவன் தன்  பெயரை பச்சை குத்தியிருப்ப்பதை எப்போது பார்த்தாள்?. அவள் பார்க்கும் காட்சி வைத்திருந்தால்,வந்தனா  பாண்டியின் மேல் வைத்திருக்கும் காதலுக்கு இன்னும் அழுத்தம் கூடியிருக்காதா.? பாண்டியை எதுக்காக போலீஸ் அடையாள அணிவகுப்பு செய்கிறார்கள்? அதுவும் வந்தனாவுக்காக.?  போலீஸ் சொல்வது பீரோ புல்லிங் விஷயத்துக்காக என்று, அப்படி ஒரு விஷயமே வந்தனாவின் வீட்டில் நடை பெறவில்லையே.?  இண்டர்வெல் விடவேண்டுமே என்று இப்படி ஒரு தடாலடி காட்சியா.?  ப்ளாஷ் பேக்கில் வ்ந்தனாவின் செயினை திருடிய திருடன் பல வருடஙக்ள் கழித்து அதை விற்கும் போது மாட்டிக் கொண்டு பாண்டி நடத்தும் வால்மீகி இல்லத்துக்கு வருவது எல்லாம் லாஜிக் இடி என்றால் அது மிகையாகாது.
Valmiki stills (4)

ஒரு காலத்தில் ப்ளஸாக இருந்த இளையராஜா இந்த படத்துக்கும் மிகப்பெரிய மைனஸ் ஆகிவிட்டார். அவர் பாட்டுக்கு தன் வேலையுண்டு, அவர் ரூமுண்டு என்று இருந்தவரை கூப்பிட்டால் இப்படிதான் நடக்கும். சரி பாடல்களில் தான் அரத பழய வாசனை என்றர்ல். பிண்ணனி இசை.. ம்ஹூம்.

ஆனால் அதற்கு இளையராஜாவை குறை சொல்ல கூடாது. பிண்ணனி இசை அமைக்க அதற்கான புட்டேஜூகளை கொடுக்க வேண்டியது இயக்குனரின் கிரியேட்டிவிட்டியை சார்ந்தது. அது இப்படத்தில் இல்லை என்றே சொல்ல வேண்டும். பல இடங்களில் உணர்வுகளை வெளிபடுத்த வேண்டிய காட்சிகளையெல்லாம் விஷூவலாக எக்ஸ்டெண்ட் செய்யாமல், கட் டூ கட் போயிருப்பது மேக்கிங் குறைகள்.

ஒளிப்பதிவாளர் அழகப்பன் நல்ல டெக்னீஷியன் தான்  ஆனால் எண்டஹ் ஒரு நல்ல டெக்னீஷியன்களுக்கும் நல்ல புரிதல் உள்ள ஆள் இயங்க தேவை. அந்த குறை படம் பூராவும் தெரிகிறது. இப்படி குறையாய் சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக் கொண்டே போகலாம். முடியல.

தப்பான இடங்கலில் பாடல்களின் ப்ளேஸ்மெண்ட், வீக்கான டயலாக், விஷூவல் மேக்கிங்  என்று  பல சொதப்பல்கள். மிக அழகாய் சொல்ல வேண்டிய ஒரு காதல் கதையை மிஸ் செய்திருக்கிறார் இயக்குனர் அனந்த நாராயணன். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

பாண்டியாய் வரும் அகிலுக்கு இன்னும் நிறைய தூரம் போக வேண்டியிருக்கிறது. உருவம் ஒத்துழைத்ததனால் பெரிய குறைகள் தெரியவில்லை. வந்தனாவக வரும் மீரா நந்தன் அழகாய் இருக்கிறார். அதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இன்னொரு கதாநாயகி.. நன்றாக நடிக்கிறார். அஜயன் பாலா இன்னும் இம்மாதிரியான கேரடர்களில் தொடர்ந்து நடித்தால் மிக விரைவில் லோக்கல் ரவுடி கேங் ஆளாகிவிடுவார். உஙக் ரேஞ்சே வேற தலைவா. சீக்கிரம் படம் பண்ணுங்க.

பாராட்ட வார்தைகளேயில்லையா என்றால் ம்..ம்.. அது கூட இருக்கிறது. முக்கியமாய் வந்தனாவின் ஸ்கூல் ஆனியுவல் டே அன்று மழலைகள் செய்யும் கண்ணபர் நாடக கூத்து இருக்கிறதே. கொள்ளை அழகு. அதே போல் தன்னை ஆணாய் வரித்து கொண்டு வாழும் பெண் திருடி, வந்தனாவின் பையை திருடிக் கொண்டு போன அடுத்த சில மணி நேரங்களில் தன் நெட்வொர்க் மூலம் கண்டுபிடித்து கொடுப்பது புதுசில்லை என்றாலும் இண்ட்ரஸ்டிங். க்ளைமாக்ஸ் வரும்போதாவது படம் சுறுசுறுப்பாவது என்று மிக சில காட்சிகளே இவ்வளவு புலம்பல்களும் விகடனிலிருந்து இன்னொரு சொதப்பல் வந்திருச்சேன்னு மனசுக்குள்ள வர்ற காண்டுலதான். பிரிஞ்சிக்க.. விகடன் தாத்தா..

வால்மீகி -  என்னத்தை சொல்றது.. ம்ஹூம்….?????

டிஸ்கி:

விகடனில் குறைந்தது இதுவரை 300 உதவி இயக்குனர்களிடமாவது கதை கேட்டிருப்பார்கள் என்று சொல்கிறார்கள். அதிலும் இவர்கள் செலக்ட் செய்த கதைகளை குறைந்தது ஒரு வருடத்துக்கு, ஆளாளுக்கு மாற்றி, மாற்றி, கேட்டு,  கரெக்‌ஷன் செய்து செப்பனிட்டு சுமார் பணிரெண்டு முதல் பதினேழு முறையாவது பல பேர்களிடம் கதை சொல்லி ஓகே ஆன பிறகும் கதை கேட்டுதான் படமெடுக்கிறார்கள். அப்படி பல முறை கேட்டு ஓகே செய்யப்பட்ட கதைதான் இப்படம்.  பதினேழு பேர் கேட்டும் இவ்வள்வு ஓட்டைகள் தெரியவில்லை என்றால் என்னத்தை கதை கேட்டு, .. அடப் போங்கப்பா.. ஒரு படத்தின் ஹிட், தோல்வி முன்னமே தெரிந்து விட்டால் எல்லோருமே ஹிட் படம் தான் கொடுப்பார்கள்.  இந்த ரிஸ்க் தான் இந்த துறையின் அழகே.  ஆனா அந்த ரிஸ்கையே ரஸ்கு சாப்புடுற மாதிரி விகடனில் இருந்த இம்மாதிரியான் படம் வருவதை ஏற்க முடியவில்லை. இந்த கதையை முதலில் செய்வதாய் இருந்தவர் லிங்குசாமி

சமீபத்தில் இவர்களிடமிருந்து செலக்ட் ஆகாமல் வெளியே வேறு தயாரிப்பாளர்களால் தயாரிக்க பட்டு ஹிட்டான படம் பசங்க்..  ப்ளாப் படம் குங்குமபூவும் கொஞ்சும்புறாவும். இன்னொரு படம் இப்போது தயாரிப்பிலிருக்கிறது..

ஒரு பின் குறிப்பு: நான் இதுவரை அங்கு கதை சொல்ல முயற்சிக்காத ஒரு உதவி இயக்குனன்.



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jun 26, 2009

நாடோடிகள் - திரைவிமர்சனம்

nadodi

காதல் ஜோடிகளுக்கு ரிஸ்க் எடுத்து கல்யாணம் செய்து வைத்தவரா நீங்கள்? இல்லை செய்ய துடிக்கும் நட்பு திலகமா..? அப்படியானால் கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம். சசிகுமார், சமுத்திரகனி இருவரின் சுப்ரமணிய புர வெற்றியால் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம். எதிர்பார்ப்பை நிறைவேற்றியிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

சசி, வசந்த், பரணி மூவரும் நெருங்கிய நண்பர்கள், சசியின் நண்பன் மாஜி எம்.பியின் மகன் சரவணன், அவன் ஒரு பணக்கார ஏரியா பெரிய ஆளான ஒருவரின் பெண்ணை காதலிக்க, அந்த காதல் பெண்ணின் தகப்பனுக்கு தெரிய, காதல் தோல்வியால் நண்பன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயல, காதலர்களை ரிஸ்க் எடுத்து சேர்த்து வைகக், சசி, வசந்த், பரணி கூட்டணி முயற்சி செய்து திருட்டு கல்யாணம் செய்து வைக்கிறார்கள். அப்படி கல்யாணம் செய்து வைத்ததில் ஆளாளுக்கு மிகவும் பாதிப்படைகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாதிப்புகள், உடல் ஊனத்திலிருந்து, மரணம், காதல் தோல்வி வரை. இப்படி பல விதமான தியாகங்கள் நண்பனுக்காக செய்துவிட்டு, அந்த காதல் ஜோடிகள் இருவரும் பிரிந்தால், அவர்களுக்காக இவ்வளவு பாடுபட்ட, அவமானபட்ட நண்பர்களின் கதி..? வலிக்க, வலிக்க, உண்மையை சொல்லியிருக்கிறார்கள்.

abinaya

ஆரம்பத்தில் கொஞ்சம் ஸ்லோவாக ஆரம்பித்தாலும், எல்லா கேரக்டர்களை அறிமுகபடுத்தியதும் படம் பரபரவென சூடு கிளப்புகிறது. காதல் ஜோடிகளூக்கு திருமணம் செய்து வைக்க அலையும் காட்சியில் திரை தகிக்கிறது. அட இண்டர்வெல்லிலேயே கதை முடிந்த மாதிரி இருக்கிறதே, இனிமேல் என்ன செய்ய போகிறார்கள் என்று யோசிக்க வைத்ததை சரியாய் காட்சி படுத்தி நெத்தி அடி அடித்திருக்கிறார்கள்.

சசி தனக்காக நண்பர்கள் இருவரின் உடல் பாதிப்பு அடைந்ததி நினைத்து குமுறும் காட்சியில் மிக அருமையாய் நடித்திருக்கிறார். ரொம்பவும் கஷ்டப்பட்டு டான்ஸ் ஆடுகிறார்,  மாமாவிடம் அவ்வப்போது “உஙக் நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சொல்வது, மாமன் மகளை பிரியும் போதும் சொல்வது டைரக்டர் பஞ்ச். படத்தில் மிளிர்பவர் பரணி, முதல் பாதியில் கலகலப்புக்கு பயன்படுபவர், பின் பாதியில் கோபம், துக்கம், ஆவேசம் என்று பின்னுகிறார்.  சசியின் மாமன் மகளாய் வரும் அந்த பெண் அழகுன்னா அழகு அவ்வளவு அழகு.  சோ…ஸ்வீவீட். விஜய்க்கு பெரிதாய் ஸ்கோர் பண்ண வழியில்லை. அவரின் காதலியாய் வரும் சசியின் தங்கை கேரக்டர், அப்பா இயக்குனர் ராஜா, நிமிட நேரத்தில் ப்ளக்ஸ் பேனர் கட்டும் அந்த லோக்கல் எம்.எல்.ஏ,  வில்லன் ஜெயபிரகாஷின் முதல் மாப்பிள்ளை, உதவப்போய் உபத்திரவத்தில் மாட்டிக் கொள்ளும் கஞ்சா கருப்பு, ஆ.. ஊவென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று, பயமுறுத்தி தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளும் ஹீரோயின் அப்பா,  என்று பல புது முகங்களும், பழைய முகங்களூம் தஙக்ள் பங்கை  நிறைவாய் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளரின் உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது. அதிலும்  அந்த திருமண சேசிங் காட்சி சூப்பர்ப் கதிர். அதே போல் எடிட்டிங்கும், சுந்தர் சி பாபுவின் இசையில் வரும் சம்போ.. சம்போ பாட்லும் நம்மை உசுப்பேற்றுகிறது.

நண்பனின் காதலுக்கும், தன் தங்கையின் காதலுக்கும், அவவளவு போராடும் சசி ஏன் தன் காதலுக்கு அவ்வளவு போராடவில்லை.? இரண்டாவது பாதியில் கொஞ்சம் ஸ்லோவென்றாலும், தங்களை பற்றி, தங்கள் குடும்பத்தை பற்றி கவலை படாமல் நண்பர்களின் காதலுக்கு துணை போகும் இளைஞர்களுக்கு  சரியான உண்மைகளை சொல்லியிருக்கிறார். முதல் பாதியில் பரபரக்கும் திரைக்கதையும், பின் பகுதியில் அந்த பரபரப்புகு ஈடான மிதமான நிதர்சன நிகழ்வுகளால் சமுத்திரகனி தன் மூன்றாவது  முயற்சியில் நம் மனதில் நிற்கிறார்.

நாடோடிகள் – ராஜபாட்டையில்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

முத்திரை - திரைவிமர்சனம்

Muthirai

டேனியல் பாலாஜி, நிதின் சத்யா, ஸ்ரீநாத, யுவன், என்று கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கூட்டணி.  கிடைத்த வாய்ப்பில் முத்திரை பதிக்காமல் போய்விட்டார்கள்.

இரண்டு ஸ்மால் டைம் திருடர்கள், ஒருவன் ஹைடெக், இன்னொருவன் லோக்கல் பிக்பாக்கட், இருவரும் ஒன்று சேர்கிறார்கள்.  ஹைடெக் லஷ்மிராயையும், நிதின் மஞ்சரியையும், காதலிக்கிறார்கள். அவர்களின் ப்ளாட்டில் வசிக்கும் சேத்தனிடம் ஒரு அரசியல் கொலை ரகசியம்  மாட்ட அவனிடமிருக்கும் ரகசியம் அடங்கிய  லேப்டாப் இவர்களிடம் மாட்டுகிறது. ஒரு பக்கம், போலீஸ், இவர்களை துரத்த, மறுபக்கம், வில்ல்ன் பார்ட்டிகள் துரத்த, என்று மாறி, மாறி ஓடுகிறார்கள். திடீரென திரும்பி நிற்கிறார்கள்.  அதற்கு அப்புறம் என்ன என்பதுதான் க்ளைமாக்ஸ்.

4-281-10695

பரபரப்பாக சொல்ல வேண்டிய கதை. படு சொதப்பலாக சொல்லியிருக்கிறார்கள். அதிலும் முதல் பாதியில் என்ன செய்வது என்றே தெரியாமல் குடிக்கிறார்கள், தம் அடிக்கிறார்கள், லவ் பண்ணுகிறார்கள்,  என்று ஒரே உட்டாலக்கடி, இரண்டாம் பாதியில் ஏகப்பட்ட டுவிஸ்டுகள வைத்திருக்கிறார்கள். எல்லாமே கொஞ்சம் டூமச்சாய், ஏதோ முடிக்க வேண்டும் என்ற அவரசம் தெரிகிறது.

டேனியல் பாலாஜியை சட்டென்று ஹீரோவாக ஏற்று கொள்ளமுடியவில்லை. ஏனென்றால் அவரது டயலாக் டெலிவரி இன்னும் வேட்டையாடு விளையாடுவை ஞாபகபடுத்துகிறது. நிதின் சத்யா கொஞம் இயல்பாய் இருக்கிறார். இடையிடையே ஒன்லைனர்களில் மிளிர்கிறார். லஷ்மிராய் ராக்கி சவந்துக்கு போட்டியாய் சும்மா பின்னி எடுக்கிறார். அவருக்கு வரும் ப்ளாஷ் பேக் காட்சிகள், தாலி செண்டிமெண்ட் எல்லாஒம் படு அமெச்சூர்.  மஞ்சரி தொலிப்ரேமா என்கிறா தெலுங்கு பட ஹீரோயினை ஞாபகபடுத்துகிறார். நடிக்கிறேன் என்று நம்மையும் படுத்துகிறார். நிதினை சிபிஐ ஆபிசர் என்று நம்புவது காமெடியாய் இருந்தாலும், ஒரு ராணுவ ஆபிசரின் பெண் இப்படி நம்புவது நம்பும்படியாய் இல்லை.
untitled-19-copy

இசை யுவன் சங்கர் ராஜாவாம். சொன்னாத்தான் தெரியுது. இந்த வருட்த்திய ஒர்ஸ்ட் ஆல்பம் ய்வனுக்கு இதுவாகத்தான் இருக்கும்.சலீமின் ஒளிப்பதிவு ஆங்காங்கே மிரளவும், ஆங்காங்கே திரளவும், காட்டியிருக்கிறது.

இயக்குனர் ஸ்ரீநாத், கதை, திரைக்கதை, கிரியேட்டிவ் டைரக்‌ஷன் செய்திருக்கும் அனீசின் சொதப்பல் திரைக்கதையால் இவர் ஒன்றும் செய்ய முடியவில்லை. காட்சி அமைப்புகளிலாகட்டும், மேக்கிங்கில் ஆகட்டும் பழைய ஹிந்தி படஙக்ளை பார்க்கும் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. ராத்திரியோடு ராத்திரியாக வீட்டை விட்டு ஒடும் நால்வரும், அடுத்த அடுத்த காட்சிகளில் புது , புது காஸ்டியூமில் அலைவது, பொட்டை காட்டில் லாப்டாபிலிருந்து, இண்டெர்நெட் கனைக்ட் செய்வது, ஏதோ பக்கத்து பேட்டை வஸ்தாதை மிரட்டுவதுவ் போல் கமிஷனரை மிரட்டுவது எல்லாம் ஓவர். க்ளைமாக்ஸ் சீனில் காட்டில் ஒளிந்திருக்கும் ஹீரோக்கள், திடீரென ஸ்போர்ட்ஸ் காரில் வந்திற்ங்குவது,  ஹனீபா, லஷ்மிராய், டேனியல் பாலாஜி  டிராக் படு சொதப்பல். அனீசின் இடையூறு இல்லாதிருந்தால் நிச்சயம் ஸ்ரீநாத முத்திரை பதித்திருக்க முடியும் என்று தோன்றுகிறது.

முத்திரை மாத்திரை எடுத்து செல்லவும்.

Jun 25, 2009

வந்திட்டோமில்ல…

ஒரு வாரமாய் உங்களுக்கெல்லாம் ஜாலியாய் இருந்திருக்கும், என்னுடய தொல்லையில்லாமல். எப்போதும் நல்லதே நடந்திட்டிருந்தா போரடிக்கும், அதனால நான் திரும்ப வந்திட்டேன்.

Image0183

ஒரு திரைப்பட டிஸ்கஷனுக்காக என் நண்பர்கள் குழாமுடன் ஏதாவது வெளியூர் போகலாமென  முடிவெடுத்து, என் புரொடியூசரிடம் சொல்ல, அவர் கொடைக்கானலை சொன்னார் அடிக்கிற வெய்யிலுக்கு கொடைக்கானல் பேரை சொன்னாலே குளிருதுல்ல என்று குளீரடிக்க, கிளம்பினோம். புதன் இரவு. அற்புதமான பஸ் பயணம். போகிற வழியில், நர்சிம், முரளிகண்ணன், தண்டோரா, ரமேஷ் வைத்யா எலோரும் பேசினார்கள். அதிகாலை தேனியில் இறக்கி விட்டார்கள். அங்கே அருகே ஒரு ஓட்டலில் டபுள் ஏசி போட்ட ரூமில் போய் செட்டில் ஆனோம். காலையில் ஒரு ஒன்பது மணிக்கு ஒரு காரை அனுப்பி வைத்தார் தயாரிப்பாளர். “இன்று ஒரு லொக்கேஷனை பார்க்க போகிறோம்.” நாளை தான் கொடைக்கானல் என்றார்.

Image0184

போகிற வழியில் செவ்வெளனி வாங்கி கொடுத்தார். அற்புதமான சுவை. இம்மாதிரியான சுவை இருபது ரூபாய் கொடுத்து சென்னையில் குடிக்கும் இளனியில் வந்ததில்லை. இளனி 5 ரூபாய். அந்த கடைக்காரர் அன்று தான் முதன் முதலில் வியாபாரத்தை ஆரம்பித்திருந்தார். ஒரு  இருபது இளனியுடன் அத்தனையும் காலி.

Image0185

சின்னமனூரிலிருந்து கொஞ்சம் தூரம் போனபிறகு ஒரு சின்ன ரோடு போனது. போகப் போக, பாதை கரடு முரடானது. வழியில் பாரஸ்ட் செக் போஸ்டில் அரசு பர்மீஷன் வாங்கியிருந்ததால், சுலபமாய் போக முடிந்தது. மேலே ஏற, ஏற, பாதை மோசமாகிக் கொண்டே போனது. மெல்ல், மெல்ல, தேனியின் வெய்யில் குறைந்து சிலுசிலுவென காற்றடிக்க, குலுங்கி, குழுன்கி மெதுவாய் முன்னேறியது வண்டி. இவ்வளவு கஷ்டப்ப்பட்டு மலையேறி என்னத்தை பார்க்க போறோம்னு மனசுள் ஓடிக் கொண்டிருந்த்து. போகிற வழியில் நடு காட்டில் ஒரு சின்ன ஆளில்லாத சர்ச்..  அழகாய் இருந்த்து.

Image0186

அரை மணி நேர பயணத்தில் வண்டி ஓர் இடத்தில் இற்ங்கி பார்ததவுடன்,  இயற்கை நமக்கு வழங்கியுள்ள அழகை வர்ணிக்க வார்ததைளே இல்லை. அந்த இடத்திற்கு வைத்திருந்த பேர் மிக சரியானது எனறே சொல்ல வேண்டும். “மேகமலை”  நிஜமாகவே மேகங்கள் மலையோடு கொஞ்சி விளையாடி கொண்டிருந்தது.  பல சமயங்களில் சில்லென்னு நம்மை  கடந்து சென்றது, சிலிர்ப்பூட்டியது.  அங்கே ஒரு அணையிருந்தது. ஆனால்  தண்ணீர் இல்லை. மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறது மேகமலை.

Image0187

அங்கே ஒரு அரசு கெஸ்ட் அவுஸ், ஒரு ஒயின் ஷாப், ஒரே ஒரு உனவகம்.”ண”வுகு பதிலாய் “ன”. போகும் போதே ஒரு இரண்டு கிலோ சிக்கன் வாங்கி போய் கொடுத்துவிட்டோமானால். ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வருவதற்குள் அற்புதமான லோக்கல் சாப்பாடு சிக்கனோடு. அந்த குளிரில் சூடாக.. ம்ம்ம்ம்ம்ம்ம்.. சும்மா அதிருமில்ல..

Image0188

அங்கிருந்து “தூவானம்” என்கிற் இடத்திற்கு போனோம்.  அதுவும் ஒரு அணைகட்டுதான். ஆனால் ஒரு பக்கம், சிவந்த மண்ணுடம் ஓடு தண்ணீரும், நடுவே பிரமிப்பான அணைகட்டும், அடுத்த பக்கம்  குறைந்த அளவு தண்ணீருடன் ஓடி தடாலென்று ஒரு பள்ளத்தாகிற்கு விழும் அருவியும், ஒரு கணம் முழு தண்ணீருடன் பார்த்தால் “அப்பொகலிப்டோ:” படத்தில் வரும் அருவியை ஞாபகபடுத்தியது.. மிகவும் ரிஸ்கான அந்த பாதையில் இறங்கி நடந்து, மெல்ல அந்த அருவி விழும் பாதாளத்தை பார்க்க, முயன்று, கிட்டே போக, காற்று என்னை மேலும் இழுக்க, போன் அடித்தது, கூட வந்த நண்பர் ஒருவர் “அண்ணே இன்னும் ரெண்டடி நகந்தீங்கண்ணா.. நீங்க கீழே போக வேண்டாம் காத்தே உங்களை இழுத்துக்கும். மரியாதையா வந்திருங்க. ஊருல அண்ணி புள்ளைங்களை திரும்ப பார்க்க வேணாமா? என்று கேட்டதும்தான் தெரிந்தது, நான் எவ்வளவு பெரிய ஆபத்திலிருக்கிறேன். என்று. கர்சீப்பை கையிலிருந்து உருவிக் கொண்டு தானே சர்ரென்று  பாதாளத்திற்கு இழுத்து சென்றதை பார்த்த பின் நான் எஸ்கேப். தண்ணீர் விழும் காலத்தில்  தண்ணீர் விழுந்து, அப்போது கீழேயிருந்து எழும்பும் காற்றானது விழும் தண்ணீரை மேலே உந்தி தள்ள, கீழேயிருந்து மேல் நோக்கி வரும் தண்ணீர்  மழை போல் பொழியுமாம். அதனால் தன் இந்த இடத்திற்கு பேர் தூவானம். என்கிறார்கள் .சில இடங்களை பார்க்கும் போது வெளிநாடு என்று சொன்னால் நிச்சயமாய் நம்புவார்கள்.

Image0189 Image0190

பசுமையும், தனிமையும், இயற்கை அழகும், இன்னும் மக்களால் பொல்யூட் ஆகாத மேகமலை, தூவானம் இடங்களை பார்க்கும் போது சென்னையின் வெயிலிலிருந்து ஒரு அற்புதமான சுகானுபவத்துடன் ஆரம்பித்தது எங்கள் பயணம்.

Image0191 Image0192

Image0193 Image0194

Image0195 Image0196 Image0197 Image0200

Image0201 Image0202

  Image0198

 

மேலே சில படங்கள், அவ்வ்ளவு தெளிவில்லாமல் இருந்தால் கேமரா குற்றமில்லை, நல்ல கேமரா எடுத்து போகாத  என் குற்றம்தான். என்னுடய் மொபைல் கேமராவில் எடுக்கப்பட்டது. மேலும் பயணக் கட்டுரை தொடரும்…Image0199

 

Jun 17, 2009

ராகவன் -திரைவிமர்சனம்

ragavan_m

செல்வராகவன் B.E என்று பெயர் வைக்கப்பட்டு பின்பு ராகவன் என்று பெயர் மாற்றப்பட்ட படம். புதிய இயக்குனர் பரமேஸ்வரன் இயக்கி வெகு காலத்திற்கு பிறகு கங்கைஅமரன் இசையில் வெளிவந்திருக்கும் படம். இண்ட்ரஸ்டாக சொல்லியிருக்க வேண்டிய படம். மோசமான திரைக்கதையால் நொந்து நூலாகி விட்டது.

ragavan-stills14

சென்னை மாநகரின் அதிகாலை நேரம், பேப்பர் போடும் ஆளாய் ஹீரோ ராகவன், பேப்பரில் அன்றைய தலைப்பு செய்திகளாய் ஐ.டியில் வேலை செய்யும் இளைஞர்கள், இளைஞிகள் கொலை செய்யப்படுகிறார்கள் என்ற செய்தியுடன் படம் தொடங்குகிறது. அடுத்த இரண்டு மூன்று காட்சிகளில் கொலை செய்பவன் ராகவன். எதற்காக ஐடி ஆட்களை தொடர் கொலை செய்கிறான்?, அவனின் காதல் என்னவாயிற்று? என்பதே க்ளைமாக்ஸ்.

ragavan-wallpaper05

ஐடி ஆட்கள் எல்லாருமே வேலையை தவிர எப்போது பார்த்தாலும், கையில் பீருடன், ஆளுக்கு நாலு பிகர்களூடன் தான் அலைகிறார்கள் என்ற எண்ணத்தை படம் பூரவும் தீவிரமாய் விதைத்திருக்கிறார் இயக்குனர். பாவம் அவருக்கு வெளியே நடப்பது தெரியவில்லை.  படம் பூராவும், குடித்துவிட்டு, ஆபாச உடை அணியும் பெண்களை பார்த்து அசூசை படும் ராகவன், அவன் காதலிக்கும் பெண்  மட்டும் எந்நேரமும் கிளிவேஜை காட்டியபடி இருப்பவளை, அதிலும் கண்ட நேரத்தில் மாடலிங் விஷ்யமாய் ராத்திரியில் சுற்றுபவளை எப்படி காதலிக்கிறான்? சும்மா சொல்ல கூடாது ஹீரோயின் சரி ஐயிட்டம். எப்படி கொலை செய்கிறான்? அசமஞ்சமாய் இருக்கும் அவன் எப்படி தப்பிக்கிறான்? ஐடி படிக்க சென்னை வரும் ராகவன் வந்தவுடன் அதற்கான முயற்சி ஏதும் செய்யவில்லையே? போன்ற பல கேள்விகள் படம் முழுவதும் வந்தபடியே இருக்கிறது.

ragavan-wallpaper04

அவனின் மனபிறழ்வுக்கான காரணம் சரியாக இருந்தாலும், அதை ஒழுங்காக ஆழமாய் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். ஏதோ பிட்டு படம் பார்த்த பீலிங். படத்தில் மயில் சாமி, காமெடி டிராக் படு கேவலம், அதைவிட இன்வெஸ்டிகேஷ்ன் செய்கிறேன் என்று மனோஜ்.கே.ஜெயனின் துப்பறியும், விதம் படு காமெடி. கேமரா ஒர்க் ஓகே. கங்கைஅமரனின் இசையில் ஒன்றும் பெரிதாய் தேரவில்லை. படத்தில் மனதை தொட்ட ஒரே விஷய்ம், ராகவன் தன் தாயின் துரோகத்தை பார்த்ததிலிருந்து பெண் குழந்தையின் கவுனை இழுத்துவிட்டு, கவுன் பறக்காமல் இருக்க, கால்களின் இடுக்கில் வெயிடுக்கு கல் வைத்துவிட்டு போவது. மிக நுணுக்கமான மனசிதைவுக்கு ஆட்பட்டவனின் நடவடிக்கை.

ராகவன் -  எஸ்கேப்.

டிஸ்கி

பால்கனியில் படம் பார்த்தது நான் மட்டுமே என்று பயந்து நடுங்கி கொண்டிருந்த நேரத்தில், திடீர் திடீரென லேசான பெண்ணின் சிரிப்பு சத்தம் கேட்க, பயந்து போய் திரும்பி உற்று நோக்கினால், ஒரு ஜோடி ஒரே  கசமுசா..  இண்டர்வெலுக்கு பிறகு பார்த்தால் இன்னும் இரண்டு ஜோடி ஆளுக்கொரு மூலையில். தியேட்டரில் மொத்தம் மூன்று ஜோடிகள், என்னையும் சேர்த்து 7 பேர்.

Jun 16, 2009

கொத்து பரோட்டா – 16/06/09

இட்லி சாப்ட்டு வாயில ரத்தம் வருமா..? வந்திருச்சு ஒருத்தருக்கு.. வால்டாக்ஸ் ரோடுல உள்ள ஒரு ஓட்டல்ல ஆசை ஆசையா இட்லி வடை சாப்பிடலாம்னு ஒரு வெளி மாநில டூரிஸ்ட் ஆர்டர் பண்ணியிருக்காரு. வாங்கி ஒரு கடி கடிச்சதுதான். வாயிலேர்ந்து குபு, குபுன்னு ரத்தம். என்னடான்னு பார்த்தா.. இட்லியில ஒரு ப்ளேட் துண்டு இருந்திருக்கு, அது பல்லு இடுக்குல போய் சொருகிகிட்டு எகிறுல பதம் பார்க்க, நொந்து போன அவரு உடனடியா ஆஸ்பத்திரியில போய் அட்மிட் ஆகி டீரீட்மெண்ட் எடுத்துகிட்டாரு. அந்த ஹோட்டல் மேல போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்து, அந்த ஹோட்டல் மேனேஜர் அரெஸ்ட் ஆயிட்டாராம். என்னா கொடுமைடா.. நிம்மதியா ஒரு இட்லி கூட சாப்பிட முடியாது போலருக்கே..

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நிறைய நண்பர்கள் ஜெயாடிவி நிகழ்ச்சியில் கலாய்க்க ப்ளான் பண்ணி லைன் டிரை பண்ணியிருக்கிறார்கள். பல பேருக்கு கிடைக்கவேயில்லை. முக்கியமாய் வால் பையன் பின்நவீனத்துவம் பற்றி கேட்டு கலாய்க்க டிரை பண்ணியதாய் சொன்னார். நல்ல வேளை மக்கள் தப்பித்தார்கள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Image0173  Image0181 Image0174

எனக்கும் ஜெயா டிவிக்கு ஏதோ ஒரு பந்தம் போல இருக்கிறது. இதே ஜெயா டிவியில் நான் நடிப்பதில் பிஸியாய் இருந்த காலத்தில் காலை மலர் நிகழ்ச்சியை ஒரு வாரம் தொகுத்து வழங்கினேன். நடிப்பதிலிருந்து விலகி டைரக்‌ஷன் துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்த  ரொம்ப நாளுக்கு பிறகு கேமரா முன்னால் நின்றது ஜெயா லைவ் பேட்டிக்கு  தான்.  திடீர் என்று என் நண்பர் ஒருவர் நேற்று  தான் வேலை செய்யும் ஓரு சீரியலில் ஒரு காமெடி கேரக்டர் இருப்பதாகவும், சொல்லியிருந்த ஆர்டிஸ்ட் வரவில்லை அதனால் உடனே வர முடியுமா என்று நேற்று கேட்டார். சரி அவருக்காக போனேன்.  அந்த சீரியலும் ஜெயாடிவியில் தான் வருகிறது. “பொய் சொல்ல போறோம்” மேலே உள்ள படம் அந்த சீரியலில் நடித்த போது  என்னை நானே என் செல் போனில் எடுத்த படம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஏஜோக்

திருமணமாகி இருபது வருடங்கள் ஆகிய தம்பதியர் தங்களுக்குள் உறவு கொள்ளும் நாட்களில், லைட்டை அணைத்துவிட்டே மனைவியிடம் உறவு கொள்வான். மனைவி எவ்வளவோ முறை கேட்டும் நடுவில் லைட் போட அவன் மறுத்துவிடுவான். இப்படியே போய் கொண்டிருந்த போது ஒரு நாள் மனைவி உறவின் நடுவே சட்டென்று லைட்டை போட்டு விட,  கணவனின் கையில் அவனுடய் :லுல்லாவைவிட பெரிய சைசில் ஒரு வைப்பரேட்டர் இருக்க, அதை வைத்து தன்னை மேட்டர் செய்து கொண்டிருப்பதை பார்த்து கொதித்து போன மனைவி ”அடப்பாவி இருபது வருஷமா ஏமாத்திட்டியே. நீ நல்லா இருப்பியா.. இதுக்கு நீ பதில் சொல்லியே ஆகணும்ன்னு சொன்னா.. கணவன் அவளை நேரே, டென்ஷனில்லாம பார்த்தபடி, “நிச்சயமா நான் உனக்கு இதை பத்தி பதில் சொல்றேன்.  ஆனா முதல்  நீ நம்ம ரெண்டு குழந்தைகளை பத்தி சொல்லு” என்றான்.

ஒரு நாள் கணவன் கோபத்துடன் வந்தான், என்ன என்று மனைவி கேட்டதற்கு, வரும் போது ப்ளாட் மேனேஜருடன் தான்  சண்டை போட்டு விட்டு வந்ததாக சொன்னான். மனைவி “ எதுக்காக..?” என்று கேட்டதற்கு, “அவன் இந்த ப்ளாட்டில் உள்ள எல்லா பெண்களிடமும் உறவு வைத்திருகிறானாம் ஒருத்தியை தவிர” என்றதும், ‘ நான் வேணும்னா பெட் கட்டறேன் அது ”பி ”ப்ளாக் சுமதியாய்தான் இருக்கும். “என்றாள் மனைவி.



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jun 14, 2009

ஜெயா டிவி ”லைவ்” உங்கள் பார்வைக்கு

போன வாரம் வியாழன் அன்று ”ஹலோ ஜெயாடிவி” நிகழ்ச்சியில் நேரலையாகவும், மறு ஒளிபரப்பாகவும், நான் பங்கு பெற்ற நேயர்களுடனான கலந்துரையாடலை ஒளிபரப்பினார்கள்.  பல பதிவர்கள் நிகழ்ச்சியில் போன் செய்து கலந்து கொண்டார்கள், பல முயற்சி செய்து, முயற்சி செய்து நொந்து போனதாகவும், சொன்னார்கள். பார்த்தவர்கள்  பாராட்டினார்கள், பலர் வலையேற்ற சொன்னார்கள்.

வழக்கமாய் நான் பங்கு கொள்ளும் பல நிகழ்ச்சிகளை பதிவு செய்வதற்காகவே என்னுடய கணினியில் டிவி டியூனர் கார்ட் வைத்திருக்கிறேன். அந்த சனியன் பிடித்த கார்டு அன்னைக்கு பார்த்து மக்கர் செய்துவிட்டது. (அதானே வேணுங்கிற போது வேலை செய்யாதே.) அந்த கடைசி நேரத்தில், யாரிடம் சொல்லி ரிக்கார்ட் செய்ய என்று ஒன்றும் புரியவிலலை.  மாலை மறு ஒளிபரப்பு வந்த போது கோவை நண்பர் சஞ்செயிடம் சொல்ல, அவர் பதிவர், நண்பர் கும்கியிடம் சொல்லி ரிக்கார்ட் செய்வதாய் சொன்னார்.  அவர் இதற்காக அவசர அவசரமாய் அலுவலகத்திலிருந்து ,வீட்டுக்கு வந்து பதிவு செய்ய ஆரம்பிப்பதற்குள், பத்து நிமிட நிகழ்ச்சி போய்விட்டது. இருந்தாலும் பதிவு செய்து டிவிடியை அனுப்பினார். அந்த அன்பான நெஞ்சுக்கு மிக்க நன்றி.

இதற்குள் தமிழிசை என்றொரு நண்பர் முழு நிகழ்ச்சியையும் வலையேற்றி அதற்கான லிங்க எனக்கு அனுப்பினார். அவருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இதோ அந்த உலக புகழ் நேரலை நிகழ்ச்சி.. ஹி.ஹீ..ஹி




முழுசா..பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க.. நண்பர்களே..


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jun 13, 2009

மாசிலாமணி – திரை விமர்சனம்.

maasilamani

புதிதாய் வேறு படங்கள்  ஐ.சி.சி மேட்ச் காரணமாய் வெளியிடபடாமல் இருக்க, இந்த நேரத்தில், சன் பிக்சர்ஸின் வெளியீட்டில் வந்திருக்கும் வழக்கமான படம் தான் மாசிலாமணி.

ஹீரோ ஒரு லோகிளாஸ் காலனியில் இருப்பவன், காலேஜ் மாணவனாம், அந்த காலனியே அவனை பாட்ஷா ரேஞ்சுக்கு மதிக்கிறதாம் அவர்களின் பிரச்சனைக்காக போராட்டம் நடத்தும் அவன் சுனைனாவை கண்டதும் காதலிக்கிரான், அவளின் பார்வையில் இவன் செய்யும் விஷயங்கள் எல்லாம் ரவுடியாய் தெரிய வர,  அவனை வெறுக்கிறார் சுனைனா.. சுனைனாவை மணக்க, அவரின் வீட்டிற்கு மணி என்கிற பெயரில் சென்று அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாருடைய அன்பையும் வென்று, சுனைனாவின் காதலை வெல்கிறான் மணி என்கிற மாசி என்கிற மாசிலாமணி.  இதற்கு நடுவில் ஒரு வில்லன் போலீஸ் ரூபத்தில் வர,  அவனிடம் முடிஞ்சா நான் மணியா, இல்ல மாசியா புருவ் பண்ணிக்கன்னு சவால் வேற, க்ளைமாக்ஸூல சுனைனாவுக்கு மணியும், மாசியும் ஒண்ணுதான் தெரிஞ்சிச்சா, அவங்க காதல் என்னாவாச்சுங்கிறதுதான் கதை.

masilamani-movie-photos-01

சொல்லும் போது அட பரவாயில்லையேன்னு நினைப்போம் ஆனா படம் முழுசா பாக்க முடியல . பல படங்களில் பார்த்த அரத பழசான சீன்கள், காமெடி பண்ணுகிறேன். நம்மை கிச்சு, கிச்சு, கூட மூட்டாத காட்சிகள் என்று நோகடிக்கிறார்கள்.

நகுல் நடிக்கிறேன் பேர்வழி என்று குஷ்டம் வந்தவன் போல் கையை வாயின் அருகில வைத்து கொண்டு அழும் காட்சிகள் கோரம்.  முகத்தில் எக்ஸ்ப்ரெஷன் என்பது கிலோ என்ன விலை என்று கேட்பார் போலிருக்கு. அதிலும் அவர் பேசும் தமிழ்.. என்ன கொடுமைடா சாமீ..

masilamani-movie-photos-09

சுனைனா.. ரொம்ப சொன்னைண்னா.. சப்பி போட்ட மாங்கொட்டை போல இருக்கிறார். முன் பல் வேறு தனியா தெரியுதா..?  டாம் அண்ட் ஜெரி, ஜெர்ரி எலி ஞாபகம் வருது.  க்ளைமாக்ஸுல அவர் பேசுற நீண்ட வசன் காட்சியில் என்னா உணர்ச்சி, என்னா ஒரு ஆக்ஸன்..?

காமெடி என்கிற பெயரில் சந்தானம், அண்ட் கோ வழக்கம் போல் சந்தானம் பேசிக் கொண்டே இருக்கிறார். ப்ரேமில் அவர் இல்லாவிட்டாலும் டப்பிங்கில் வாய் ஓவர்லாப்பிலேயே பேசி கொண்டிருக்கிறார். சொல்லி கொள்ளும் படியாய் இருக்கும் ஒரே நல்ல காமெடி ட்ராக் எம்.எஸ். பாஸ்கரின் ட்ராக்தான்  தனியொரு மனிதராய் காமெடி செய்திருக்கிறார். கூட கருணாஸ் வந்தாலும் அவரும் தன் பாட்டுக்கு பேசி கொண்டேயிருக்கிறார்.

masilamani-movie-photos-08

கேமராவை அங்கும் இங்கும், ஆட்ட்டியபடி படமெடுத்தால் பரபரப்பான காட்சியை காட்டுகிறோம் என்று இவருக்கு யார் சொல்லி கொடுத்தது. அவன் தலையில் இடிவிழ. கண்ணெல்லாம் வலிக்குது.

இமானின் இசையில் “டோரா..டோரா” பாடல் நன்றாகயிருக்கிறது. கவிதை குண்டர்  பாடிய ஓடி விளையாடு பாடல் பெரிய லெட் டவுன்.

R.N.R. மனோகர் நிறைய டிவி சீரியல்களில், திரைக்கதை வசனம் எழுதியவர். இன்னமும் டிவி சீரியல் மூடிலிருந்து வரவேயில்லை. மாசி, மணி குழப்பத்தை கிரேசிமோகன் அடித்து துவைத்து காயவைத்து பல வருஷங்கள் ஆகிவிட்டது. காமெடி என்கிற பெயரில் டெல்லி கணேஷ் வீட்டில்  அவர் அமைத்திருக்கும் காட்சிகள் பக்கா டிவி சீரியல். சின்ன குழந்தை கூட சொல்லிவிடும்  அடுத்த காட்சி என்ன வென்று, அவ்வளவு அமெச்சூரான ஐடியாக்கள். மாசியை மணியில்லை என்று நிருபிப்பதற்காக அவரின் அக்கா பெண்ணின்  மீது போலீஸ் ஜீப் ஏற்றி ஆஸ்பிட்டல் கொண்டு வருவதெல்லாம் ரொம்பவே ஒவர். அந்த காட்சியில் மட்டும் வரும் டிவிஸ்ட் ஓகே. masilamani-movie-photos-07

ஆனால் அநியாயமாய்  அந்த காலனியில் யாராவது  ஒண்ணுக்கு போவதானாலும் கூட மாசியை கேட்டு தான் போவது போல வைத்திருக்க்கும் ஹீரோ பில்டப் காட்சிகள் அநியாயம். க்ளைமாக்ஸ் காட்சியில் மாசி  இறந்துவிட்டதாக பொணமாய் படுத்திருப்பதும், ஊரே நடிப்பதும் போன்ற தெலுங்கு படங்களை தூக்கி சாப்பிடும் காட்சிகள். முடியல.  சுனைனா பேசும் வசனங்கள் அதைவிட  பழசிலும் பழசு அரத பழசு.

மாசிலாமணி  -  என்னத்தை சொல்ல. வழக்கம் போல சன் டிவிக்கு மட்டும் சூப்பர் ஹிட் .

Jun 12, 2009

Dasvidaniya - Hindi Film Review


தாஸ்விதானியா என்றால் மிக சிறந்த வழியனுப்புதல் ஆங்கிலத்தில் The best ever good bye என்று பொருள். இந்த படத்தின் நாயகன் விநய்பத்க்குக்கு மீண்டும் தன்னை நிருபிப்பதற்கான படம்.

அமர்கவுல் என்கிற திருமணமாகாத 37 வயது இளைஞனின் கதை. மிக சாதாரணன், இவனைபோல நாம் பலரை சந்தித்திருந்தாலும் மறந்திருபோம்.. அப்படிபட்ட சாதாரணன். தினமும் தான் செய்ய வேண்டிய காரியங்களை Thinks to do என்று பட்டியலிட்டு வாழ்பவன். அவனுக்கு stomach cancer வ்ந்து இன்னும் மூன்று மாதங்களில் அவன் இறந்து போவான் என்றவுடன் எப்படியிருக்கும். ஆடிப்போய் இருக்கும் அவன் என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் செய்யவேண்டிய பழைய வேலைகளை பட்டியலிட, அவனுடய் மனசாட்சி வ்ந்து அவனை திட்டுகிறது. இது நாள் வரை எந்தவிதமான் ஆசைகளையும் பூர்த்தியடையாமல் வாழ்ந்து என்ன கண்டாய்..? இனி இருக்கும் நாட்களிலாவது வாழ்கையை வாழ்ந்து பார்.. ஆசை பட்டதையெல்லாம் அனுபவி என்கிறது.

அதன் படி அவன் ஓரு பட்டியலிடுகிறான் Things to do before I die என்று. புதிய கார், கிடார் வாசிக்க கற்பது, அம்மா, வெளிநாட்டு பயணம், நேகா.., ஆத்ம ந்ண்பன் ராஜூ, செக்ஸ்,பாஸூக்கு பாஸாய் இருப்பது என்று பத்து விதமான் ஆசைகளை அடைய விழைகிறான்.

ஓருவன் தன்னுடய் சாவை ஒப்பாரி வைக்காமல் கொஞ்சம் சர்ரியலிஸ்டிக் காமெடியுடன் இயல்பாய் தர முடியுமா..? என்று கேட்டால் இதோ.. தஸ்விதானியா.

விந்ய் பதக்கின் நடிப்புக்கு மீண்டும் ஓரு மைல்கல். மனுசன் சும்மா பிச்சி உதறியிருக்கார்.. அவருடய டயலாக் டெலிவரியும்,பாடி லேங்குவேஜூம் பகுத் அச்சா ஹே.. அதிலும் அவருடய் முன்னால் காதலியிடம் தன் காதலை எப்படியாவது சொல்ல ’டம் சராப்ஸ்’ விளையாட்டு மூலம் அவர் வெளிப்படுத்தும் இடம் சிம்பிளி சூப்பர்ப்.. காதலி நேகா தன் பங்குக்கு நன்றாகவே நடித்துள்ளார்.


அதன் பிற்கு வரும் ரஷ்ய காதலி.. ஓரு காட்சியிலும் அவள் பேசும் பேச்சுக்கு சப்டைட்டில் போடாமலேயே அவர் பேசுவது நமக்கு புரிகிறது.. அது சரி காதலுக்கும், காமத்துக்கும் பாஷை ஏது..

ராப் ரையினரின் “த பக்கெட் லிஸ்ட்” , மற்றும் வெயின் வாங்ஸின் “லாஸ்ட் ஹாலிடே”யை ஞாபகபடுத்தினாலும் இயக்குனர் சஷான்ந்த் ஷா பாராட்டபட வேண்டியவர்.
மேலும் படத்தை பற்றி நிறைய சொன்னால் படத்தை ரசிக்க முடியாது..

அதனால் டிவிடியிலோ.. ஏதாவது ஹிந்தி சேனலிலோ.. கண்டு மகிழ்க...

DASVIDANIYA




நிதர்சன கதைகள் -9- மகாநதியை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jun 11, 2009

மீண்டும் “ நம்ம” விஷயம் ஜெயா ப்ள்சில் மாலை 5 மணிக்கு


காலையில் ஜெயா டிவியில் லைவ்வாக நடந்த ப்ளாக் பற்றிய நேரலை நிகழ்ச்சியை இன்று மாலை 5மணி முதல் 6 மணி வரை ஜெயா ப்ளசில் மறு ஒளிபரப்பு செய்கிறார்கள். நம்ம வாசக, பதிவுலக நண்பர்கள் அனைவரும் கண்டு, களியுங்கள்

ஜெயாடிவியில் ”நம்ம” பத்தி..

3

மறக்காம பாருங்க.. பேசுங்க.. நண்பர்களே..

டிஸ்கி:

இந்த பதிவுக்கான மேற்படி டிசைனை உடனுக்குடன் அமைத்து கொடுத்த இனிய நண்பர் சுகுமார் சுவாமிநாதனுக்கு  நன்றிகள் பல.

Technorati Tags: ,,




சுந்தர் கடை சிறுகதையை படிக்க..



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jun 10, 2009

சுந்தர் கடை.

Fast_food__by_nikuyakun

நேரில் பல முறை பொதுவில் சந்தித்திருந்தாலும், அன்றுதான் அவரின் வீட்டில் சாவகாசமாய் உட்கார்ந்து ஒரு நைண்டியை அடித்துவிட்டு பேச சந்தர்ப்பம் கிடைத்தது. பழகுவதற்கு மிக இனிமையான நண்பர். பேச்சு எங்கள் தொழிலில் ஒன்றான சினிமாவில் ஆரம்பித்து பல இடங்களில் பயணித்து அடித்த நைண்டி, ஒன் எயிட்டியாய் போனதால் பசியில் வந்திறங்கியது. பக்கதிலிருக்கு ஓட்டலில் சாப்பிடப் போகலாம் என்று என் பைக்கிலேயே சென்று அந்த ஹோட்டலை அடைந்து உள்ளே நுழைந்த போது சர்வர் ஒருவன் எங்களுக்கு வணக்கம், வணக்கம் என்று இரண்டு முறை சொன்னான். எங்களுக்குள் “என்னா இவன் இவ்வளவு தரம் வணக்கம் சொல்றான்.பின்னாடி வைக்க போற டிப்ஸுக்கு இப்பவே அடி போடறானு நினைச்சுகிட்டு, ஆளுக்கு ரெண்டுரண்டு பரோட்டாவும், முட்டை குருமாவும், ஆர்டர் பண்ணிவிட்டு அவருடன் பேச எத்தனித்த போது,

“இன்னமும் அதேதானா..?” என்று சர்வர் என்னை பார்த்து கேட்க, அது சுந்தரின் குரலாயிருந்தது.. ஆம் அந்த சர்வர் சுந்தர்தான். பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. மீசை மழித்து, தலை நரைத்து,  இளமையை இழந்திருந்தான். சுந்தர் ஒரு பத்து வருடஙக்ளுக்கு முன் பாண்டிபஜாரில் வேன் வண்டியில் வைத்து டிபன் கடை நடத்திய ஒரு கடையில் சர்வர்.

நான் வழக்கமாய் இரவுகளில் அந்த கடையில் சுவை முன்பின் இருந்தாலும்  சுந்தருக்காகவே சாப்பிடுவேன்.  அந்த கடைக்கு வேறு பெயர் இருந்தாலும் சுந்தர் கடை என்றே சொல்லி பழக்கமாகிவிட்ட அளவுக்கு  சுந்தர் ரொம்ப் பிரபலம். பழகுவதற்கு இனிமையானவன். சுறுசுறுப்பானவன், சுந்தர் என்று கூப்பிட்டு கையை ஆட்டிவிட்டாலே நமக்கு வேண்டியதை கொண்டு வந்துவிடுவான். ஒவ்வொருவருடய டேஸ்ட் தெரிந்தவன். அவனுக்காகவே காத்திருந்து ஆர்டர் செய்துவிட்டு சாப்பிடும் கஸ்டமர்கள் பல பேர்.  அந்த இரவுகளில் பல குரல்களுக்கு கொஞ்சம் கூட முகத்தில் சோர்வை காட்டாமல் ப்ரைட்டாகவே இருப்பான்.

சில சமயம் காசில்லாமல் சாப்பிடும் பல பேருக்கு தன் டிப்ஸ் காசிலிருந்து  கொடுப்பதை பார்த்திருக்கிறேன்.

”தபாரூ. சுந்தர்.. நீ இந்த மாதிரி  ஒரு முறை கொடுத்தேன்னா அப்புறம் தினமும் அதே கதையாயிரும்.” என்றபோது,

“இன்னைக்கு அவன் நிலைம சரியில்ல, வந்திட்டான். முகத்த பார்த்தா தெரியல தெனம் ஏமாத்தி துன்றவனுக்கும், இவனுக்கும்.” என்று சொல்விட்டு தூரத்தில் காரிலிருந்து வநத அழைப்புக்கு ஓடுவான்.

அவனுடய கடையில் நன்றாக இல்லாத அயிட்டங்களை பக்கத்து கடையிலிருந்து கஸ்டமர்களுக்கு கொடுப்பான். :”சாப்பிடனும்னு ஆசைப்பட்டு வர்றாங்க.. பக்கத்தில கிடைக்குது வாங்கி கொடுத்தா என்ன கொறைஞ்சா போயிருவேன். ஆயிரம் ஆசை படலாம் , அது கிடைக்கலாம், கிடைகாம போவலாம் மனுசனுக்கு, வாயிக்கு ருசியா சாப்பிட ஆசைப்பட்டு காசிருந்தும் முடியலைன்னா அது கொடும சார்..  ஏதோ நம்மாள முடிஞ்சது. வாஙக் சுரேஷ் சார்..  உங்களுக்கு ரெண்டு இட்லி கார சட்னி தானே ? “ என்று புதிதாய் வந்த சுரேஷை பார்க்க ஓடுவான்.

எனக்கென்னவோ அவன் டெடிகேஷனை பார்க்கும் போது எதிர்காலத்தில் ஒரு சின்ன ஓட்டலுக்காகவாவது  முதலாளியாய் வருவான் என்று தோன்றியது. ஒரு நாள் திடீரென்று கார்பரேஷன் எல்லா கையேந்திபவன்களையும் காலி செய்துவிட, பின்பு அவனை பார்க்க முடியவில்லை.

அதே கால கட்டத்தில் என் நண்பரும் அதே கடையில் சுந்தரின் கஸ்டமர். அவருக்கும் நான் சொன்ன அதே கவனிப்புதான். இருவருக்கும் ஒரு சேர அவனை ஞாபகம் வந்து ” என்ன சுந்தர் எப்படியிருக்க..?.”

“நல்லாருக்கேன் சார்..”

“நீ ஓட்டல் முதலாளீயா இருப்பேன்னு நினைச்சுட்டு இருந்தேன். சுந்தர். இங்க இப்படி மறுபடியும் சர்வரா சந்திப்பேன்னு நினைக்கல.” என்றேன் நான்.

“என்ன பண்றது சார்.. திடீர்னு கடைய மூடிட்டாங்க.. என்ன ஏதுன்னு புரியறதுக்கே ஒரு மாசம் ஆயிருச்சு. சரி வேற தொழிலுக்கு போவலான்னு பிளாஸ்டிக் டாய்ஸ் மார்கெட்டிங்க் பிஸினெஸ் பண்ணேன். அம்பது ரூபா கடனாகி போனதுதான் மிச்சம். அதிர்ச்சியில வீட்டிலேயே நொந்து போய் உட்கார்ந்திட்டேன். ஒரு நா என் பொண்ணு என்னாண்ட வந்து கேட்டுச்சு அப்பா எங்க ஸ்கூல உஙக் அப்பா என்ன வேலை செய்யறாருன்னு கேட்டாஙக.. நீஙக் வீட்டிலேயே உக்காந்திட்டு இருக்கீங்க.. என்னன்னு சொல்லன்னு கேட்டா.. சுரீர்னு குத்திச்சு.. நமக்கு தெரிஞ்ச வேலை சர்வர் வேலைன்னு  அதுக்கே வந்துட்டேன். பொண்ணு சந்தோசமாயிருச்சு. ஒரு வேளை நான் முயற்சி பண்ணியிருந்தா நீஙக் சொன்ன மாதிரி முதலாளி ஆயிருப்பேனோ என்னவோ அது எனக்கு தெரியல.. ஆனா இன்னைக்கு என்னை பார்த்ததும், எப்படீருக்க, நல்லாருக்கியான்னு கேட்டீங்க பாருங்க அதுவே பெரிய சந்தோஷம் சார்:” என்று சொல்லியபடி, : ஸ்பெஷல் கிரேவி ஏதுனா வேணுமாசார்.” என்று கேட்டு என் பதிலை எதிர்பார்காமல் எடுத்து வர போனான். அதுதான் சுந்தர்.

”நானும் பல வருசம் சுந்தர் கையினால  சாப்டிருக்கேன். இத்தனை வருசம் கழிச்சு கூட ஞாபகம் வச்சிருக்கான் பாருஙக். நீஙக் சொல்றா மாதிரி தெரியாத தொழில் செஞ்சி திரும்பவும் சர்கிளுக்கே வந்திட்டான் போலிருக்கு” என்றார் என் நண்பர்.

”ஆமா அண்ணே. நீஙக் சொல்றது சரிதான். என்னால இவனை திரும்பவும் சர்வரா பாக்கிறத ஜீரணிக்க முடியல். நிச்சயமா ஒரு முதலாளியாவறதுக்கு எல்லா தகுதியும் உள்ளவன். அவனுக்கு தெரியல அவன் பலம். தப்பாயிருச்சு.” என்று  சொல்லியபடி தண்ணீரை எடுத்து குடிக்க போக, நண்பர் அப்போது கிரேவி கொடுக்க வந்த சுந்தரிடம்

“சுந்தர். பில்ட்ர் வாட்டர்தானே.. இல்லாட்டி பாட்டில் வாங்கிரட்டுமா..?” என்று கேட்க,

“சார். சுத்தமான பில்டர் வாட்டர் சார். ஒரு க்ளாஸுக்கு பதினைஞ்சு பைசா செலவாவுது. தைரியமா சாப்பிடலாம்”  என்றவனை நானும், என் நண்பரும் ஒரு சேர அவனை பார்த்து சிரித்தபடி, ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டோம், “ நீஙக் சொன்னது கரெட்டுண்ணே. இவன் முதலாளி ஆகவேண்டியவன் தான்”  என்றார். மனசுக்குள் அவன் ஆயிருவான் என்றே தோன்றியது

Technorati Tags:

Jun 9, 2009

குளிர் 100 - திரைவிமர்சனம்

kulir_100_degree_tamil_mp3_songs

நீங்கள் அதிகம் கேள்வி கேட்காதவரா..? பார்த்த வரை  Interesting  ஆக  இருந்தால் ஓகே என்று நினைப்பவரா..? அப்படியென்றால் குளிர்100 படத்திற்கு செல்லவும். ,Logic, அது இது என்று பேசுபவராய் இருந்தால் வேறு வேலை பார்த்து கொள்ளவும்.

அப்பன் ஒரு ரவுடி என்பதால் அவனிடமிருந்து பிரிந்து தன் மகனை ஒரு நல்லவனாய் வளர்க்க பாடு ப்டும் தாய். அப்பன் ரவுடிதனத்தை  அப்படியே உரித்து வைத்து தவறு செய்த ஆசிரியரை அடித்து கொல்ல துடிக்கும், பதினோராம் வகுப்பு படிக்கும் மகன், மகனை தன்னுடனே வைத்து கொள்ள துடிக்கும் தந்தை. இங்கிருந்தால் பையன் கெட்டு விடுவான் என்று ஒரு ரெசிடென்ஸியல் ஸ்கூலில் அவனை சேர்க்கிறாள். அவன் அங்கு போய் கோபப்படக்கூடாது, எந்த விதமான சண்டை சச்சரவுகளீலும் ஈடுபட கூடாது என்று சொல்லி அப்படி போனால் தன்னை உயிரோடு பார்க்க முடியாது என்பதை சொன்னதால், போய் சேர்ந்த் ஸ்கூலில் நடக்கும், ரேகிங் அநியாயங்கள் அனைத்துக்கும் கடைசி வரை பொறுமை காக்கிறான். ஒரு கட்டத்தில் தன் நண்பனையே அவர்கள் கொன்றது அவனுக்கு தெரிய வர,  என்ன என்பது தான் க்ளைமாக்ஸ்.

Kulir 100 Photos_  (6)

Teen Age  ஹீரோ சூரியாவாக வரும் சஞ்சீவ், சரியாய் Suit ஆகிறார். நடிக்கவும் செய்கிறார். கதாநாயகியாய் வரும் ரியா பூங்கொடியை பற்றி ஒன்றும் சொல்லமுடியலை. ஏன்  தமிழ் ச்னிமா ஹீரோயின் எல்லாம் லூசாகவே சித்தரிக்க படுகிறார்கள்? அதிலும் இதில் லூசு தனத்தின் உச்சம்.  சூரியாவின் நண்பனாய் வரும் குண்டு பையன் BOBO SASI முதலில், பார்பதற்கு கொஞ்சம் Irritating  ஆக  இருந்தாலும், போகப் போக தன் Oneliner Dialougeகினால்  நம்  மனதை ஆக்கிரமிக்கிறார். வில்லனாக வரும் நண்பர்கள் பற்றி குறையொன்ருமில்லை.

kulir-100-degree-_22_

படத்தில் பாராட்ட பட வேண்டிய இருவர் Cameraman, Music Director தான்.  தியேட்டருக்கு மக்களை கூட்டி வந்தவர் இசையமைப்பாளர். நம்மை உட்கார வைத்தவர் கேமராமேன்.. படத்தில் நடித்தும், இசையமைத்தும், தன்னை படம்  பூராவும் நிறைத்திருக்கிறார்  BOBOSASI  மனசெல்லாம், HIPHOP, பாடல்கள் Youthfull. நல்ல அருமையான  டாப் ஆங்கிள் ஷாட்டுகள், பசுமையான பிண்ணனி, இயல்பான லைட்டிங்  என்று பின்னி எடுத்திருக்கிறார் 
Kulir 100 Photos_

இயக்குனர் அனிதா பார்த்த இங்கிலிஷ் படத்தில் வரும் அமெரிக்க ரெஷிடென்ஷியல் ஸ்கூலில் நடந்த  விஷயங்களை அப்படியே தமிழ் படுத்தியிருக்கிறார். அதனால் எங்கே இந்த மாதிரி ஸ்கூல் இருக்கிறது. இப்பெடியெல்லாம் நடக்குமா என்ற கேள்வி படம் ஓடும் இரண்டு மணி நேரமும் வந்து கொண்டேயிருபதை மறுக்க முடியாது. அதையும் மீறி ஓரளவுக்கு Interesting திரைக்கதையினால் தப்பிக்கிறார். டீன் ஏஜ் பையன் ஒருவன் மூன்று கொலைகள் செய்வதை சர்வ சாதாரணமாய் காட்டி ஏற்று கொள்வதாயிருக்காது என்று அதற்கு ஒரு  Peotic Justice  கொடுக்க முயன்றிருக்கிறார். ஆங்காங்கே தமிழ் பட அம்மா Sentimentஐ உள்ளே நுழைக்க முயற்சித்து  படத்திற்கு மேலும் காமெடியை கூட்டுகிறார். Multiplex ஆடியன்ஸை குறிவைத்து எடுத்திருக்கிறார் Mayajaal Owner பொண்ணு.

குளிர் 100 -  Slightly Suffocating…

டிஸ்கி

இந்த படத்திற்கு இளைஞர்கள் படையெடுத்து வந்திருந்தார்கள். நேற்று சத்யம், ஐநாக்ஸ் ஆகிய இரண்டு தியேட்டர்களிலும் ஹவுஸ்புல்..  வந்திருந்த யூத்கள் வரும் காமெடி காட்சிகளுக்கு சிரித்த்தும், போபோ சாகும் போது உச் கொட்டியதும், இதையெல்லாம் பார்க்கும்போது, எங்களை போன்ற ஹிப்ஹாப் யூத்துகளுக்கு  பிடித்திருக்கிறது என்றே தோன்றுகிறது.
நடுநடுவே Englishஷில் எழுதியதற்கான காரணம் புரியாதவர்கள் யூத்தில்லை.:)

Jun 8, 2009

கொத்து பரோட்டா – 08/06/09

பகிர்வு

வர வியாழக்கிழமை எனக்கு ரொம்ப முக்கியமான நாளா இருக்கும்னு நினைக்கிறேன். ஒன்ணு நான் எழுதின ஒரு சிறுகதை ( ஒரு பக்க சிறுகதை இல்லை) விகடன்ல வரபோவுதாம், ரெண்டாவது அன்னைக்கு மத்யானம் ஜெயாடிவில ஒரு லைவ் நிகழ்ச்சியில ப்ளாக் பத்தி ஒரு புரோக்ராம் மத்யானம் 12 மணிக்கு வர போவுது. ரொம்ப நாள் கழிச்சு கேமரா முன்னால நிக்க போறேன். ஒரு சந்தோஷபகிர்வு தான் நண்பர்களே.

*************************************************************************
சந்திப்பு

'உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்'பின் சார்பாக நமக்கு நாமே ஆரம்பித்துள்ள திரைப்பட இயக்கம் மூலமாய் நேற்று “ஸ்பிரிங், சம்மர், பால், விண்டர்... அண்ட் ஸ்பிரிங்” என்கிற கொரிய திரைப்படம் திரையிடப்பட்டது.  கிம்.கி.டுக் இயக்கிய இந்த படம் உலக அளவில் மிகவும் பெரிய வரவேற்ப்பை பெற்ற படம். நேற்று வந்திருந்த சுமார் ஐம்பது பதிவர்களும், படம் பார்த்துவிட்டு வார்த்தைகளால் எதுவும் சொல்லி, சூப்பர், அட்டகாசம், அருமை என்று பாராட்ட  முடியாத நிலையில் படம் ஏற்படுத்திய  தாக்கம் அவர்களிடையே தெரிந்தது. நர்சிம் என்னிடம வந்து

‘தலைவா.. நீஙக் இந்த மாதிரி படமெடுப்பீங்களா..? என்று கேட்டார்.

“எடுக்க மாட்டேன். ஏன்னா இந்த படம் ஒரு பெயிலியர் படம். நான் ஓடுற படம் தான் எடுப்பேன்” என்றேன் 

உண்மைதான் பதிவர்களே.. உலகமே கொண்டாடுகிற இந்த இயக்குனரின் படங்கள் கொரியாவில் ரெண்டு நாளோ,  ஒரு வாரமோ தான் ஓடும்.

இந்த திரையிடலுக்கு ஹால், ஒளி, ஒலி சாதனங்களை வழங்கி, மற்றும எல்லாவிதமான உதவிகளும் அளித்த கிழக்கு பதிப்பகம் பத்ரிக்கு நன்றிகள் பல.

**************************************************************************
காதுக்கினிமை
குளிர் 100 என்கிற படத்தின் பாடல்கள் கேட்டேன் புதிய இசையமைப்பாளர் பூபூசாசே என்கிற இளைஞர் இசையமைத்திருக்கிறார். அவரின் இளமை ”ஹிப் ஹாப் பாடலில் தெரிகிறது. மனசெல்லாம் என்கிற பாடல், மெல்ல  கொல்லும் பாடல்,

மாயாண்டி குடும்பத்தார் படத்தில் வரும்  கருவாச்சி பாடல் சீக்கிரமே முணுமுணுக்கிற பாடலாய் ஆகும் என்கிற அறிகுறி தெரிகிறது.

மாசிலாமணி படத்தில் ‘டோரா,, டோரா” பாடலும் ஹிட்லிஸ்டில் இருக்கிறது.

மாஸ்கோவின் காவேரி படத்தில் “கோரே. . கொக்கோரே “ என்ற பாடலும் ஹிட்ஸிஸ்டில் வரும்.  படத்தின் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன்.. பாய்ஸ் படத்தில் குண்டு டிரம்மராய் வந்தவர்தான். இவர் ஏற்கனவே இசையமைத்த தெலுங்கு கிக் படம் பாடல்கள் ஹிட்.
****************************************************************
இன்பர்மேஷன்
வேளச்சேரி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு கடையின் பெயர் “SPERM”  எதற்காக இந்த பெயர் என்று கேட்ட போது கடை ஓனர் சொன்னார். “இது ஆண்களுக்கான உடைகள் விற்கும் கடை அதனால்தான் என்றார். எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கப்பா..
**************************************************************************
ஏஜோக்

செக்ஸ் தெரப்பிஸ்ட்டிடன் சென்ற ஒரு பெண் தன்னை திருப்தி செய்யக்கூடிய ஒரு ஆணை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது. என்றும், இதற்காக தேடி தேடி நொந்து போய்விட்டதாவும், வெளியிலிருந்து பார்த்தாலே ஒரு ஆணின் ”லுல்லா”வின் அளவை கண்டு பிடிக்க முடியுமா என்று கேட்க, தெரபிஸ்ட் ஆணின் கால் பாதங்களை பாருங்கள். அது பெரிசாய் இருந்தால் எல்லாமே பெரிசா இருக்கும் என்று சொன்னார்.

அன்று முதல் அந்த பெண் தெருவில் போகும் போது எல்லாம் கால்களையே பார்த்து கொண்டு போக, ஒரு நாள் மிகப்பெரிய பாதத்துடன் ஒருவனை பார்க்க, அவனுடன் பழகி, அன்றைய இரவை அவனுடன் கழித்தாள். காலையில் எழுந்து பார்த்த இளைஞன் பக்கத்தில் அந்த பெண் எழுதியிருந்த  ஒரு லெட்டரை கண்டான். அதில் “ இத்துடன் ஆயிரம் ரூபாய்க்கான செக் இருக்கிறது, தயவு செய்து உன் காலுக்கு ஏற்ற  சரியான சைஸ் ஷூவை வாங்கி மாட்டிக் கொள்ளவும் என்று எழுதியிருந்தது.





நிதர்சன கதைகள் -9- மகாநதியை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jun 6, 2009

மாயாண்டி குடும்பத்தார் - திரைவிமர்சனம்

mayandi

தமிழ் சினிமாவில் திடீர்ரென்று ஏதாவது அதிரடியாய் செய்வார்கள். அப்படி இந்த படத்தில் பத்து இயக்குனர்களை நடிக்க வைத்டிருக்கிறார்கள். அதை தவிர ஏதும் புதுமையா எதுவுமில்லை என்றுதான் சொல்லவேண்டும். இப்படத்தில் நடித்த ஒரு சில இயக்குனர்கள் இயக்கத்தை விட்டு நடிப்பதையே தொழிலாய் கொண்டு ரொம்ப நாளாகிவிட்டவர்கள்.

மாயாண்டியான மணிவண்ணனின் குடும்பத்தில் பொன்வண்ணன், சீமான், ஜெகன்நாத்,  கடைகுட்டி தருண்கோபி, அக்கா, அக்கா கணவராய் ராஜ்கபூர், இன்னொரு பக்கம், மணிவண்ணனின் அண்ணனான ஜி.எம்.குமார், அவரது நான்கு மகன்கள், ரவிமரியா, நந்தா பெரியசாமி, சிங்கம்புலி. இருவர் குடும்பத்திற்கும், சொத்து தகராறு அதனால் பகை. ஆனால் இதுதான் கதை என்று நினைதால் அதுதான் இல்லை.

மாயாண்டி இறந்ததும் கடைகுட்டி தருண் கோபியை எல்லோரும் கைகழுவி விடுவதும், சொத்துக்களை பிரித்து கொண்டு வாழ்வதும்,  பின்னால் குடும்பத்துக்காக, எல்லா வலிகளையும் தாங்கிக் கொண்டு, எல்லாரையும் சேர்ப்பதும், இதற்கு நடுவில் தருணின் காதல், படிப்பு என்று ஒரு ட்ராக். போய் இரண்டு குடும்பமும் ஒன்றாய் சேர்கிறதா..? என்று ஒரு டிராக் கதை ஓடுகிறது.

நடிப்பதில் இயக்குனர்கள் மணிவண்ணனும்,  லூசு பையனாய் வரும் சிங்கம்புலி, ஜெகன்,  ஸ்கோர் செய்கிறார்கள்.  சிங்கம் புலி அவர் அப்பாவின் ஒவ்வொரு பொருளை கேட்கும் போதும் “:நீ செத்தா இது எனக்குதானே “ என்று கேட்பதும், ஐஸ் வாங்கி கொடுத்ததுக்காக,  இரண்டு குடும்பத்துக்கும் ஒரு பெரிய சண்டை நடக்க, தூரத்தில் ஐசை சப்பியபடி, “ஏன்டா ஐஸுக்காக சண்டை போடறீஙக். கேட்டா வாங்கி தராமாட்டாரு சித்தப்பா என்பதும்,  எப்படி குழந்தை பொறக்குது என்று கேட்டபடி அலைவதும் செம காமெடி, இவரும் , மயில்சாமியும் இல்லையென்றால் நொந்து போயிருபோம். சீமான் விவசாய போராட்டம் நடத்துபவராக வருகிறார். ஒரு பாட்டை பாடிவிட்டு ரெண்டு சீனுக்கு ஒரு முறை டயலாக் பேசிவிட்டு போகிறார். பொன்வண்ணனுக்கு ஒண்ணும் சொல்லி கொள்ளும்படியாய் இல்லை., ஜெகன் இயல்பான கேரக்டர்.  பழைய பாடல்களை போட்டு எதிர் கடை செவிட்டு பெண்ணை கரைக்க டிரை பண்ணுவதும், அது தோல்வியாவதும், இயல்பான நகைச்சுவை.  தருண் கோபி  எப்ப பார்த்தாலும் இடுங்கிய கண்களுடன் எந்த விதமான எக்ஸ்பிரஷனும் இல்லாமல் நடிக்கிறார். நடிப்பது எவ்வளவு கஷ்டமென்று புரிந்திருக்கும்.  அவரது காதலியாய் தமிழரசி.. வழக்கமான கிராமத்து பெண்.

படத்தில் தருண் காலேஜில் சேர வேண்டும் என்று போகிறார். ஆனால் என்ன காலேஜ் என்று தெரியவேயில்லை. ஒரு காட்சியில் கதாநாயகி சொல்லும் போதுதான் அவர் இஞ்சினியருக்கு படிக்கிறார் என்று தெரிகிறது. மூன்றே காட்சிகளில் இஞ்சினியருக்கு படித்து, காம்பெஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகி வேலைக்கு சேர்ந்துவிடுகிறார் கொடுத்டு வைத்தவர். எல்லோரும் சொல்லி வைத்தார் போல் ஒரு சீன் முடிந்து அடுத்த சீனில் திருந்தி விடுகிறார்கள். நந்தா பெரியசாமி, ரவிமரியா எல்லாம் யாரென்று தெரியாதவர்களுக்கு ஜூனியர் ஆர்டிஸ்ட் கேட்டகிரிதான்.

இயக்குனருக்கு வழக்கம் போல லைவ் மேக்கிங் வியாதி, அதனால் திருவிழா, குடித்துவிட்டு ஆடுவது என்ற எல்லா சிம்டம்ஸும் படத்தில் தெரிகிறது. பழைய திரைபாடல்களை படம் பூராவும் உபயோகபடுத்தியிருக்கும் விதம் ரசிக்கும்விதமாய் இருக்கிறது.  ஆங்காங்கே சில வசனங்கள் ந்ன்றாய் இருக்க, பல இடங்களில் வள, வள,  சில இடஙக்ளில் கண் கலங்க வைக்க முயற்சி செய்ததில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.  தருணின் காதல், தோல்வி, அதற்கான காரணம் எல்லாம் சரியாய் ரிஜிஸ்டர் ஆகவேயில்லை க்ளைமாக்ஸ் காட்சியில் எல்லோரு சொடக்கு போடும் நேரத்தில் மாறுவது சினிமா.

சபேஷ் முரளியின் இசையில் ஒரு டூயட் பரவாயில்லை. ஒளிப்பதிவும் ஓகே

மாயாண்டி குடும்பத்தார் – ஆம்பளை மெகா சீரியல்




நிதர்சன கதைகள் -9- மகாநதியை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jun 5, 2009

Prayanam - Telugu Film Review

202 பாலோயர்களுக்கும், மேலும் தொடர்பவர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி..

ரெண்டு மணி நேரத்தில் ஒரு பெண்ணை காதலிக்க முடியுமா..? முடியும் என்று ஒருவன் முயற்சி செய்கிறான். அந்த பெண் அவனை காதலித்தாளா..? இல்லையா..? என்பதுதான் கதை. அருமையான நாட். முடிந்தவரை இயல்பான திரைக்கதையில் சொல்ல முயற்சித்திருக்கிறார் அய்தே, அனகோகுண்டா ஒக்க ரோஜூ, ஒக்கடுண்ணாடு இயக்குனர் சந்திர சேகர யேலெண்டி.

துருவ் உலக சுற்றுலாவுக்காக மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல மலேசிய ஏர்போர்ட்டில் அவன் நண்பர்களுடன் வருகிறான். அதே ஏர்போர்ட்டில் ஹரிகா ம்லேசியாவில் படித்த தெலுகு பெண் தனக்கு மாப்பிள்ளை பார்க்க, தன் தோழியுடன் இந்தியாவுக்கு செல்கிறார். துருவுக்கு ஹரிகாவை பார்த்தவுடன் காதல் பற்றி கொள்ள, அவர்களுக்குள் இரண்டு மணி நேர இடைவெளியே உள்ளது. துருவ் அவளை அந்த இரண்டு மணி நேரத்தில் இம்ப்ரஸ் செய்ய படும் அவஸ்தையை அருமையாக சொல்லியிருக்கிறார்கள்.

துருவுடன் வரும் 7அப் மாடல் நண்பன் இரண்டு மணிநேரத்தை ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு ப்ளான் சொல்லி ஷெடியூல் போட்டு கொடுப்பதாகட்டும், ஹரிகாவின் தோழியிடம் அவர் பயப்பட்டு அவரிடமிருந்து தப்பிக்க அவர் படும் பாடாகட்டும் நல்ல நகைச்சுவை. அதே போல் துருவுடய இன்னொரு நண்பர் ஒரு நீக்ரோ குழந்தையிடமிருந்து சாக்லெட்டை எடுத்து காண்பிக்க, துருவ் அவனுக்கு கொடுத்தது என்று எண்ணி அதை சாப்பிட்டு விட, கருப்பன் அவரை துரத்தோ துரத்தென்று துரத்துவதும், அங்கே வரும் பிரம்மானந்தத்தை அவரின் நண்பர் என்று நினைத்து அவரை படத்தின் கடைசி வரை துறத்துவதும், சினிமா கதை சொல்கிறேன் என்று துப்பாக்கி, பாம், தீவிரவாதி என்று பேசி ஏர்போர்ட் போலீஸிடம் மாட்டும் கொண்டு அவஸ்த்தைபடுவது , துருவும் அவரின் நண்பர்களும் பேசிக் கொள்ளும் ஒன்லைனர் என்று படம் பூராவும் தூவி விடப்பட்ட நகைச்சுவை.

துருவ்வாக மனோஜ், துறுதுறுவென இருக்கிறார். கன்னங்குழிய சிரிக்கிறார். இயல்பாய் நடிக்க முயற்சித்திருக்கிறார். ஹரிகாவாக வரும் பாயல் கோஷ், சுமாரான அழகுடன், அமைதியாய் வலம் வருகிறார். இன்னும் கொஞ்சம் அழகான பெண்ணாய் பிடித்திருக்கலாம். அவருடய பாடிகார்ட் போல வரும் அவரத் தோழி நல்ல இண்ட்ரஸ்டிங்கான கேரக்டர்.

மகேஷின் பிண்ணனி இசையும், காட்சிகளூடே வரும் பாடல்களும் ஓகே. சர்வேஷின் கேமரா குறை ஒன்றுமில்லை.

இம்மாதிரியான ஒரே இடத்தில் நகரும் திரைக்கதையில் தொய்வு விழாமல் கதை சொல்வது கஷ்டம்தான். சந்திரசேர யேலட்டியின் திரைக்கதை முதல் பாதியில் ஆங்காங்கே தொய்கிறது, இரண்டாவது பாதியில் சூடு பிடிக்கிறது. வாயால் ரோஜாப்பூவின் இதழை ஊதிக் கொண்டே போக, நடுவில் கதாநாயகியை நுழைத்து அவர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகள் கவிதை. அதே போல் உண்மையான காதலை புரிந்து கொள்ள துருவின் நண்பன் நடத்தும் டெஸ்டில் துருவின் டயலாக்குகளை வீஷூவல் செய்திருக்கும் காட்சியும் அருமை. க்ளைமாக்ஸில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

பிரயாணம் – ஹைகிளாஸ் மல்டி ப்ளக்ஸுக்கு மட்டும்.

Technorati Tags: Telugu film review,Prayanam


நிதர்சன கதைகள் -9- மகாநதியை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jun 4, 2009

நிதர்சன கதைகள் –9- மகாநதி

202 பாலோயர்களுக்கும், மேலும் தொடர்பவர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி..

Reality_TV_by_DraculeaRiccy
பாக்யம்மாளுக்கு அழுகை அழுகையாய் வந்தது. ஒவ்வொரு முறையும் மகாநதி படத்தை பார்க்கும் போதெல்லாம் அழுது, அழுது  தலைவலி வருவது நிச்சயம். ஆனாலும் விடாமல் பார்பாள். அதிலும் முக்கியமாய் படத்தில் வரும் சோனாகாஞ்சி காட்சிகளை பார்த்தால் அவ்வளவுதான் .

கமலஹாசன் தன் பெண்ணை விபசார விடுதியில் பார்க்க, தன் தந்தையை பார்த்த மகள் தன் இரு கைகளையும் வைத்து தன்னை மறைத்து கொள்ள,  அதை பார்த்த பாக்யம்மாள்.. “அய்யோ.. தெவுடா.. தெவுடா..” என்று கண்களில் கண்ணீர் வர ஆரற்ற ஆரம்பித்தாள்.

படத்தில் கமலஹாசனை அங்கிருக்கும் பெண்கள் சூழ்ந்து கொண்டு அடிக்க, பூர்ணம் விஸ்வநாதன் தமிழில் அலறும் காட்சியை பார்தவுடன்..  அவளையும் அறியாமல் அந்த பெண்களை பச்சை, பச்சையாய் திட்டினாள். 

அவள் பார்த்து கொண்டிருந்த  சோனாகாஞ்சி காட்சிகளை பார்த்து. “தொங்கசச்சிநோடா..: என்று  நிஐ கோபத்துடன் திட்டிய போது வாசலில் காலிங் பெல் அடித்தது. எழுந்து போய் கதவை திறக்க, வாசலை அடைத்தபடி ஒரு திடகாத்திரன் புகைத்தபடி  நிற்க, அவன் உள்ளே வர  வழியை விட்டு, கதவை சாத்தியபடி,  திடகாத்திரனை பார்த்து

‘என்ன சாரூ.. ஆளையே காணம்..? எத்தினி வாட்டி போன் பண்ணாலும் எடுக்கிறதுல்ல..  சரி. உள்ள போங்க. அம்மா லஷ்மி கஸ்டமர் ஒச்சாரு சூட “ என்று அவ்னை அனுப்பி வைத்துவிட்டு டிவியை  பார்க்க ஆரம்பித்தாள்.





கொத்துபரோட்டா 15/05/09 ஐ படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jun 3, 2009

விடாதுகருப்பு…

p>இந்த தொடர் பதிவு கருப்பு என்னையும் விடவில்லை.. கொஞ்ச நாளைக்கு முன் அழைத்த அத்திரி, ரெண்டு நாளைக்கு முன் அழைத்த ஹாலிவுட் பாலா, நேற்று அழைத்த அக்னிபார்வை என்று அழைப்பு வந்த வண்ணம் இருந்ததால்  இந்த விடாது கருப்பு..
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

ஏதாவது வித்யாசமா பேர் வைக்கணும்னு நினைச்சுகிட்டேயிருந்தேன்  வழக்கமா என்னோட தொழிலையும் சேர்த்து கூப்பிடற நண்பர்கள் அந்த பேரே நல்லாருக்குன்னு சொல்ல அதையே வச்சிட்டேன். ஆரம்ப காலத்தில ஏதோ ஆட்டோ சங்கர் ரேஞ்சுக்கு நினைச்சுகிட்டு  நிறைய பேர் பயந்தாங்க.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
என்னுடய சித்தப்பாவுக்கு திடீர்னு ப்ள்ட் கேன்சர்னு தெரிஞ்சு ஒரு பதினைஞ்சு நாள்ல அவர் இறந்த அன்னைக்கு.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
திரும்ப படிக்க்கும் போது புரிஞ்சாத்தானே பிடிக்கிறதுக்கு. நல்ல வேளை நான் படிக்கிற காலத்துல நம்மளை பாஸ் போட்டு விட்டுட்டாங்க..

4).பிடித்த மதிய உணவு என்ன?

நல்ல வெங்காய வத்தக்குழம்பு, உருளை ரோஸ்ட்.பொரிச்ச அரிசி அப்பளம்.  நான்வெஜ்ஜில்.. அம்மா ஹோட்டல் மீல்ஸும், டிரம்ஸ்டிக் சிக்கனும்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா? 
எல்லாரோடையும் ரொம்ப் ஈஸியா ப்ரெண்ட்லி ஆயிடுவேன். நீங்க வேற யாருடனாவதுன்னு கேட்கறாத பார்த்தா விவகாரமா இருக்கும் போலருக்கு ( ஆங்.. அவனா..நீ) நான் அந்த மாதிரி ஆள் இல்லைங்க..

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடலில் குளிக்க பிடிக்கும் ஆனா உள்ளூக்குள்ள மண் போறதுதான் பிடிக்காது. அருவி குளியல் ரொமப் பிடிக்கும், அதிலும் குத்தாலத்துல ரூம் போட்டு சரக்கை அடிச்சிட்டு, நேரே அருவிக்கு கீழே நின்று அடிச்ச மப்பை இறக்கிட்டு, மறுக்கா ரூமுக்கு வந்து ஏத்திட்டு, இறக்கிற சுகம் இருக்கே.. ம்ஹூம் போய் பல் வருச்ம் ஆச்சு. யாராவது கூட்டிட்டு போறீங்களா..?

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
ஆணா.... பெண்ணா...?

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம்: ஒரு வேலை செய்ய ஆரம்பிச்சா.. அதை முடிக்கிற வரைக்கும், தூங்காம கூட வேலை பார்ப்பேன்.
பிடிக்காத விஷயம் :   அந்த வேலைக்கு ஒரு டார்கெட் வர்ற வரைக்கும் சும்மாவே சுத்தறது.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
என்னையும், என் தொழிலையும், புரிஞ்சிகிட்டு அதுக்கு ஏத்தாப்போல அட்ஜெஸ்ட் செஞ்சுக்கிறது.  பிடிக்காத விஷயம் : என்னை அவங்களுக்கு ஏத்தாப்போல அட்ஜெஸ்ட் செய்ய விடாம இருக்கிறது.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
ஊருக்கு போனா பொண்டாட்டி புள்ளைங்க பக்கத்தில இல்லாம இருக்கிறதுக்கு வருந்துவேன். ஊருக்கு வந்தவுடனே.. இருக்கிறதுக்கு வருந்துவேன் :)

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
தூத்தேறி.. என்ன கேள்விப்பா இது.. எழுத சொல்ல எதையாச்சும் போட்டுகினுதான் எளுதணுமா என்னா..? சரி.. நீ கேட்டுகினாங்காட்டியும் ச்ம்மாவாச்சும் சொல்றேன். பழுப்பு கலர் டவுசர்ன்னுகீறேன்னு வச்சுக்க..

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

ரஹ்மானின் மசக்களீ..
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு
14.பிடித்த மணம்?
பட்டாசு வெடிச்ச பின்னாடி வரும் வாசனை.  அதே போல் பெட்ரோல் வாசனை,  மல்லிப்பூ வாசனை, ஆக்ஸ் பாடி ஸ்ப்ரே வாசனை, அத்த போட்டா எல்லா பிகரும் பின்னாடியே வரும்னு சொன்னாங்க..  இதுவரைக்கும் நூறு டப்பா வாங்கியாச்சு.. மளிகைகடைகாரன் தான் மாசா மாசம் பில் வாங்குறதுக்கு பின்னாடி வர்றான்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

தண்டோரா ; பாக்குறதுக்கு கொஞ்சம் ரப்பா இருந்தாலும் நல்ல மனுஷன்.  AD பிலிம் டைரக்டர் . ஷார்ட் பிலிம் எடுத்திருக்காரு.. குடிய பத்தி.. ஷோக்கா இருக்கும்.

குகன் : குகன் கட்டுரைகள்ங்க்கிற பேர்ல எழுதிட்டு வர்றாரு.. ரொம்பவும் நகைச்சுவை உணர்வுள்ள இளைஞர். பல சிறுகதைகளை எழுதியிருக்கிறார். இவர் எழுதின வடிவேலு ட்ராக்(பதிவுல) நல்ல காமெடியா இருக்கும்.

வித்யா : எனக்கு தெரிஞ்சு தமிழ் ப்ளாக் உலகில் வெரைட்டியா எழுதற பெண் பதிவர்களில் இவரும் ஒருவர். அதனால. 

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
பதிவர் இல்ல பதிவர்கள்.. அத்திரி, ஹாலிவுட்பாலா, அக்னிபார்வை  அவர்களுடய எல்லா பதிவுகளுமே எனக்கு பிடித்ததுதான்.

17. பிடித்த விளையாட்டு?
இண்டோரா.. ? அவுட் டோரா..?

18.கண்ணாடி அணிபவரா?
ஆமாம் (இந்த கேள்வியால் என்ன பயன்?)

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
எல்லா விதமான படங்களும். மொத்ததில நலலா இருக்கணும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

போன வெள்ளிக்கிழமை தோரணை டிவிடில Pursuit of Happyness

21.பிடித்த பருவ காலம் எது?

டீன் ஏஜ்... காலம்தான். பின்னே நாமெல்லாம் யூத்தில்ல..

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

சேட்டன் பகத்தின் : One night @ call center., 
டாக்டர் பிரகாஷின் சிறை அனுபவங்கள்

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அடிக்கடி (இந்த கேள்வியினாலும் என்ன பயன்? எதாவது புது படம் அனுப்ப போறீங்களா..?)

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

குழந்தையின் சிரிப்பு,

பிடிக்காதது : ரோட்டில் வரும் ஹார்ன் இரைச்சல்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அலகாபாத், ஹைதராபாத், பெங்களூர் இதுல எது ரொம்ப தூரம்..?

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இருக்கு ஆனா சொல்ல மாட்டேன். அதுதான் தனி திற்மையாச்சே.. பின்ன எதுக்கு பப்ளிக்கா சொல்லணும்..? ஹி..ஹி..ஹி

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

பொதுவா லஞ்சம், மற்றும் ஏமாற்றுதல்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்…

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

சுற்றுலாவுக்கு யார் கூட்டிட்டு போறாங்க என்கிறத பொருத்தது, யார் கூட போறோம்கிறத பொருத்ததும் கூட..

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
பெரிய சினிமா டைரக்டரா, ஒரு கார்பரேட் கம்பெனி தலைமையா.. கலாநிதி மாறன் போல் இருக்க ஆசை..  இரண்டு ஆசைக்குமான அடிப்படை தகுதிய வளத்துட்டிருக்கேன்.

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

நீங்க எதை நினைச்சு கேட்டீங்களோ அதே தான்.. என்ன சந்தோசம் தானே..?

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
Interesting

அப்பாடி முடிச்சிட்டேன்.. கொஞ்சமா கேள்வி கேட்க தெரியலையே.. கோன் பனேகா குரோர்பதிலேயே பதினைஞ்சு கேள்விதான்.>>>




கொத்துபரோட்டா 15/05/09 ஐ படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jun 2, 2009

தமிழ் சினிமாவின் 30 நாட்கள்- மே 2009

இந்த மாதமும், ஐபிஎல் தொடர்ந்ததால் மிக குறைவான அளவில் தான் படங்கள் வெளிவந்தன.  சென்ற மாதம் வெளியான அயன் நல்ல வசூலை அறுவடை செய்துள்ளது.

பசங்க

pasanga5

இம்மாத ஆரம்பமே ஒரு அருமையான படத்துடன் ஆரம்பித்தது.  வழக்கமான தமிழ்சினிமாவிலிருந்து வேறுபட்ட சிறுவர்களை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். பப்ளிக் ரிப்போர்ட்டும், பத்திரிக்கைகளின் பாராட்டுகள் ஏராளமாய் இருந்தாலும், பெரிய ஓப்பனிங் இல்லை. பல பி செண்டர் இடங்களில் எடுத்துவிட்டார்கள், ஆனால் ஏ செண்டர்களில் நன்றாகவே போகிற்து. மாதத்தின் கடைசி வாரங்களில் நல்ல பிக்கப் என்றும் சொல்கிறார்கள்.  இம்மாதிரியான படஙக்ள் ஒட வேண்டும். அப்போதுதான் நல்ல படஙக்ல் வரும். அது நம் ரசிகர்களிடையே தான் இருக்கிறது.


நியூட்டனின் 3ஆம் விதி

newton02_thumb3

பாவம் ஏற்கனவே எஸ்.ஜே. சூரியா செய்த படங்களின் பாதிப்பால், இப்படத்திற்க்கு எதிர்வினை ஆகிவிட்டது என்றும் சொல்லவேண்டும். நல்ல பரபர்ப்பான திரைக்கதையிருந்தும் பெரிதாக போகவில்லை. அதற்கு முக்கிய காரணம் படத்தின் க்ளைமாக்ஸும், லவ் ட்ராக்தான் என்று சொல்கிறார்கள்.

மெய்பொருள்

இப்படம் போன மாதம் ரிலீஸ் ஆகி தொலைத்துவிட்டதால் லிஸ்டில் சேர்க்க வேண்டியதாகி போய் விட்டது. மற்ற்படி சொல்வதற்கு வேறு ஏதுமில்லை.

சர்வம்
81B760E1B673431CE8B15A8E5B591F_thumb[3]

பில்லாவுக்கு அடுத்தபடியாய் விஷ்ணுவர்தன் படம் என்று மிகவும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்திய படம்.  அருமையான ஒளிப்பதிவு, இசை எல்லாம் இருந்தும், திரைக்கதையால் உக்கார்ந்துவிட்டது.

பிரம்ம தேவா

இந்த படமும் ரிலீஸசாகி விட்டதினால் எழுத வேண்டிய லிஸ்டில் இருக்கு அவ்வளவுதான். இதுக்கு மேல எதாவது எழுதணுமின்னா அழுதுடுவேன்.

ராஜாதி ராஜா

mumtaj-043009-48

சக்தி சிதம்பரம், மும்தாஜ், லாரன்ஸ், மற்றும் சில பிகர்கள் நடமாடிய படம். மும்தாஜ் பரவாயில்லை.மீனாட்சியின் கவர்ச்சியை நம்பி படம் இருக்கிற்து. ரொம்பவும் சுமாரான ஓப்பனிங். மற்றபடி அடுத்து வரும் படங்களை வைத்துதான் சொல்ல முடியும்.

தோரணை

thoranai

மாதத்தின் கடைசியில் ரிலீஸாகியிருப்பதால் ரிசல்ட் ஒண்ணும் தெரியவில்லை.. மவுத் டாக் மிகவும் மோசம்.

மொத்தத்தில் ஏழு படஙக்ள் வெளியான மே மாதத்தில் ஓரளவுக்கு அபவ் ஆவரேஜ் படமென்றால் பசங்க மட்டுமே.. மற்றவையெல்லாம் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை. போன மாதத்திய ஹிட்டான அயன் இந்த மாதமும் முண்ண்னியில் நிற்கிற்து. சுமாராய் இந்த படம் 35 கோடிவரை  வசூல் செய்யும் என்று சொல்கிறார்க்ள். சைதை ராஜில் மூன்று வார ஷேர் மட்டும் 12 லட்சமாம்.. பக்கத்தில் உதயம், காசி என்று எல்லா தியேட்டர்களில் வெளியிட்டும் இந்த வருமானம்.



சென்னையிலும், ஆந்திராவிலும் வெளியான தெலுங்கு படம் கிக் போன மாதத்திய தமிழ் தவிர ஹிட்டான் படம்.


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jun 1, 2009

கொத்து பரோட்டா –01/06/09

கோவை வழக்கம் போல் இருந்தது. ரயில்வே ஸ்டேஷன் முன்பு ஒரு அல்ட்ரா மார்டன் கே.ஆர். ரெஸ்டாரண்ட் வந்திருக்கிறது. ஒரு ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் பார்த்ததாய் ஞாபகமில்லை. ஆட்டோக்கள் சென்னையில் அடிக்கும் கொள்ளையை விட ஐந்து ரூபாய் எக்ஸ்டாராவாக கொள்ளையடிக்கிறார்க்ள். இங்கு 25 ருபாய் போகும் இடத்துக்கு 30 ரூபாய்.

கே.ஜி. காம்ப்ளெக்ஸை ரிலையன்ஸின் ”பிக்” டேக் ஓவர் செய்திருக்கிறது.  தியேட்டர் இண்டீரியர் , எக்ஸ்டீரியர், லைட் ,சவுண்ட், சீட்டிங், இண்டெர்நெட் டிக்கெட் புக்கிங், எப்போது திறந்திருக்கும் தியேட்டர் கவுண்டர்கள், என்று நன்றாய் மெயிண்டெயின் செய்கிறார்கள். ஏற்கனவே கோவைக்கு ஒரு நல்ல தியேட்டர் காம்ப்ளக்ஸய் இருந்தது.. இப்போது ரிலையன்ஸின் தயவால் மேலும் மெருகேறியிருக்கிறது. டிக்கெட் விலை கூட 80,60,10 என்றுதான் இருக்கிறது. ஒரே ஒரு தியேட்டரில் மட்டும் டிஜிட்டல் ப்ரொஜக்‌ஷன் வைத்திருக்கிறார்கள். அவினாசி ரோடில் புதிதாய் ஆறு தியேட்டர்கள் கட்டப்பட்டுவருவதாய் சொன்னார்கள்..  நல்ல படங்கள் ஓடுவதற்கு நலல திரையரங்குகள் தேவை.  கொஞ்சம் நாள் முன்பு, மொத்த கோவை ஏரியாவிற்கு 45 லட்சத்துக்கு விற்கபட்ட அபியும் நானும் திரைப்படம் இந்த தியேட்டரில் மட்டும் 30 லட்சம் வசூலித்தது என்று சொன்னார்கள்.

****************************************************************
காதுக்கினிமை

வால்மிகி பட பாடல்கள் என்னை பெரிதாய் பாதிக்கவில்லை. ஒரு பாட்டை தவிர, அதுதான் டிரைலரில் வரும் “என்னடா பாண்டி” என்கிற பாடல், இளையராஜாவின் குரலில் மெட்ராஸ் பாஷையில் உருகியிருக்கிறார். ஆனால் இதே ரிதத்தில் என் உயிர் தோழன் படத்தில் “ மச்சி மன்னாரு என்கிற பாடலை இதே இளையராஜா பாடியிருக்க வரும் ஞாபகத்தை தவிர்க முடியவில்லை.

கந்தசாமியில் எல்லா பாடல்களும் ஒரே மாதிரியிருக்கிறது.  கந்த கந்த கந்த கந்தசாமி என்கிற பாடலை காலையில் வருவதற்கு  கஷ்டபடுகிற, ஆட்களும், நிறைமாத கர்பிணீகளூம் பாடினால் இருவருக்குமே சுகபிரசவம்.  Excuseme  பாடல் மட்டும் கொஞ்சம் இதம் .

******************************************************************** 
வாய்க்கு ருசி
கோவையில் ரயில் நிலையம் எதிரில் போகும் ஒரு சின்ன ரோடின் போய் அங்கே கீதாஹால் ரோடில் இருக்கும் கீதா கேப் என்கிற் ஒரு ஓட்டல் இருக்கிறது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு மேல இருக்கும் போர்டிங் லாட்ஜிங் ஓட்டல். கல்யாண பந்தி போல் இரண்டு பாகங்களாய் பிரித்து வைத்த பெரிய ஹால். ஒரு பாதியில் சாப்பாடு, இன்னொரு பாதியில் டிபன். இரண்டுமே சூப்பர்.  டிபனில் பொங்கல், ரவா தோசை, பூரி கிழங்கு, ஒரு அருமையான பில்டர் காபி.  சாப்பாடும் அருமை என்று என் மனைவி சொன்னாள். கோவையில் நான சாப்பிட்ட ஓட்டல்களில் அருமையான உபசரிப்பு, சுவை,  ஞாயமான விலை கோவை சென்றால் டோண்ட் மிஸ்.

அதே போல் ஆர்.டி.ஓ. ஆபீஸ் அருகில் இருக்கு ஹரி பவன். இப்பவும் நான் சாப்பிட்ட சிக்கன் ரோஸ்ட் தோசை என் நாக்கில். மத்யான சாப்பாடு சும்மா பின்னும் என்று அண்ணாச்சி வடகரைவேலன் சொன்னார். போக முடியவில்லை.  நிச்சயமாய் இதையும் டோண்ட் மிஸ்.. இடம் தெரியவில்லை என்றால், சஞ்செய், அண்ணாச்சி,  செல்வேந்திரனை கூப்பிட்டால், இடம் காட்டுவதோடு இல்லாமல் தோசைக்கு பில்லும் கொடுப்பார்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஜோக்
ஹனிமூன் சென்று திரும்பிய மகனிடம் தந்தை : “ என்ன ஜோ. . திருமண வாழ்க்கை எப்படியிருக்கிறது.?” என்று கேட்டார். மகன் ஜோ நொந்து போன குரலில் : நான் ஒரு Nun ஐ திருமணம் செய்திருக்கிறேன் போலருக்கு, காலையில கேட்டாலும் நோ, மத்யானம் கேட்டாலும் நோ, ராத்திரி கேட்டாலும் நோன்னுதான் சொல்றாள் என்றான். அப்பா “கவலைபடாதே இன்னைக்கு டின்னருக்கு உன் மனையையும் அழைத்து வா. . உன் அம்மா Mother superior” உடன் பேசுவோம் என்றார்.

ஒர் இளைஞன் ஒரு பெரிய பாரில் நின்று தொடர்ந்து 100 பெண்களுடன் உடலுறவு கொள்கிறேன் என்று போட்டிக்கு அழைக்க, பல்ரும் அவன் மேல் பெட் கட்ட ஆரம்பித்தார்கள். 1,…,10,..25,,45,,,65,,,,88,,97,,98 என்று விரிசையாய் தொடர்ந்து இயங்க, 99வது பெண்ணிடம் இயங்கும் போது ஹார்ட் அட்ட்டாக் வந்து இறந்து போனான். அவனுடன் வந்த நண்பன் மிகுந்த வருத்தத்துடன்,  “சே காலையில் எடுத்த பிராக்டிஸ்ல கூட கரெக்டா முடிச்சானே “ என்றான்.

டிஸ்கி

ஏ ஜோக் வர வர மோசமாவுதுன்னு சொன்ன வெகு சில வாசகர்களுக்காக, ஏ ஜோக்கிலிருக்கும் ஏ வை எடுத்திட்டேன்.

 


 

 





Blogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..