Ad Space

30,000 ரூபாயில் தயாரிப்பாளர் ஆக முடியுமா..? முடியும்.. விபரங்களுக்கு sankara4@gmail.com

May 29, 2009

தோரணை - திரைவிமர்சனம்

WWW.TKADA.COM

அந்த கால இந்தி பட ஸ்டைலில் சின்ன வயசில ஓடி போன அண்ணனை தேடி வரும் தம்பியின் கதை.  1970களில் வந்த படத்தையெல்லாம் தூசி தட்டி, மீண்டும் எடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே சத்யமில் பட்டும் விஷால் திருந்தவில்லை.

thoranai-latest-movie-stills-images-2

ஊருக்குள்ளே இரண்டு ரவுடிகள், ஆளுக்கொரு பாதியாய் சென்னையை பிரித்து கொண்டு அட்டூழியம் செய்கிறார்கள். வழக்கம் போல் விஷால் கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் இறங்கும் போது ஒரு கொலையை பார்க்கிறார். அதற்கு சாட்சி சொல்வதாய் சொல்கிறார். இதற்கிடையில் பத்து வயசில் வீட்டை விட்டு ஓடி போன அண்ண்னின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை வைத்து கொண்டு, நண்பன் சந்தானத்துடன் தேடுகிறார். காமெடி பண்ணுகிறேன் என்று நம்மை நெளிய வைக்கிறார். ஒரு நாள் அண்ணனை கண்டுபிடிக்கிறார். அவர் அண்ணனிடம் தான் தான் அவரது தம்பி என்று சொன்னாரா..? அண்ணனை தன் தாயிடம் சேர்க்க  அவர் செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற்றாரா..? என்பது தான் கதை.
thoranai_shriya_vishal_photo_gallery_tn1

ரெண்டு ரவுடிகளில் ஒருவர் பிரகாஷ்ராஜ், இன்னொருவர் கிஷோர். இருவருக்குமே மிக ஈஸியான ரோல். பிரகாஷ்ராஜ் படத்தில் அதிக இடத்தில், ‘எட்ரா.. வண்டிய..” “அவனை போட்டு தள்ளுங்கடா” என்கிற வசனங்களிஅ தவிர ஏதும் பேசியதாய் நினைவில்லை. கிஷோருக்கு அது கூட இல்லை ஆக்ரோஷமாய் பார்த்தபடி இவர் சுமோவிலும், பிரகாஷ் கருப்பு ஸ்கார்பியோவிலும் சுற்றுகிறார்.
shriya-bollyupdatescom-bikini8_0_0_0x0_600x262

சந்தானம், மயில்சாமி, குண்டு அர்சனா, பரவை முனியம்மாவுடன் விஷாலும் காமெடி பண்ணுகிறார்.  ராமர், அனுமார் வேஷம் போட்டு கொண்டு அலையும் காட்சியிலும் மற்றா சில காட்சிகளிலும் ஏதோ அவ்வப்போது புன்முறுவல் வருவதோடு சரி.. இவர்களைவிட எம்.எஸ்.பாஸ்கர் அடிக்கும் நக்கல் அருமை.

விஷால் படம் முழுக்க அழுக்காய் படு கேவல்மாய் இருக்கிறார். விஜய் போல சீனுக்கு சீன் பஞ்ச் வசனம் பேசுகிறார், நன்றாக சண்டை போடுகிறார்,  காதலிக்கிறார். “ள’ ‘ழ”வை யாராவது அவரின் நாக்கில் வசம்பை தேய்த்தாவது வரவையுங்களேன். கேட்க சகிக்கலை. ஒண்ணும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை. ஆனா ஊன்னா சட்டை காலரையும், இன்னொரு பக்க சட்டையை கீழேயும் இழுத்து கொண்டு தோரணையாய் நிற்கிறேன் பேர்விழி என்று  நிற்பது ஏதோ வலிப்பு வந்து நிற்கிறார் போல் இருக்கிறது.
 shriya-bollyupdatescom-bikini3_0_0_0x0_660x495

ஸ்ரேயா அழகாய் இருக்கிறார், முடிந்தவரை க்ளிவேஜ் தெரிய கொடுத்த காசுக்கு காட்டி புண்ணியம் தேடிக் கொள்கிறார். அவரை சொல்லி குற்றமில்லை. என்னா இடுப்புப்பா.. ம்ஹூம்….

பிரியனின் கேமரா சண்டை காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறது. நீட் ஒர்க்.. அதே போல் எடிட்டிங்கும்.. மணிசர்மாவின் இசையில் ஒன்று கேட்க விளஙக்வில்லை. தெலுங்கு பட பாடல் போலவே இருக்கிறது. இரண்டு மொழிகளில் ரிலீஸாவதால் கூட இருக்கலாம்.

இயக்குனர் சபா ஐயப்பனின் கதை திரைக்கதை  அரத பழசாய் இருப்பதால் வழக்கமாய் இம்மாதிரியான் மாஸ் படங்களில் இருக்கும் அடிப்படை ஆர்வம் கூட குறைவாகவே இருக்கிறது. அதிலும், வில்லனை மடக்கும் காட்சிகளில் பயங்கர கற்பனை வரட்சி, தெலுங்கு படங்களிலேயே நல்ல பண்றாங்க பாஸூ.. க்ளைமாக்ஸ் காட்சியில் இரண்டு கேங்குகளில் ஏற்படும் குழப்பங்கள் மட்டும் ஓகே. படம் பூராவும் த்லைப்பை அவ்வப்போது யாராவது ஒருவர் சொல்லிக் கொண்டேயிருப்பது படு காமெடி.

தோரணை -  வெறும் தோரணை மட்டுமே..

May 28, 2009

உலக சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்கள் -1

220px-Akira_Kurosawa அகிரா குரஸேவா.. இந்த பெயரை கேட்டால் உலகில் உள்ள எல்லா இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும், சினிமா நேசர்களும் எழுந்து ஒரு சலாம் வைப்பார்கள். இன்றளவும் இவரின் படஙகள் உலகின் சிறந்த படஙக்ளாய் மெச்சப்பட்டு வருவதே இவரின் திறமைக்கு ஒரு சாட்சி..

1910ஆம் ஆண்டு மார்ச் மாதம்23 ஆம் நாள் எட்டாவது குழந்தையாய் பிறந்தவர் அகிரா. அகிராவின் தந்தை இஸாமாகுரஸேவா ஜப்பானிய மிலிட்டரியால் நடத்தப்பட்ட ஒரு பள்ளிகூடத்தின் இயக்குனராக இருந்தார். அவரது குடும்பம் ஒரு அபவ் ஆவரேஜ் குடும்பமாய்தான் இருந்தது. சிறு வயதிலிருந்தே படம் வரைவதில் மிகவும் ஆர்வம் உள்ளவராய் இருந்தார் அகிரா..

1936ஆம் ஆண்டு  ஜப்பானின் ஒரு PCL  என்கிறா ஸ்டூடியோவில் இயக்குனர் கஜிரோ ஐயமமோட்டோ என்கிறவரிடம் அஸிஸ்டெண்ட் டைரக்டராக வேலைக்கு சேர்ந்தார். சுமார் ஏழு வருடங்கள் கழித்து 1943ல் அவரது முதல்  படமான Shanshiro Sugata  படம் வெளியானது. அதற்கு பிறகு அவர் இயக்கிய படங்கள் எல்லாமே ஜப்பானிய போர்காலங்களில் வெளியானதால், கிட்டத்தட்ட ஜப்பானிய அரசின் பெருமைகளை விள்க்கும் படங்களாகவே இருந்தது.

The Most Beautiful People  என்கிற ஒரு படம் ஜப்பானிய இராணுவத்தில் பெண்கள் பணிபுரிவதை அடிப்படையாய் வைத்து எடுக்கப்பட்ட படம். இப்படி கிட்டத்தட்ட பத்து படங்கள் இயக்கியிருந்தாலும் அகிராவை உலகுக்கு தெரிய படுத்திய படம் 1950ல் வெளிவந்த பீரியட் படமான Roshaman தான். வெனீஸ் திரைப்பட விழாவில் தங்க சிங்கம் விருது பெற்று ஜப்பானிய சினிமாவை உலகுக்கு அறிமுகப்படுத்தியது.

இவரின் படம் உலக அளவில் வெற்றி பெற்றதை மிக சாதாரணமான வகையில் ஒரு சின்ன செய்தியாய்தான் பத்திரிக்கைகள் வெளியிட்டது. இந்த ரோஷமான் படம் உலகில் பல மொழிகளில் பல படங்களுக்கு இன்ஸ்ப்ரேஷனாக இருந்திருக்கிறது. தமிழில் ஏ.வி.எம். தயாரிப்பில் வீணை எஸ். பாலசந்தர் இயக்கிய அந்த நாள் திரைப்படம் முழுக்க, முழுக்க, ரோஷமானின் திரைக்கதை உக்தியை வைத்து எடுக்கப்பட்ட படம். அதே போல  சமீபகால படமான விருமாண்டியிலும் இந்த படத்தின் தாக்கத்தை உணரலாம்.

இவரின் ப்ல படங்கள் உலகின் பல மொழிகளில் திருடப்பட்டோ, உரிமை வாங்கப்பட்டோ திரைப்படமாய் வெளிவந்திருக்கிறது. 1952ல் வெளிவந்த Shichinin no  samurais (Seven Samurai’s) என்கிற படம். ஆங்கிலத்தில் கெளபாய் படமாய் மாற்றப்பட்டு The Maganificient seven  என்று வெளிவந்தது. ஏன் நம்ம ஊர் ஷோலே கூட ஏழு சமுராயின் தழுவல் என்றால் அது  மிகையாகாது. ஒரிஜினல் ஏழு சமுராய்கள் கிட்டத்தட்ட மூணரை மணி நேரம் ஓடும் படம்.  அகிரா இப்படத்தில் படம்பிடித்தவிதமும், நடிகர்களின் நடிப்பும் நம்மை கட்டிப் போட்டுவிடும். அதே போல ரோஷமான் படத்தில் ரவுண்ட் ட்ராலி இல்லாத காலத்திலேயே சுற்றி வருவது போல கேமரா கோணங்களை வைத்து படம்பிடித்துவிட்டு, எடிட்டிங்கில் கொஞ்சம் கூட ஜெர்க் இல்லாமல் ஒரு முழு ரவுண்ட் ட்ராலி ஷாட் போல கொடுத்திருப்பார். இது போல இவரின் படங்களில் இவர் செய்த புதுமைகள் பல.

இவரின் படஙக்ளில் இவர் மிகவும் அதிகமாய் வைப்பிங் என்கிற ஒரு உத்தியை பயன்படுத்துவார்.  முப்பது திரைபடஙக்ளை இயக்கியவர் அகிரா குரஸேவா.  அதே போல் பல கேமராக்களை பயன் படுத்தி, விதவிதமான் கோணஙக்ளில் படம் எடுப்பதை தன்னுடய ஸ்டைலாய் கொண்டிருந்தார்.  அவருடய செவன் சமுராய்ஸ் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் இவர் எடுத்திருந்த பல கோண காமிரா காட்சிகள் படத்திற்கு எவ்வளவு வலு சேர்த்தது என்பதை  மிரண்டு போய் படம் பார்த்தவர்களூக்கு தெரியும். படத்தின் பெர்பக்‌ஷனுக்காக அவர் மிகவும் மெனக்கெடுவார். அதற்காக எவ்வளவு நேரமானாலும் செலவானாலும் அதை பற்றி கவலை படமாட்டார்.

1970களில் இவரது படஙக்ளின் தோல்விகளால் மனதளவில் பாதிக்கப்பட்டு தன்னுடய கை நரம்புகளை முப்பது இடஙக்ளில் அறுத்து கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். ஆனால அதிலிருந்து அவர் தப்பிவிட்டார். அதன் பிற்கும் கூட அவருக்கு பெரிய அளவில் பைனான்ஸ் செய்ய எந்த நிறுவனமும் முன் வரவில்லை. அந்த சமயங்களில் அவர் ஜப்பனிய தொலைகாட்சியில் தோன்றியும் அதற்கு நிகழ்ச்சிகளை இயக்கியும் பொருள் சேர்த்தார்.

இவரின் சிறந்த படமாய் இவர் சொல்வது 1980ல் வெளிவந்த Kagemusha வைதான். இவரின் எல்லா படங்களிலும் ஒரே ஆட்களை வைத்து படமெடுபபதையே அவர் வழக்கமாய் கொண்டிருந்தார்.  Takashi shimura  என்கிறவரை வைத்து, சுமார் 19 படங்களை சிறு மற்றும் ஹீரோவாக வைத்து எடுத்திருக்கிறார். அதே போல் Tashiro Mifune என்பவரை வைத்து, 16 படஙக்ளில் லீடிங்க் ரோலில் நடிக்க வைத்திருக்கிறார்.

அகிராவுக்கு இந்தியாவின் சத்யஜித்ரேவை மிகவும் பிடிக்கும். அவரது வாழ்கையில் பெரும்பாலும் சினிமாவை தவிர வேறெதையும் சிந்திகாதவர் என்றே சொல்லலாம். வீட்டில் இருக்கும் நேரத்தில் கூட அவரின் சிந்தனை சினிமாவை சுற்றியே இருக்கும் என்கிறார் அவரின் மனைவி Yoko Yaguchi இவரும் ஒரு நடிகையாவார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாய். வழக்கமான ஜப்பனியர்களின் உயரத்தை விட இவரது உயரம் அதிகமே சுமார் ஆறடிக்கு மேல்..

Madadayo (1993) என்கிற படமே இவர் கடைசியாய் இயக்கிய படம். அதன் பிற்கு தனது 88ஆம் வயதில் 1998ஆம் ஆண்டு அவர் காலமானார்.  உலகில் பெரும்பாலானவர்களால் மிகவும் புகழப்பட்டு, மதிக்கப்பட்ட, இன்றளவும் மதிக்கப்படும்  அகிரா குரஸேவாவை ஜப்பானிய சினிமா உலகம் அவ்வளவு சிறப்பாக மதிக்கவில்லை என்பது சோகமே.

டிஸ்கி

இந்த கட்டுரை பல ஊடகங்களிலிருந்து தொகுக்கப்பட்டதே..

விகடனில் இந்த வாரம்மும்…

இந்த வாரமும் விகடனில் நம் சக பதிவரின் ஒரு பக்க கதை ஒன்று வெளிவந்திருக்கிறது. சில மாதங்களாய் ஆணி புடுங்கும் வேளையில் மாட்டிக் கொண்டிருப்பதினால், பதிவு ஆணி புடுங்க முடியாததாலும், பதிவுலகில் சிறுகதைகள் எழுதி பிரபலமானவர்,  பிரியாணி பிரியரான இவரின் சயின்ஸ் பிக்‌ஷன் கதை வெளீயாகியிருக்கிறது. இப்போது புரிந்திருக்குமே அவர் யார் என்று ஆம் அவர் நமது வெண்பூதான். வாழ்த்துகள் வெண்பூ..

May 27, 2009

ஆட தெரியாத ஆட்டக்காரி..

EVM ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும் ஜெயலலிதா மட்டும் லூசுத்தனமாய் ஒரு அறிக்கை விடுவார். மின்ண்ணு ஓட்டு இயந்திரங்களை பயன் படுத்த கூடாது என்று. ஒவ்வொரு முறை ஓட்டு போட்டுவிட்டு வெளியே வரும் போதும் மிண்ணனு இயந்திரங்களில் அதிமுகவுக்கு ஓட்டு போட்டால், திமுகவுக்கு விழுகிறது என்று சொல்லிவிட்டு தான் செல்வார். அவர் அப்படி சொல்ல ஆரம்பித்த தேர்தலில் அவர் தான் வென்றார். ஆனாலும் இதை ஒரு வழக்கமாகவே சொல்லி வருகிறார்.

இப்போது அவரின் வழியை பின்பற்றி.. பமக தலைவர் மருத்துவரும் அவரே ஒரு புரோக்ராய் செய்த ஒரு மினியேச்சர் மின்ணனு இயந்திரத்தை வைத்து டெமோ காட்டியிருக்கிறார். அப்படி புலம்பும் லிஸ்டில் லேட்டஸ்டாய் ஒருவர் சேர்ந்திருக்கிறார். நம்ம விஜயகாந்த். வருகிற இடைதேர்தலில் மிண்ணனு இயந்திரங்களை பயன் படுத்த கூடாது  என்று கோர்ட்டை நாடியிருக்கிறார்.
voting

எனக்கு தெரிந்து தமிழ்நாட்டில் இவர்களை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இம்மாதிரியான அறிக்கைகள் வெளிவந்திருக்கிறதாக தெரியவில்லை. அப்படி ஒவ்வொரு ஆளும்கட்சியும் எளிதாய் ப்ரோக்ராம் செய்து வெற்றி பெற முடியுமானால், எதற்காக இப்படி இழுபறி அரசாகவோ, மைனரிட்டி அரசாகவோ வரும் அளவிற்கு மின்ணணு இயந்தரங்களை செட் செய்ய வேண்டும். நல்ல மெஜாரிட்டி வரும் மாதிரி செட் செய்ய முடியாதா என்ன..?

இவர்களின் கூற்று போல் ஆங்காங்கே சில இடங்களில் மின்ணணு பெட்டியை பொதுமக்கள் பயன் பாட்டுக்கு முன்பே சின்ன சின்ன பிரச்சனைகள் வந்த போது, அதை சரி செய்திருக்கிறார்கள். அப்படி நடந்த  சம்பவங்கள் மொத்த இந்தியாவில் மிக சொற்பமே. சாதாரண் ஓட்டு சீட்டு முறையில் நடக்கும், கள்ள ஓட்டு, பூத் கேப்சரிங், போன்ற பல அசம்பாவிதங்கள் இந்த மின்ணனு முறையால் தடுக்க பட்டிருக்கிறது.

தவறான கூட்டணிகளாலும், கொள்கைகளாலும், தேவையற்ற அறிக்கைகளாலும், மக்கள் மனதிலிருந்து வெளியேறியதன் காரணத்தை ஆராயாமல், இம்மாதிரியான அட்டு அறிக்கைகளை விட்டுக் கொண்டு, தங்கள் புண்களை தாங்களே நக்கி கொள்வது கேவலமாய் உள்ளது.

உலக நாடுகள் பலவும் நம்முடய மின்ணணு இயந்திரத்தை மெச்சி அதை தங்கள் நாட்டு தேர்தலுக்கு பயன் படுத்த நினைக்கிற இந்நேரத்தில் இவர்களின் அறிக்கைகள் இந்த பழமொழியைத்தான் ஞாபக படுத்துகிறது.

”ஆட தெரியாத ஆட்டக்காரி, மேடை கோணல்னு சொன்னாளாம்”

May 26, 2009

கோவை பதிவர் சந்திப்பு

திடீர்னு ஒரு டூர் ப்ரோக்ராம் போடலாமுன்னு தோணிச்சு. எங்க போகலாம்னு யோசிக்க ஆரம்பிச்ச போது, மூணாறு, டாப்ஸ்லிப்ன்னு ஒரே குழப்படியா இருந்துச்சு. சரி எதுக்கும் கோவைக்கு டிக்கெட் புக் பண்ணுவோம். அங்கேர்ந்து எங்க வேணும்னாலும் போய்கலாம்னு முடிவு பண்ணி கிளம்பிட்டேன். சம்மர் ஸ்பெஷ்லா ஒரு ரயிலை விட்டிருந்தார்கள். காலை ஒன்பது மணிக்கு கிளம்பி நாலு மணிக்கு கோவையிலிருக்கும்னு சொன்னாங்க. அந்த பாடாவதி ட்ரையின் அரை கிலோமீட்டர் தூரத்தில ஒரு காக்கா கிராஸ் பண்ணாகூட வெயிட்டிங்கில போட்டு சுமார் ஏழு மணிக்கு கொண்டு போய் சேர்த்தான். சாயங்காலம் சீக்கிரம் போனவுடன் வெளியே சில பேரை சந்திக்கலாம்னு வச்சிருந்த ப்ரோக்ராம் கட்.
 

Image0151

கோவைக்கு போய் ரூமை போட்டதும் பரிசலுக்கு ஒரு போனை போட்டேன். கோவை பதிவர்கள் யாரையாச்சும் சந்திக்கணுமேன்னே..? கவலையே படாதீங்க ஒவ்வொருத்தரா உங்களுக்கு கால் பண்ண வைக்கிறேன்னு சொல்லிட்டு தான் ஞாயித்து கிழமை திருப்பூரிலிருந்து வந்து சந்திப்பதாய் சொன்னார். Image0152

நான் கொஞ்சம் ரிப்ரஷாகி வெளியே போய் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வருவதற்குள் ஒரு கால் வந்தது. “ஹலோ.. கேபிள்சங்கரா.. நான் வடகரை வேலன் பேசறேன். என்றார்  அண்ணாச்சி. மேற்படி என் ப்ரோக்ராமையெல்லாம் விசாரித்துவிட்டு, இன்று சந்திக்கலாமென்று என்று சொன்னவுடன் பத்து நிமிஷத்தில் ஹோட்டலில் இருப்பேன் என்றார். இருந்தார். பதிவுகளில் அவரது புகைப்டத்தை பார்த்து மரியாதை விஜயகாந்த் மாதிரி இருப்ப்பார் என்று எதிர்பார்த்திருந்தேன். அதற்கு மாறாக ஜீன்ஸ், டிசர்ட் அணிந்தபடி, ஸ்டைலாய், என்னை போலவே யூத்தாய், காரின் மேல் சாய்ந்திருந்தார்.  பத்து நிமிஷத்தில் சஞ்செய்காந்தி வருவதாய் சொன்னார்.  செல்வேந்திரன் போன் அடித்து கொண்டேயிருந்தது. மீண்டும் அவர் செல்லை தொலைத்துவிட்டு வெறும் வேந்திரனாகிவிட்டாரோ என்று கேட்டபோது, இல்லை அவர் லோக்கல் யூடிவி சேனல் நடத்தும் T10 கிரிக்கெட் போட்டியில் விளையாட போய்விட்டார் என்றார்.  ஆனால் அவர் அந்த மேட்சில் டுவல்த் மேனாக்கபட்டதை அவர் சொல்ல கேட்டால் நன்றாக இருக்கும்.  சஞ்செய்யும் அடுத்த சில நிமிடங்களில் வந்தார். அவரும் ஒரு யூத்புல்லானவர் தான். (சந்தோஷமா சஞ்செய்). ராஜீவ் காந்தி போல இருந்தார்.

சிறிது நேர அளவலாவலுக்கு பிறகு சாப்பிட போகலாம் என்று கிளம்பினோம். ஹரி பவன் என்ற ஒரு ஹோட்டலுக்கு போனோம். பவன் என்றதும் ஏதோ ஆரியபவன் என்று நினைத்தேன்.  ஆனால் அங்கு சாப்பிட்ட சிக்கன் ரோஸ்ட் தோசை சும்மா பின்னி பெடலெடுத்துவிட்டது. அவ்வளவு சுவை. ஹோட்டலின் உள்ளே போகும் போதே செல்வேந்திரன் வ்ந்து ஜாய்ன் செய்து கொண்டார். பேச்சு பதிவுகள், அரசியல், சினிமா, செல்வேந்திரனின் டுவல்த் மேன் அனுபவம், என்று மிக சந்தோசமாய் கழிந்தது. அண்ணாச்சி தான் யூத்தாய் இருப்பதை பற்றி நான் சொன்னதை  அவருடய மகளிடம் செல்லில் சொல்ல சொல்லி உறுதிபடுத்தினார்.

Image0153

பதிவர் சீனா கோவைக்கு வருவதாய் சொன்னார் அண்ணாச்சி.. ஆனால் கிளம்பியதே லேட் ஆதலால் கோவைக்கு வந்து சேர  இன்னும் லேட் ஆகும் என்றார் அண்ணாச்சி. மணி பதினொன்னுக்கு மேல் ஆகிவிட்டதாலும், அண்ணாச்சி வேறு யாரையோ பிக அப் செய்ய வேண்டியிருந்ததாலும் கிளம்ப, செல்வேந்திரனும் கிளம்பினார். அண்ணாச்சியும், சஞ்செய்யும் என்னை ஹோட்டலில் டிராப் செய்துவிட்டு கிளம்பினார்கள்.

பதிவுலகில் எனக்கு பிடித்ததே பதிவுகளால் ஏற்படும் புதிய நட்புகள். காலேஜ் படிக்கும் காலத்தில் ஏற்படும் நட்பை போல..  எந்த விதமான பாசாங்குமில்லாத நட்புகள். ஒரு அருமையான அசை போடவைக்கும் சந்திப்பு. நன்றி நண்பர்களே..

டிஸ்கி

ஞாயிற்றுகிழமை வருவதார் சொன்ன பரிசல் வருவாரூ்ரூரூரூ… ஆனா வரமாட்டாரூரூரூ ரூ என்கிற ரேஞ்சில் வரவேயில்லை.. ஆனாலும் மனுஷனுக்கு ரொம்பத்தான் நக்கலுங்க.. நான் கோவைக்கு வந்திருக்கிறதை  பத்தி எல்லாத்துக்கு அனுப்பிச்ச எஸ்.எம்.எஸ் இருக்கே… அடுத்த முறை நேரில் பாக்கும் போது இருக்கு….

May 25, 2009

கொத்து பரோட்டா – 25/05/09

மூன்று நாட்களுக்கு குடும்பத்தோடு சுற்றுலா சென்று வந்தேன். இடையில் நம்ம பதிவுக்கு லீவு விட கூடாதுன்னு ரெண்டு பதிவை ரெடி பண்ணி செடியூல் செஞ்சி வச்சிருந்தேன்.  ஆனா போஸ்ட் ஆகல.. இருந்தாலும் விடாம கரும சிரத்தையா பிரவுசிங் செண்டர்ல போய் போஸ்ட் பண்ணிட்டுதான் மறு வேலை பார்தேன். என்னா ஒரு கடமையுணர்ச்சி.. (ஒரு மூணு நாளாவது நாங்க நிம்மதியா இருந்திருப்போம். அதுக்கு கூட எங்களுக்கு கொடுத்து வைக்கலையான்னு புலம்புறது கேட்குது) 

######################################################

ரெண்டு லட்சம் ஹிட்ஸ்

இந்த மூணு நாளுல ஒரு சந்தோஷமான விஷயம் நடந்திருக்கு. அது என்னன்னா.. ( எத்தனை “ன”) நம்ம பதிவு ரெண்டு லட்சம் ஹிட்ஸுகளை தாண்டியிருச்சுங்கிறதுதான். இதுக்கெல்லாம் காரணமான வாசகர்களுக்கும், பதிவர்களூக்கும் மிக்க நன்றி.. நன்றி.. நன்றி..

*************************************************************

வாய்க்கு ருசி
Image0146

கோடம்பாக்கம் ரோடில் மீனாட்சி காலேஜ் முன்னாடி ஒரு சின்ன ஓட்டல் ஒன்று இருக்கிறது. பெயர் “Kebasish” . அருமையான தந்தூரி, மற்றும் கெபாப்புகள், ப்ரைட்ரைஸ், பிரியாணி மற்றும் புல்கா, ரொட்டி வகைகள் கிடைக்கும், அதுவும் சுட, சுட புல்காவும், ஹைத்ராபதி சிக்கனும் வைத்து கொண்டால் ஒரு பத்து புல்காவாவது உள்ளே தள்ளலாம். விலையும் ரொம்ப அதிகம் கிடையாது. என்ன ரொம்ப சின்ன இடம். இடம் சின்னதாய் இருந்தால் என்ன..? வாய்க்கு ருசியாய் இருந்தால் போதாது.??

***************************************************************

என் ஐந்து வயது சின்ன பையன் சுகேஷ் கேட்கும் கேள்விகள சில வற்றை உங்களின் பார்வைக்கு, முடிந்தால் நீஙகள் பதில் சொல்லவும்.

ரயிலில் ஜன்னல் மேல் Emergency exit என்று எழுதியிருக்க, அதை படித்தவன், அப்படியென்றால் என்ன அர்த்தம் என்று கேட்டான். நானும் சிரத்தையாய் “திடீர்னு ஏதாவது ப்ராப்ளம் வந்துச்சுன்னா அவரசரத்துக்கு இந்த வழியா வெளியே போறதுக்கு போட்டுருக்காங்க என்றேன்., அதற்கு அவன் “அப்படின்னா மெதுவா போறதுக்கு என்ன போடுவாஙக?


அயன் திரைப்பட விளம்பரம் பார்த்து “ ஏம்பா.. தமிழ்ல அயன் மூணு வார்த்தைதானே. பின்ன ஏன் இங்கிலீஷில நாலு வேர்ட்ஸுல போடறான்.?

#############################################################

கவிஜ

நீ என்ன  சூப்பர் பிகரா..?

உன்னை பார்த்தவுடன்

சொல்ல வந்த அனைத்தும் ,

மறந்து போகிறேனே..?

இப்படிக்கு எக்ஸாம் ஹாலில் கேள்விதாளை பார்த்து கவிதை எழுதுவோர் சங்கம். எஸ்.எம்.எஸ்ஸில் பதிவர் ஸ்ரீ அனுப்பியது.

********##################################################### ஏ ஜோக்

ஒரு ஊர்ல பெரியசாமி பெரியசாமின்னு ஒருத்தன் இருந்தான். அவன்கிட்ட ஒரு ஸ்பெஷாலிட்டி என்னன்னா.. அவனுக்கு ரொம்ப பெரிய “லுல்லா” அதை வச்சி  ஊருக்குள்ள இருக்கிற பொண்ணுங்க, பொம்பளைங்க எல்லாத்தையும் மேட்டர் பண்ண ஆரம்பிக்க, அவன் புகழ் ஊரு முழுக்க பரவிவிட, ஊர்ல இருக்கிற எல்லா ஆம்பளைங்களும் போலீஸ் கிட்ட முறையிட, போலீஸ் அவனை என்கவுண்டர் பண்ணிடுச்சு. அவனை என்கவுண்டர் பண்ண போலீஸ் இன்ஸ்பெக்டர் போஸ்ட் மார்டம் பண்ணும் போது டாக்டர் கிட்ட சொல்லி அவனோட லுல்லாவை மட்டும் கட் செஞ்சி கொடுக்க சொன்னாரு. டாக்டரும் கட் செஞ்சி கொடுக்க இன்ஸ்பெக்டர் தன்னோட பேண்ட் பாக்கெட்டுல வச்சிக்கிட்டு வீட்டுக்கு போனாரு. பேண்ட் சர்டை கழட்டிட்டு குளிக்க போனவருக்கு  தன் பொண்டாட்டி கிட்ட இதை பத்தி சொல்லி பீத்திக்கலாம்னு நினைச்சுகிட்டேயிருந்தாரு.  அவரு சர்ட் பேண்டை தோய்க்க  போட எடுத்த அவரு மனைவி பாண்ட் பாக்கெட்டுல கைய விட அதுல இருந்த லுல்லாவை பார்த்து “ஐயோ பெரியசாமி போய்ட்டியான்னு” அலறினாங்க.




99 -Hindi Film Reviewவை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

May 22, 2009

99 – Hindi Film Review

99-1783

அழகான ஸ்லீக், எண்டர்டெய்னிங்.. காமெடி, திரில்லர் பார்கக வேண்டுமா..? இதோ.. 99

செல்போன் சிம்கார்டிலிருக்கும் நம்பரை வைத்து டூப்ளீகேட் சிம்கார்ட் தயாரித்து விற்பவர்கள் குணாலும், எம்டிவி புகழ் சைரஸும்.  இப்படி ஒரு சிம்கார்டை மும்பை தாதா மகேஷ் மஞ்ரேகரிடம் விற்க, அதில் அவர்கள் மாட்டுகிறார்கள். அவரிடமிருந்து தப்பிக்க உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்று குணால், சைரஸும் சொல்ல, அவர்களை தாங்கள் கடன் கொடுத்தவ்ர்களிடமிருந்து பணம் வசூல் செய்யும் வேலையை தர, வேறு வழியில்லாமல் ஒத்து கொண்டு டெல்லி செல்கிறார்கள் இருவரும்.
 15ninety_600

டெல்லியில் ஒரு ஸ்டார் ஓட்டலில் தங்க, அங்கே வேலை செய்யும் சோஹலிடம் பழக்கம் ஏற்படுகிறது.  டெல்லியில் பணம் கொடுக்காமல் ஏமாற்றி கொண்டிருக்கும் போமன் ஈரானியிடம் பணம் வசூலித்து சொல்ல, அவர்களுடய பணம் டாக்ஸியில் திருடு போகிறது. சூதாட்ட பழக்கத்தின் காரணமாய் நிறைய இடத்தில் கடன் பட்டிருக்கும் போமனின் மனைவி அவனை விட்டு பிரிந்திருக்கிறாள். காணாமல் போன பணத்தை சம்பாதிக்க, போமனின் உதவியை நாடுகிறார்கள் குணாலும், சைரஸும். கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் செய்யும் ஒரு புக்கியை நம்பி வேறு ஒரு டிபால்டரான சினிமா நடிகர் ஒருவனிடம் தாதா சொன்னதாய் சொல்லி பணத்தை வாங்கி, மேட்ச் பிக்ஸிங்கில் கட்ட, இதற்குள் தாதாவுக்கு விஷய்ம் தெரிந்து, டெல்லி வர, போனிடம் எட்டு லட்ச ரூபாய் கடன் கொடுத்துவிட்டு பர்மெணண்டாக ஒரு அடியாளையும் வைத்து கொண்டு அலையும் ஒரு பைனாஸியர் இவர்கள் மூவரையும் துறத்த, மேட்ச் பிக்ஸிங்கில் குணால்  வெற்றி பெற்றானா? குணால் சோஹல் காதல் என்னவாயிற்று என்பதை சிரிக்க, சிரிக்க, சுவையா தந்திருக்கிறார்கள்.

M_Id_78978_99

சைரஸுன் ஒன்லைனர் காமெடி அவ்வப்போது நம்மை கிச்சு கிச்சு மூட்டுகிறது, அந்த ஆறாடி அடியாளுடன் அலையும் டெல்லி, பைனான்ஸியர் க்ளைமாக்ஸில் தன் பாடி லேங்குவேஜின் மூலம் கலக்குகிறார். போமன் வழ்க்கம் போல்.  சோஹலுக்கு பெரிதாய் சொல்லகூடிய வேடமில்லை.  மகேஷ் மஞ்ரேக்கர் பக்கா காமெடி தாதா. கலக்கியிருக்கிறார். ஹீரோ குணாலுக்கு சொல்லிக்கொள்ளும்படியான ஒரு படம்.

இரட்டை இயக்குனர்கள் ராஜ்நிடிமோரோ, கிருஷ்ணா இணைந்து இயக்கியுள்ள படம். திரைக்கதையில் ஆங்காங்கே இடைவேளைக்கு முன் தொங்குகிறது. இரண்டாம் பாதியில் வேகம் பிடிக்கிறது..போமனின் மனைவிக்கும், இடையே நடக்கும் காட்சிகள் கொஞ்சம் இழுவை. 2000 ஆண்டில் நடந்த கிரிகெட் புக்கி பிரச்சனையை அழகாய் திரைக்கதையில் நுழைத்து இருப்பது புத்திசாலிதனம்.

99 – செஞ்சுரி ஐஸ்ட் மிஸ்..

மீண்டும் இந்த பதிவை தமிழ்மணத்திலும்,த்மிலிஷிலும் இணைப்பவர்களுக்கு நேத்து சொன்னதேதான் ஊருக்கு போய்ட்டு வ்ந்து கவனிக்கிறேன்./font>





Blogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

May 21, 2009

பிரம்ம தேவா - திரைவிமர்சனம்

taovlodpgegto0t36k

டாக்டர் ராமிடம் யாரோ தவறாய் சொல்லியிருக்கிறார்கள். பல்லை கடித்து கொண்டு, உடலை முறுக்கி கொண்டு, கண்களை கண்ணுக்கு வெளியே கொண்டு வந்து மிரட்டியபடி பார்த்து நடித்தால் நீங்கள் இன்னொரு விக்ரம், அந்த படம் இன்னொரு அந்நியன் என்றும்.  ஏத்திவிட்டே சொந்த படமெடுக்க வைத்டிருக்கிறார்கள்.

இரண்டு நண்பர்கள், ஒருவரை ஒருவர் மீது ஆழ்ந்த அன்பு வைத்திருக்கிறார்கள், நண்பனின் வீட்டில் ஹீரோவும் ஒரு பிள்ளை போன்றே வளர்ந்து வருகிறான். ஹீரோவுக்கு ஒரு சில பேரை பார்க்கும் போது திடீர் திடீர் என்று வெறி பிடித்து அவர்களை தேடி பிடித்து கொல்கிறான். நடக்கும் கொலைகளை யார் செய்வது என்றே தெரியாமல் போலீஸ் அலைகிறது. இப்படி பட்ட நேரத்தில் ஹீரோ தனது ஆருயிர் நண்பனையே கொலை செய்ய முயற்சிக்கிறான். ஏன்? எதற்கு? என்பதை தைரியமிருந்தால் தியேட்டருக்கு சென்று படம் பார்த்து கொள்ளவும்.

Brama-Deva-tamil-mp3-songs

படம் ஆரம்பத்திலிருந்து ஒரு குழப்படியான திரைக்கதை, முன் ஜென்மம்,  படு அமெச்சூர்தனமான மேக்கிங்.. என்று ஆரம்ப காட்சி முதலே பின்னி பெடலெடுக்கிறார்கள். dental doctor ராம் தயாரித்து நடித்திருக்கிறார். நடிக்கிறேன் பேர்வழி என்று நம்மை இம்சை படுத்துகிறார். அதிலும், முன் ஜென்மத்தில் வரும் கிராமத்தான் சப்பாணி கேரக்டர். தாங்கலடா சாமி. படத்தில் வ்ரும் தேஜாஸ்ரீ மட்டும் தான் ஒகே.

போங்க சார். போங்க.. போய்..  நாலு பேருக்கு பல்லு புடுங்குங்க.. புண்ணியமா போகும்.

டிஸ்கி
இந்த பதிவை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும் இணைப்பவர்களுக்கு ஆயிரம் கட்டி வராகனும், ஷ்ரேயாவுடன் (?) ஒரு நாளூம் அளிக்கப்படும்





Blogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

பிரபாகரன் குடும்பமே அழிந்ததா..?

பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் டாக்டர் துவாரகா.. இளைய மகனின் உடல்களை பிரபாகரனின் உடல் கிடைத்த இடத்தின் அருகிலேயே  சிங்கள ராணுவம் அடையாளம் கண்டெடுத்தாக டைம்ஸ் நவ் ப்ளாஷ் நியூஸ் கொடுத்தது. ஆனால் அதை பற்றிய செய்தி எதுவும் கொடுக்கவில்லை. பின்பு சற்று முன் ஹெட்லைன்ஸ் டுடேவில் செய்தியாகவே காட்டினார்கள்.

கருணா அந்த செய்தியை உறுதிபடுத்தினார். அவர்களை பிரபாகரன் வெளிநாடுகளுக்கு எங்காவது அனுப்பியிருக்கலாம் என்றும், அவர்கள் மறைவுக்கு தான் மிகவும் வருந்துவதாகவும், கடைசி காலங்களில் பிரபாகரன் நிறைய முடிவுகளை தவறாகவே முடிவெடுத்தார் என்றும் பேட்டியளித்தார்.

ஏற்கனவே பிரபாகரன் மரணம் குறித்த சர்ச்சையே முடிவடையாத போது. அடுத்த அதிர்ச்சி???  உண்மை நிலையை புலிகள் சீக்கிரமே விளக்குவார்களா..? :(:(:(

May 20, 2009

இறந்தது பிரபாகரன் தானா..?

உலக தமிழர்கள் அனைவரிடத்திலும் இந்த கேள்வி மீண்டும், மீண்டும் எழுந்து கொண்டேயிருக்க காரணம் நிறைய இருக்கிறது. சிங்கள அரசாலும், சிங்கள ராணுவத்தினாலும் பிரபாகரன் கொல்லப்பட்டதாக சொல்லபட்ட விதங்கள், சம்பவங்கள் அனைத்து ஒன்றுக் கொன்று முரணாய் இருக்கிறது. இப்படிபட்ட முரணான  செய்திகளினாலே இம்மாதிரியான சந்தேகங்களை மக்களிடையே எழுப்பியுள்ளது.

நமது வட நாட்டு மீடியாவும், தங்கள் பங்குக்கு, நிறைய சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இறந்தது பிரபாகரனே இல்லை. அவரை போன்ற உருவமுடைய வேறொருவர் என்றும், வேறு யாரோ ஒருவர் முகத்தில் மாஸ்க் செய்திருக்கிறார்கள் என்றும் பல்வேறு தரப்பு வாதங்களும், வேண்டுதல்களும் , வீடியோக்களும் போட்டோக்களும் வெளிவந்து  கொண்டுதானிருக்கிறது.

இந்நிலையில் புலிகளிடமிருந்து பிரிந்து சிங்கள இராணுவத்துக்கு துணை போன கருணாவையும், சமீபத்தில் சரணடைந்த தயா மாஸ்டரை வைத்து இறந்த்து பிரபாகரன் தான் என்று உறுதிபடுத்தியுள்ளதாக படங்களோடு வெளியிட்டிருக்கிறது சிங்கள இராணுவம்.

நான் கூட பல சந்தேகங்களுக்கு அப்பார்பட்டு இறந்தது பிரபாகரன் என்று நம்பியிருந்த நேரத்தில் சிங்கள இராணுவம் வெளியிட்டுள்ள படத்தில் பிரபாகரனின் முகத்தில் லேசான வெண்  தாடி முளைத்து உள்ளது.  இறந்த பின் தாடி முளைக்குமா.. என்ன..?  விடுதலைபுலிகளிடமிருந்து உண்மையான செய்தி வரும் வரை இம்மாதிரியான செய்திகளூக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது.

19_karuna_daya  19dayamaster219dayamaster3

19dayamaster4

19dayamaster10

May 19, 2009

ராஜாதிராஜா – ஒரு பின்நவீனத்துவ திரைவிமர்சனம்

rajathi-raja-stills-1

டைட்டிலிலேயே லோகிளாஸ் கிங் என்று சொல்லிவிட்டதால் அதையும் மீறி படத்தில் அது நொட்டை இது நொட்டை என்று சொல்வது சாமி குத்தமாகையால் நொட்டை சொல்லாமல் படத்தை பற்றி பார்ப்போம்.

ராஜா தன் தந்தையின் ஆசைபடி.. தன்னுடய அண்ணன்களை டாக்டர், வக்கீல், போலீஸ் என்று படிக்க வைத்து பெரிய ஆளாக்குகிறார். ஆனால் அவர்கள் பெரிய ஆள் ஆகி சைதை சைலஜாவின் அல்லக்கைகலாய் இருந்து வ்ருவது தெரிந்து கொதித்தெழுந்து அவர்களை அழித்து எப்படி வெற்றி கொள்கிறான் என்பதே கதை..???.

rajathi-raja-stills-11

இப்படி தமிழ் சினிமாவின் பின் நவீனத்துவ படமாய்தான் எனக்கு படுக்கிறது.. ஏனென்றால் நிறைய இடங்களில் சமகால தமிழ் சினிமாவை கட்டுடைத்திருக்கிறார்.  வழக்கமாய் அண்ணன் தான் தன் தம்பிகளுக்காக, தான் படிக்காமல் தன் தம்பிகளை படிக்க வைத்து ஏமாறுவார். ஆனால் இந்த படத்தில் தம்பி அண்ணன்களை படிக்க வைக்கிறார். இப்படி ஆரம்பித்த கட்டுடைத்தல்கள், பல இடங்களில் உடைஅவிழ்த்தல் என்று பின்னி பெடலெடுக்கிறார்கள்.
mumtaj-043009-43

குத்தாலத்தில் கும்மாங்குத்து பெண்ணாய் நம்ம அடக்க ஒடுக்க மீனாட்சி..  முழுசாய் காட்டவில்லை அவ்வளவு தான். ம்ஹூம்.. ம்ஹூம்..  சூப்பர். இப்படியே காம்னா, கத்தாழ கண்ணாலே ஸ்னிகிதா என்று எல்லோருமே படம் பூராவும் கட்டுடைத்திருக்கிறார்கள்.
mumtaj-043009-48

லாரன்ஸ் தன்னை ஒரு ரஜினி ஜெராக்ஸ் என்றே நினைத்து கொண்டு இம்சை படுத்தி கட்டுடைக்கிறார். கருணாஸ் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறார். வில்லியா ஒல்லி மும்தாஜ்.. அவரது தமில் நல்ல கிக்.  ஆவூன்னா பொடவைய உருவிட்டு, உருவிட்ட உடம்பை காட்டிட்டி நிக்கிறது  ஷோக்காக்கீதுபா.. படம் முழுக்க எபக்ட் காரர்கள் மிகுந்த கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள் உஷ். புஷ். என்று ஒரே சத்தம் கொடுத்து.
 mumtaj-043009-27

இயக்குனர் சக்தி சிதம்பரம் தான் ஒரு பின்நவீனத்துவ இயக்குனர் என்பதை காட்சிக்கு காட்சி த்ன்னுடய் செக்ஸியான காட்சியமைப்பினாலும், லாஜிக்கே இல்லாத திரைக்கதையாலும், டபுள் மீனீங் வசனங்களிலாலும்,  படத்தில் வரும் ஹீரோயின்களின் மாராப்புகளை ஒன் சைட் ஓப்பனாய் காட்டி மாராப்புக்கு பின் என்ன என்பதை பின் நவீனத்துவ முறையில் இயக்கி பின்னி பெடலெடுத்திருக்கிறார்.

டிஸ்கி:

பின்நவீனத்துவம், கட்டுடைத்தல் போன்ற எழவுகள் என்றால் என்ன..? என்று கேட்பவர்களுக்கும்  ஏற்கனவே வழக்கத்திலிருக்கும் ஒரு வழமையை தவிர்த்து அதற்கு எதிராய் செய்வது. சமீப காலமாய் நல்ல படங்களாய் வந்து கொண்டு இருக்கும் காலத்தில் மீண்டும் பழைய ரஜினி பட மசாலாவுக்கு போய் அதையே புதிதாய் கட்டுடைத்து கொடுப்பது தான் .. என்ன எழவுடா.. எனக்கே ஒண்ணும் புரியல.. 

பசங்க படத்துக்கு இருந்த கூட்டத்தை விட இந்த நவீன பின்நவீனத்துவ படத்துக்கு நல்ல கும்பல். நம்ம மக்களும் பின் நவீனத்துவக்காரர்கள் ஆயிட்டாங்க..

May 18, 2009

காங்- திமுக கூட்டணி வெற்றி பெற்றது எப்படி.?

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெற்றிருப்பது பல பேருக்கு அதிர்ச்சியையும்,ஆச்சர்யத்தையும் அளித்துள்ளது. முக்கியமாய் திமுக நிச்சயமாய் பத்து சீட்டுகளுக்கு மேல வரவே வராது,  என்ற கிளி ஜோசிய ஹோஷ்யங்கள்  சொன்னவர்களின் வாயை அடைத்துவிட்டது தேர்தல் முடிவுகள். இப்படி மக்கள் முடிவு எடுத்தற்கான காரணங்கள் என்னவாய் இருக்கும்?

பொதுவாய் பார்த்தால் கடந்த ஐந்து ஆண்டுகால ஐக்கிய முண்ணனி  ஆட்சியை பற்றி பெரிய குறை சொல்லும் அளவிற்கான குற்றச்சாட்டுகள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் . பெட்ரோல், விலைவாசி, ரிஷச்ன் என்று பல குற்றச்சாட்டுகளை எதிர்கட்சி அரசியல்வாதிகள், சொல்லியிருந்தாலும் மக்களை பொறுத்தவரை பெரிதாய்  அவர்களின் குற்றசாட்டுகள் எடுபடவில்லை என்பதே உண்மை. அது மட்டுமில்லாமல் தற்போதைய ரிசெஷன் நேரத்தில் மீண்டும் ஒரு தொங்கு பாராளுமன்றத்தை கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தை கேள்விக்குறி ஆக்க வேண்டாம் என்கிற மக்களின் எண்ணமும் காரணமாய் இருக்கலாம்.

இதே நிலைதான் தமிழகத்திலும்.  திமுக ஆட்சியின் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் பெரிய எதிர்ப்பு அலையோ, அல்லது குற்றச்சாட்டோ இல்லை என்பதை ஒத்து கொள்ளத்தான் வேண்டும். பவர்கட், விலைவாசி, குடும்ப அரசியல் என்று வழக்கமான குற்றசாட்டுகளே இருந்த்து.  குடும்ப அரசியலை முன்வைத்து இங்கேயிருக்கும் முண்ணனி அரசியல் தலைவர்கள் யாருக்கும் பேச தகுதியில்லை ஜெயலலிதா உள்பட. ஏனென்றால் எல்லோருடய வாரிசுகளும் ஏதோ ஒரு வகையில் அரசியலில் அவர்களின் வாரிசாக இருந்து கொண்டுதானிருக்கிறார்கள். . பவர்கட் மேட்டர் நிச்சயம் குறை சொல்லபட வேண்டிய மேட்டர்தான்.  கோவை திருப்பூர் போன்ற ஏரியாக்களில் திமுகவின் வெற்றிக்கு எதிராய் இந்த பிரச்சனை  ஒர்க் ஆனது  என்னவோ நிஜம் தான்.

ஈழதமிழர்களை முன்வைத்து கடைசி கால பிரசாரங்கள் திமுகவை பின்னடைய வைக்கும் என்று நினைத்தது எதிர்கட்சிகள்,  திமுக தலைவரும் அதற்கு ஏற்றார் போல் உண்ணாவிரதம் இருந்தது பெரும் காமெடியாய் போனது. ஆனால் அதையெல்லாம் மீறி ஜெயலலிதா தனி ஈழம் அமைப்போம் என்று சொல்லி ஓட்டு கேட்டது மிகப் பெரும் காமெடியாய் போனதால் கலைஞரின் காமெடி சப்பையாகி போய்விட்டது. ஈழ தமிழர்கள் பிரச்சனை கண்டிப்பாக தேர்தலில் எடுபடாது என்பது  பற்றி என் நண்பர்களிடம் பல முறை சொல்லியிருக்கிறேன்.  உள்ளூர் தமிழர்களின் பிரச்சனையே பெரும் பிரச்சனையாய் இருக்கும் போது ஈழ தமிழர்கள் பிரச்சனையை முன் வைத்து ஓட்டு அரசியல் எடுபடாது என்பது உண்மையாகிவிட்டது. இதை சொன்னதற்காக தமிழின துரோகியாய் கூட என்னை நினைக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை ஈழதமிழருக்காக உருகும் கோடிக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன்..

அதிமுக, பமகவின் தோல்விக்கு மிகப் பெரிய ஸ்பாய்லர் விஜயகாந்த், போட்டியிட்ட எல்லா தொகுதிகளிலும், மூன்றாவது இடத்தில் இருக்கும் அவரின் கட்சி முக்கிய பங்கு வகுத்தது என்றால் அது மிகையாகாது. இப்படியே இவர் மெயிண்டெயின் செய்தால் நிச்சயமாய் 2016 முதலமைச்சர் ஆக் வாய்ப்ப்பிருக்கிறது என்றே தோன்றுகிறது.

இந்த தேர்தல் முடிவுகளில் திமுகவின் வெற்றியை விட சந்தோஷம் தந்த செய்தி பமகவின் வாஷ் அவுட்.  இந்த முடிவு நிச்சயமாய்  அவர்கள் செய்யும் அரசியல் தில்லாலங்கடிகளுக்கு ஒரு முற்று புள்ளி வைக்கும் என்று தோன்றுகிறது. மம்மி எலக்‌ஷன் முடிந்ததும் எட்டி ஒதைத்தாலும், சகோதரி உதைத்த இடத்தை தடவி விட்டு கொண்டு, இருந்தாக வேண்டும் இல்லைன்னா பமக என்றொரு கட்சி காணாமல் போய்விடக்கூடிய  வாய்ப்பு இருக்கிறது. இன்னொரு சந்தோஷ விஷயம், தங்கபாலு,  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரின் தோல்வி.. சிதம்பரம் ஜஸ்ட் மிஸ்.

இந்த தேர்தல் முடிவுகள் பற்றி பலர் பல கணிப்புகளை கணித்திருந்தாலும், சரியாய் கணித்தவர் எனக்கு தெரிந்து நம் பதிவர்களில் லக்கியும், அப்துல்லாவும் தான். என்னுடய் கணிப்பு 20 சீட்டுகள் என்றிருந்த நேரத்தில் லக்கி 25 மேல் என்றும், அப்துல்லா அரித்மெடிக்கலாய் 32 சீட்டுகள், கடைசி நேர எமோஷனல் முடிவில் ஏதேனும் சிறிய மாற்றம் என்றால் 29 என்றார். லக்கி, அப்துல்லாவின் கணிப்பு  ஆல்மோஸ்ட் ரீச். இருவருக்கும் வாழ்த்துக்கள்

டிஸ்கி

பமகவின் தோல்விக்கு இன்னொரு முக்கிய காரணம் அவர்கள் வெற்றி பெற்றால் மதுவிலக்கு வந்துவிடுமோ என்ற பயத்தில் ஏற்கனவே  பலபேர் நாட்டு பிரச்சனை, ரிசஷன், வீட்டு பிரச்சனையையெல்லாம் கட்டிங்க் அடித்தும், புகைவிட்டும் ஆத்தி கொண்டிருப்பதை  இவர்கள் கெடுத்து விடுவார்கள் என்று யோசித்து  ஆண் வாக்காளர்கள் எல்லாம் வரிந்து கட்டி கொண்டு  பமகவுக்கு  எதிராய் ஓட்டு போட்டிருக்கிறார்கள் என்று உளவு துறை செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

ஹி.. ஹி.. ஹி….





கொத்துபரோட்டா 15/05/09 ஐ படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

May 16, 2009

சர்வம் - திரைவிமர்சனம்

81B760E1B673431CE8B15A8E5B591F

இயக்குனர் விஷ்ணுவர்தனின் பில்லாவுக்கு பிறகு வெளிவந்திருக்கும் படம். பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்த படம். சர்வம். மனிதனின் வாழ்க்கையில் ஒரு நொடியில் நடக்கும் சம்பவங்கள் அவர்களின் வாழ்கை பாதையையே மாற்றிவிடும். அப்படி மாறும் நேரத்தில் அவர்கள் வாழ்க்கையை எப்படி எடுத்து கொள்கிறார்கள் என்பதே கதை.
3357139024_8c00c9fb48

ஒரு விபத்தில் தன் மனைவியையும், குழந்தையும் பறிகொடுத்த ஈஸ்வர், அந்த விபத்துக்கு காரணமானவரின் பத்து வயது இதய நோய்  பிரச்சனையுள்ள பையன். தன் மகனை இழந்ததால் உன்னையும் உன் மகனையும் பிரிப்பேன் என்று அந்த பத்து வயது சிறுவனை கொல்ல அலையும் ஈஸ்வர்.  ஒரு சக்ஸஸ்புல் ஆர்கிடெக் கார்த்திக், அவன் துறத்தி, துறத்தி காதலிக்கும் டாக்டர் சந்தியா.. இவர்களுக்கு இடையே நடக்கும் ஒரு சம்பவம் எப்படி ஒரு இணைப்பு உருவாகி அந்த பத்து வயது சிறுவனை ஈஸ்வரிடமிருந்து காப்பாற்ற கார்த்திக் போராடுகிறான் என்பதை வெள்ளிதிரையில் பாருங்கள்.
 

முதல் பாதி முழுவதும் இரண்டு கதைகளாய் பயணிக்கும் திரைக்கதை, இடைவேளைக்கு பிறகு ஒரு கோட்டில் பயணிக்கிறது. முதல் பாதி முழுவதும் கார்த்திக்குக்கும், சந்தியாவுக்கும் இடையே நடக்கும் காதல் காட்சிகள் ஆங்காங்கே இளமையாய் இருந்தாலும், இண்ட்ரஸ்டாக இல்லை, அந்த சர்ச் காட்சி இதயத்தை திருடாதே வை ஞாபகமூட்டுகிறது.

நான் கடவுளில் உக்கிரமாய் பார்த்த ஆர்யா இதில் இளமை துள்ளும் இளைஞனாய், அசப்பில் சில காட்சிகளில் ஆண்டனியோ பண்ட்ரஸ் போல் இருக்கிறார். பெரிதாய் நடிப்பதற்கு முயற்சி செய்திருக்கிறார். திரிஷா வரும் காட்சிகளில் எல்லாம் ஒரு விதமான மென் சோகத்துடன் அழகாய் இருக்கிறார். மற்றபடி சொல்லிக் கொள்ளும்படியாக எதுவுமில்லை.3356320675_f0489fd4a0

தெலுங்கு நடிகர் ஜே.டி.சக்ரவர்த்தி அமைதியாய், ஆர்பாட்டமில்லா வில்லத்தனத்தை ஒரு அடிபட்ட பார்வையிலேயே வெளிபடுத்துகிறார். அவர் கொல்ல துடிக்கும் சிறுவன் அவ்வளவு ஸ்மார்ட் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.  அவனின் அப்பாவாக பிரிதிவிராஜின் அண்ணன்.. அப்படியே வயசான பிரிதிவிராஜ் மாதிரி இருக்கிறார்.

சர்வத்தின் ஹீரோ.. ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா தான். இளமை துள்ளும் காதல் காட்சிகளாகட்டும், இரண்டாம் பாதியில் வரும் சேஸிங்காகட்டும் மனுஷன் பின்னியிருக்கிறார். அதிலும் திரிஷாவின் ஹாஸ்பிடல் காட்சிகளில் ஒரு வெயிட் பிளீச் கொடுத்து, ஒரு விதமான ஏஞ்சலிக் பீல் ஆகட்டும், மூணாறு காட்டில் நடக்கும் சேஸிங், ஆக்‌ஷனாகட்டும்  சூப்பர்ப் நீரவ்.

316924B135DE57871E98A8130E06D

பிண்ணனி இசை தவிர யுவன் இப்படத்தில் ஒரு லெட்டவுன் தான். பல இடங்களில் இளையராஜாவின் இசை என்று சொல்லியே பயன்படுத்தும் காட்சிகள், பிண்ணனி இசைக்கு ராஜாவை விட்டால் இன்னொருவர் வரவில்லை என்பதை நிருபணமாக்குகிறது.

ஆர்யா திரிஷாவை பார்கும் போதெல்லாம் பிண்ணனியில் இளையராஜா இசை பாடுவதும், ஸ்பைடர்மேன், பேட்மேன் போன்ற சூப்பர் ஹீரோக்களில் ரஜினிகாந்தையும் சேர்த்து கலாய்ப்பது, ஆர்யாவின் ந்ண்பர் சிம்பு படத்து வர சொல்ல, காதலுக்காக  தான் தற்கொலை செய்யப்போவதாய் சொல்ல, அதை கவனிக்காத நண்பன் டேய் அப்படின்னா அஜித் படத்துக்கு டிக்கெட் வாங்குகிறேன் என்பதும் சரி காமெடி.

காதல் படமாய் ஆரம்பித்து, பாரலலாக ஒரு திரில்லரை சொருகி இரண்டு கதைகளை சொல்ல ஆரம்பித்து, பின் ஒர் நேர் கோட்டில் பயணிக்கும் படியான திரைக்கதையில், இரண்டு கதைகளிலும் மனதை ஆக்கிரமிக்கும் ஆணித்தரமான காட்சிகள் வேண்டும். அது இல்லாத்தால் பரபரவென பறக்க வேண்டிய படம் தொங்கி போய் யார், யாரை கொன்றால் என்ன, காப்பாற்றினால் என்ன என்று நிற்கிறது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் விஷ்ணு.

சர்வம் – கிருஷ்ணார்பணம்

டிஸ்கி

ஐங்கரன் கம்பெனிக்கு யாரோ சூனியம் வைத்து இருக்கிறார்கள் போலிருக்கிறது. இல்லைன்னா இப்படி ஊர்ல இருக்கிற பெரிய டைரக்டர், பெரிய ஆர்டிஸ்ட் என்று எல்லாரையும் வச்சு படங்கள எடுத்தும், இன்னைய வரைக்கும் அவர்களால் ஒரு ஹிட் கூட கொடுக்க முடியவில்லை. இவர்கள் இழந்தது சில நூறு கோடிகள்.  இன்னும் பாக்கி இருக்கிறது மிஷ்கினும், தங்கர்பச்சனும்தான். யாராவது காப்பாத்துங்கப்பா





கொத்துபரோட்டா 15/05/09 ஐ படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

May 15, 2009

கொத்து பரோட்டா – 15/05/09

தமிழா.. தமிழா..

ஒரு சந்திப்பின் போது எடிட்டர் சுரேஷ் அர்ஸ் சொன்ன விஷயம். ரோஜா படத்தின் எல்லா ஷூட்டிங் வேலையும் முடிந்துவிட்டது கடைசியாய் ஒரு பாடல் மட்டுமே எடுக்க வேண்டியிருக்க, மணிரத்னம் செட் போட சொல்லிவிட்டார். ஆனால் எடிட்டருக்கோ அந்த பாட்டு படத்தின் ஓட்டத்தை குறைப்பது போல் தோன்றியிருக்கிறது. அதனால் தன் கருத்தை இயக்குனரிடம் சொல்லியிருக்கிறார். மிகவும் யோசித்த இயக்குனர் எடிட்டர் சொன்னதை கருத்தில் எடுத்து கொண்டு ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டார். ஆனால் படத்தில் அந்த பாடல் கண்டிப்பாய் வேண்டும் என்று சொல்ல, புதிதாய் ஷூட் செய்யாமலேயே அந்த பாடலை அருமையாய் பயன்படுத்தியிருப்பார். எடிட்டர். அந்த பாடல் “தமிழா. தமிழா நாளை நம் நாளே..” பாடல். என்ன ஒரு ஸிங்க்…

******************************************************************
சில சமயம் சில படங்களை ரிலீஸுக்கு முன்னாலேயே பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்து விடுவேன். சில படஙக்ளை பார்க்க கூடாது என்றும், சில படங்கள் வேறு வழியில்லாமலும் பார்க்க வேண்டிய கட்டாயம் வந்து தொலைத்துவிடும். அப்படி ரிலீஸுக்கு முன்னால் பார்க்கணும் என்று நினைத்து நொந்து போன படம் ‘மெய்பொருள்” முழுக்க, முழுக்க, அமெரிக்காவில் எடுக்கப்பட்ட படம், கண்டிப்பாய் ஒரு வித்யாச்மான படமாய் அமைந்திருக்கும் என்று எதிர்பார்த்து ஒரு ’சி’ கிரேட் படமாய் இருந்தது. அடுத்து பார்கவே கூடாது என்று அப்படத்தின் விளம்பரத்தை பார்த்ததுமே முடிவு செய்து விட்டேன். அது வேறு எந்த படமும் இல்லை நம் தலைவர் விஜய்காந்த் நடித்த ‘மரியாதை” படம் தான் விஜயகாந்த் தலை விக்கை பார்த்தாலே பினங்கால் பிடறி பட ஓட வேண்டும் போலிருந்த்து.  இதுவரைக்கும் பல சதிகள் செய்யப்பட்டு அதிலிருந்து தப்பி வந்து கொண்டிருக்கிறேன்.  அடுத்து  வேறு வழியில்லாம் பார்த்த படம் குரு என் ஆளு ஏற்கனவே ஹிந்தியில் யெஸ் பாஸாய் பார்த்த படம் தான் என்றாலும் படு அவசரத்தில் எடுக்க பட்ட படமாகவே தெரிந்தது. படு சொதப்பல். ஆங்காங்கே வரும் விவேக் நகைச்சுவை காட்சிகளை தவிர. அஸிஸ்மிஸ்ராவின் ஒரிஜினல் ஹிந்தியை ஏற்கனவே பார்த்திருக்கிறேன் அதனால் ஒரிஜினலை திட்ட மாட்டேன். ம்ஹூம் வேற என்ன எனன காத்திருக்கோ.?

****************************************************************

ஏ..ஜோக்

பேஷண்ட் ஒருவன் மிகுந்த தலைவலியுடன் டாக்டரை பார்க்க வர, 
டாக்டர் : கவலையே படாதே.. இதற்கு ஒரு அருமையான் இன்ட்ரஸ்டான ட்ரீட்மெண்ட் இருக்கு. எனக்கு கூட இந்த மாதிரி தலைவலி வந்து கொண்டிருந்தது. அப்போதெல்லாம்  நான் என் மனைவியிடம் ஓரல் செக்ஸ் செய்வேன் அவள் உச்சத்தை அடையும் போது என் தலையை தன் தொடைகளுக்கு நடுவில் வைத்து அழுத்துவாள். தலையில் உள்ள நரம்புகள் அவளின் தொடை கொடுக்கும் பிரஷரில் தலைவலி போய்விடும் இதை ரெண்டு வாரம் ட்ரை பண்ணிட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க என்றார்.

இரண்டு வாரம் கழித்து வந்த பேஷண்ட் மிகுந்த சந்தோஷத்துடன். “டாக்டர். என்ன ஒரு அருமையான ட்ரீட்மெண்ட். அற்புதம, இப்போதெல்லாம், எனக்கு தலைவலி வந்தாலும் கவலைபடுவதேயில்லை. மிக்க நன்றி டாக்டர்.. என்று சொல்லிவிட்டு கிளம்பும் போது “ பைத வே  உங்க  வீடு ரொம்ப அருமையாய் இருக்கு டாக்டர்” என்றான்

ஜோக்


கணவன் மனைவி இருவரும் ஒரு ரெஸ்டாண்டில் சாப்பிட்டு கொண்டிருக்க, பக்கத்து டேபிளில் ஒருவன் குடித்து கொண்டிருப்பதையே பார்த்து கொண்டிருக்கும் மனைவியிடம்..”உனக்கு தெரிந்தவரா..?” என்று கணவன் கேட்டான். அதற்கு மனைவி பெரூமூச்சுடன் “ ஆம் அவ்ன் என் முன்னாள் கணவன். என்னைவிட்டு பிரிந்ததிலிருந்து கடந்த ஏழு வருடமாய் இப்படித்தான் குடித்து கொண்டிருக்கிறான்” என்று சொல்ல,

கணவன்: ”எனக்கு தெரிந்து யாருமே தன் சந்தோஷத்தை இவ்வளவு வருடம் கொண்டாடி பார்த்ததேயில்லை..:” என்றார்ன்





Kick Telugu Film Reviewவை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

May 14, 2009

விகடனில் நம்ம Kutty கதை

GoogleyEyes

நானெல்லாம் எழுதி எவன் படிப்பான் என்று நினைத்து பல காலம் முன்பே ப்ளாக் ஆரம்பித்தும் எழுதாமல் இருந்தவன்  பின்பு திடீரென்று ஒரு குருட்டு  தைரியத்தில்  பதிவுகள் எழுத ஆரம்பிக்க, அதற்கு சக பதிவர்கள், வாசகர்களாகிய நீங்கள் கொடுத்த அன்பும், ஆதரவும் என்னை மேலும் ஊக்க படுத்த.. இதோ என்னுடய முதல் படைப்பு குட்டிகதையாய் ஆனந்த விகடனில்.

குட்டு பட்டாலும் மோதிரகையால் குட்டு படவேண்டும் என்பார்கள்.  அதனால் தானோ என்னவோ,, மோதிரகையால் ‘குட்டி’ கதையாய் குட்டு பட்டிருக்கிறேன்.  முதல் முதலாய் தன்னுடய படைப்பு வெளிவரும் போது இருக்கும் பதட்டம் என்னுள் அவ்வளவாய் இல்லை.. ஏனென்றால் திரைதுறையில் சில முதல்களை அந்த பதட்டத்தோடு பார்த்து அனுபவித்திருந்ததினால்  என்றாலும், விகடனில் என்னுடய கதை என்றதும் கொஞ்சம் ஆனந்த பதட்டம் அடைந்ததென்னவோ நிஜம் தான்.. கையில் அந்த இதழை புரட்டி புரட்டி  பார்க்கிறேன். ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய விஜபி பற்றிய தொடர் வரும் பகுதியில் என்னுடய கதை வந்திருப்பது   எனக்கு  ஆனந்தம்  கண்டிப்பாய் எல்லோரும் படிக்கும் பக்கத்தில் நாம் இருப்பது பெரிய விஷயமில்லையா..? (சினிமாக்கரன் புத்தி..?)

நண்பர் பரிசலின் கதையும், இன்னொரு பதிவரான கே.ரவிஷங்கரின் கவிதைகளும் இவ்வார ஆனந்த விகடனில் வெளிவந்து இருக்கிறது. அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். மேலும் பல பதிவர்களின் படைப்புகள் பத்திரிக்கைகளில் வர வாழ்த்துகிறேன். விரைவில் ஒரு நல்ல சிறுகதை விகடனில் எழுத வேண்டும்.

முதல் வாழ்த்து சொல்லி பதிவை போட்டு என்னையும் பெருமை படுத்திய முரளிகண்ணனுக்கும், குறுஞ்செய்தி மூலமாகவும், போனிலும் வாழ்த்திய, நர்சிம், சஞ்செய்காந்தி, பரிசல், சுகுமார், வெண்பூ, டக்ளஸ், மேலும் வாழ்த்த  போகும் நல் உள்ளங்களுக்கும் நன்றி நன்றி.. நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இல்லை..

May 12, 2009

மெய்பொருள் - திரைவிமர்சனம்

 

meiporul-2456 குழந்தையை கடத்தும் ஒரு பெண்னைபற்றி கதாநாயகி தகவல் கொடுத்து அவள் பிடி படுகிறாள். பத்திரிக்கை கார மனைவியும், நியூரோ சர்ஜன கணவன், மிக அன்னியோன்யமான தம்பதிகள், ஒரு நாள் பாரில் ஒருவன் அறிமுகமாகிறான். தனக்கு ஈ.எஸ்.பி பவர் உள்ளதாகவும், தான் சொல்வதெல்லாம் நடக்கிறது என்று சொல்கிறான். பின்பு அவன் சொல்லும் விஷயங்கள் எல்லாம் நடக்க, அவன் மீது நம்பிக்கை கொள்கிறான். ஒருநாள் அவன் கதாநாயகனை அழைத்து அவன் இன்னும் 10 நாட்களில் இறக்க போவதாகவும், அதற்கு காரணம் அவனது மனைவி என்று சொல்கிறான்.  அவன் சொன்னபடி நடந்ததா இல்லையா என்பதே கதை.

meiporul

சொல்லும் போது பரபாப்பாக இருப்பது போல தோன்றும் கதை. படத்தை பார்க்கும் போது ஆமை ஸ்லோ.. அதிலும் முழுவது புது முக நடிகர்கள், ஆளுக்கு 2000$ கொடுத்து நடிதிருப்பார்கள் போலிருக்கிறது. படு அமெஞ்சூர் தனம்.  ஹைடெபனிஷன் டிஜிட்டல் கேமராவில் படம்பிடித்திருகிறார்க்ள். படம் முழுவதும், கலிபோர்னியாவிலும், சான் ப்ரான்சிஸ்கோவிலும் எடுத்திருக்கிறார்கள். எந்த இடத்திலும் நகருவேனா என்கிறது திரைக்கதை. பாதி நேரம் இங்கிலீஷிலேயே பேசிக் கொள்கிறார்கள். எடிட்டர் லெனின் படு பயங்கர முயற்சி செய்தும்  படத்தின் பேஸை காப்பாற்ற முடியவில்லை. பிண்ணனி இசை இங்கிலீஷ் சீரியல். ஒளிப்பதிவு ஸோ.. ஸோ..

நடிப்பில் எல்லோரும் அரை செகண்ட் கழித்துதான் ரியாக்‌ஷன் கொடுக்கிறார்கள் அதில் தரனாக வரும் நடிகர் பரவாயில்லை. மிக இயல்பாய் நடித்திருக்கிறார். ஒரு வேளை மற்றவர்களின் நடிப்பை பார்த்ததினால் அப்படி தெரிகிறாதோ என்னவோ..

Latest-Meipporul-2

இயக்குனர்கள் நட்டி குமாரும் & கிரிஷ் பாலாவும் பணம் போட்டிருப்பதால் இயக்குனர்கள் ஆகியிருக்கிறார்கள். நட்டி குமார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

Latest-Meipporul-10

படத்தின் விளம்பரங்களில் “தமிழ் சினிமாவின் தலையெழுத்தை மாற்றப்போகும் படம்” என்று விளம்பரபடுத்தியிருக்கிறார்கள்… தமிழ் சினிமாவின் த்லையெழுத்து இவர்கள் வந்து மாற்றும் அளவுக்கு மோசமாய் இல்லை என்பதை தயை கூர்ந்து யாராவது சொல்லுங்கப்பா. முடியலை.

மெய்பொருள் – காண்பதறிவு.
 

டிஸ்கி:

படம் முடிந்து எழுத்து பிக்சர் முடியிற வரைக்கும் நானும் இன்னொருவரும் பார்த்து கொண்டிருந்தோம். வெளியே வந்த போது அவர் நொந்து போய் என்ன சொல்ல வர்றாங்க சார்.. ஒண்ணும் புரியலையே என்று சொல்ல, நான் படத்தின் கதையை கடகடவென சொல்ல, இது நல்லாருக்கே இதுவா படத்தோட கதை என்றார். அவரும் ஒரு தயாரிப்பாளர் இயக்குனர் சமீபத்தில் வெளியான விக்னேஷ் நடித்த குடியரசு திரைப்படம் அவருடையதுதான். கார்டெல்லாம் கொடுத்து பிறகு பேச சொன்னார். நான் குடியரசு படத்தை பார்க்கவில்லை.

May 11, 2009

நிதர்சன கதைகள்-7- காளிதாஸ்

Drunken_Nights_by_Dan14Lev

காளிதாஸுக்கு போதை ஏறிவிட்டால பாட்டு பின்னியெடுப்பார். டாஸ்மாக் மூடும்வரை அவரை சுற்றி ரசிகர் பட்டாளம் ஏறிக் கொண்டேயிருக்கும். இன்றைக்கும் அப்படித்தான் மனுஷன் ஆரம்பித்துவிட்டார். ‘காயாத கானகத்தே” என்று, சுருதி சுத்தமா ஹைபிட்சில் எடுக்க ஆரம்பித்தார்.

காளிதாஸ் ஒரு ஆர்கெஸ்ட்ரா அமைப்பாளர்.  நானும்  ஒரு ஆர்கெஸ்ட்ரா ‘சங்கமம்’ என்கிற  பெயரில் நடத்துகிறேன்.  இந்த ஆர்கெஸ்ட்ராவின் மொத்த உறுப்பினர்கள்  நானும் என் ஆர்கெஸ்ட்ரா பேனர்  மட்டும்தான்  மற்றவர்கள் எல்லாம் ஒவ்வொரு கச்சேரிக்கும் காளிதாஸிடம் சொல்லிவிட்டால் கிடாரிஸ்ட், டிரம்ஸ், கீ போர்டு மேல் சிங்கர், ஃபீமேல் சிங்கர், எல்லாரையும் நம் பட்ஜெட்டுக்கு ஏற்றார் போல் அசெம்பிள் செய்துவிடுவார். கச்சேரியை ஏற்பாடு செய்ததற்கு ஒரு அமெளண்டும், மற்ற ஆட்களிடமிருந்து ஒரு அமெளண்டும்  கட்டிங் போட்டு விடுவார். குறைந்தது ஒரு சின்ன கல்யாண கச்சேரிக்கு அயிரமாவது தேறும்.  வரும் மாதம் திடீரென ஒரு வெளியூர் கச்சேரி அதற்கு ஆள் பிக்ஸ் செய்யணும் அதனால் காளிதாஸை அழைத்து சொல்ல, அவரை  வடபழனி டாஸ்மாக்கிற்கு வர சொல்லியிருந்தேன். அங்கே அவரை கவனித்தால் ரொம்பவும் ஃபீல் பண்ணி, நல்ல சிங்கர்களையும், கீ போர்ட் ஆளையும் தேடிப்பிடித்து சீப்பாய் பேசி முடிப்பார். கொஞம் அமெளண்டை அட்ஜஸ்ட் செய்யலாம். காயத கானகத்தே வை முடித்திருந்தார்.

”அண்ணே.. என்னா வாய்ஸ்ண்ணே.. உங்க முன்னாடி நானெல்லாம் பாடறேன்னு சொல்றதே அதிகபிரசிங்த்தனம். தண்ணியடிச்சு கூட சுருதி சுத்தமா பாடறீங்களே.? என்று அவரை புகழ்ந்தேன். நிஜமாகவே பல சமயம்  அவரது இசை ஞானத்தை கண்டு பிரம்மித்திருக்கிறேன்.

”அடிசாத்தாண்டா சுருதி சுத்தமா வரும். நான் பாக்காத பாடகனாடா..?  ராஸ்கல். அடியை பின்னிவிட்டுருவேன்” மப்பு ஏறிவிட்டால் அன்பு ஜாஸ்தியாகிவிடும்.

“இப்ப பாடறவனெல்லாம் என்னா பாடறான். சேர்ந்தாப்புல இரண்டு நிமிசம். தம் கட்டி ஹம்மிங் மட்டும் பண்ண சொல்லேன், முக்கிற முக்கில வேற ஏதாவது வருமே தவிர ஹம்மிங் வராது.  தோ.. இன்னைக்கு பாடறானே.. பப்பு சர்மா...  ரஹ்மான் கிட்ட அவன எல்லோரும் ஆஹா.. ஓஹோன்னு சொல்றீங்க.. ட்ராக் பாடிகிட்டிருந்தான். தம் அடிச்சி அடிச்சி.. ஹைபிட்சுல பாட முடியாம, இருந்தவனை கூப்ட்டு, புத்தி சொல்லி பாட வச்சேன். இன்னைக்கு அவன் எங்கயோ. நான் எங்கயோ.. டேய்ய்.. நீ என் தம்பிடா. . நீயும் நல்லா வருவே..  இன்னொரு குவாட்டர் சொல்லு..: என்று ஆப்பாயிலை லாவகமாய்  லவுட்டி லபக்கினார்.

அவர் சொன்னது முற்றிலும் உண்மை. அவருக்கு தெரியாத இசையமைப்பாளர் கிடையாது. நான் நிறைய பல முறை அவருடன் பாடுவதற்காக வாய்ப்பு கேட்டு அலையும் போது பாத்திருக்கிறேன். எவ்வளவு பெரிய இசையமைப்பாளரும் அவருக்கு ஒரு முக்யத்துவம் கொடுத்து பேசுவதை கவனித்திருக்கிறேன்.

“ஏன்ணே.. இவ்ளோ பெரிய மியூசிக் டைரக்டரையெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க.. உங்க குரலுக்கு நீங்களே ஒரு பெரிய பாடகராயிருக்கலாமில்லண்ணே.?”

அண்ணன் விரக்தியாய் சிரித்து “ ஆயிருக்கலாம். ஆனா விதி விடலையே.. இளையராஜாகிட்ட ரொம்ப நாள் அலைஞ்சு ஒரு முறை சான்ஸ் வந்து கூப்டப்ப..  அப்பெல்லாம் செல்லு ஏது. பக்கத்து வீட்டுக்க்காரன் வீட்டு நம்பரைதான் பி.பி நம்பரா கொடுத்திருந்தேன். அவரு பொண்டாட்டிக்கும்  எனக்கும் கொஞ்ச நாளா லைன் ஓடிட்டிருந்த்து, வயசு பாரு..  நான் அப்ப ஏசுதாஸ் கணக்கா தாடியெல்லாம் வச்சு ஒரு மாதிரி நல்லாத்தான் இருப்பேன். விஷயம் அரச புரசலா எல்லாருக்கும் தெரிஞ்சிருந்தது. போனை எடுத்தவன் அவ புருஷன். கோவத்துல அவரு வீட்ட காலி பண்ணிட்டாருன்னு சொல்லிட்டான்.  அவன் மட்டும் சொல்லியிருந்தான்னா. இன்னைக்கு நான் எங்கயோ.. என்ன பாட்டு தெரியுமா.?  “சின்ன பொண்ணு சேலை.. செம்பருத்தி போல”  என்று பாட ஆரம்பித்து திடீரென நிறுத்தி, சிரித்து அதுல ஒரு காமெடியென்ன தெரியுமா.  நான் ஓட்டிட்ட்ருந்த பொண்ணு பெரு சின்னப்பொண்ணு. நல்ல கருகருன்னு பாம்பு மாதிரி உடம்பு..  இன்னொரு குவாட்டர் சொல்லேன்.” என்று சொல்லிவிட்டு தனக்குள்ளே சிரித்தார். ஒரு வேளை சின்ன பொண்ணுவை நினைத்திருப்பார் போலும்.

“அண்ணே.. ஏற்கனவே முக்கா அயிருச்சுண்ணே. ஜாஸ்தியாயிருச்சு.”

“அப்ப. வாங்கி தர மாட்டேயில்லை.. நீ என்னடா வாங்கிதர்றது வெண்டர்.. நான் வாங்கறேன்.. டேய்ய்.. தம்பி இங்க வா.. வா.. என்று அவரை கிராஸ் செய்து போன யாரையோ அழைத்து, “ஒரு குவாட்டர் எம்.சி”  என்று பையிலிருந்து நான்கைந்து நூறு ருபாய் நேட்டுக்களை அவரிடம் திணிக்க,

நான் அவரை அனுப்பிவிட்டு காளிதாஸை உட்காரவைத்துவிட்டு போய் வாங்கி வந்தேன். தண்ணி  கலக்காமல் முக்கா கிளாஸுக்கு சரக்கை ஊற்றி ஒரே கல்பாய் குடித்துவிட்டு கிளாஸை வைத்தார். இவரின் திறமைக்கு இவரின் குடிபழக்கம் மட்டுமில்லாவிட்டால் அவருக்கான மரியாதையே தனிதான். என்ன செய்வது சில பேரின் வாழ்க்கையையே பல சமயம் அவர்களின் வீக்னெஸ் புரட்டி போட்டு விடுகிறது. அடுத்த குவாட்டரையும் அடித்து முடித்துவிட்டு, எழுந்து நடக்கக்கூட முடியாத அளவுக்கு குடித்திருந்தார். குழறலாய் ‘ராஜ ராஜ சோழன் நான்” என்று பாடியபடி இருந்தவரை கைத்தாங்கலாய்  வெளியே அழைத்து வந்து  வண்டியில் ஏற்றி விட்டுவிடலாம் என அவரை என் வண்டியில் ஏறச் சொல்லி அவரை அழைத்தேன். நான் சொல்வது காதிலேயே விழவில்லை. பார்கவே பரிதாபமாய் இருந்தது.

“அண்ணே.. கேட்குறேன்னு தப்பா நினைக்காதீங்க.. நாம வாழ்கையில தோத்துட்டோம்னு குடிச்சு குடிச்சு உங்களையே அழிச்சிக்கிறீங்க.. எவ்வளவோ பேருக்கு உங்களால பெரிய வாழ்க்கை கிடைச்சிருக்கு. உங்களுக்கு இல்லாட்டாலும்.. நாளைக்கு உங்க பசங்களுக்கு உங்களுக்கு  கிடைக்காத வாழ்க்கையை கடவுள் கொடுப்பார்ண்ணே..” என்றவுடன் அடிவயிற்றிலிருந்து பெருங்குரலெடுத்து, “அந்த தேவடியாபையன் அதிலேயும் என்னை ஏமாத்திட்டானே” என்று சொல்லியபடி தரையில் புரண்டு அழ ஆரம்பித்தார். அவரை சமாதானபடுத்தி ஆட்டோ பிடித்து வீட்டில் விட்டுவிட்டு
திரும்பும் போது நானும் கடவுளை அவர் திட்டியது போல் திட்ட வேண்டும் என்று தோன்றியது. காளிதாஸின் ஒரே பையன் செவிட்டு ஊமை.





Kick Telugu Film Reviewவை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

May 9, 2009

Kick – Telugu Film Review

kickreview

தன் நண்பனின் திருட்டு காதல் திருமணத்துக்கு உதவுகிறேன் பேர்விழி என்று, அவர்களின் ப்ளான் எல்லாவற்றையும் பெண்ணின் அம்மாவுக்கு தெரியபடுத்தி, கடைசி நேர சேஸிங், குழப்படி எல்லாவற்றையும் மீறி திருமணத்தை நடத்தி வைக்கிறான்.  ஏன் இப்படி செய்தான் என்று கேட்டால் “சும்மா ஓடி வந்து கல்யாணம் செய்து கொண்டால். அதிலென்ன கிக் இருக்கும் அதனால் தான் என்கிறான். இப்படி தான் செய்யும் பிரதி விஷயங்களிலும் கிக்குக்காக செய்யும் புத்திசாலி, கல்யாண்.
telugu-movie-kick-photo-gallery-_36_

தன் தங்கை அவனை காதலிப்பதாய் சொல்ல, அவன் கிக்குக்காக எதையும் செய்பவன் என்று சொல்லச் சொல்லி அவனிடம் கேட்க, அவனும் அப்படியே சொல்லி ஆனால் அவன் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அது வேறு யாருமில்லை உன் அக்காதான் என்கிறான். ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நிரந்தரமாய் வேலை செய்தால் அவனை காதலிப்பதாய் சொல்ல, அதற்காக ஒரு வேலையில் சேர்ந்து, பின் வேலை விட்டுவிடுகிறான் அதனால் அவனை பிரிகிறாள் காதலி.

telugu-movie-kick-photo-gallery-_35_

காதலியின் பிரிவிற்கு பிறகு அவன் மிகப் பெரிய கொள்ளைக்காரனாய் ஆக, அவனை தேடி போலீஸ் ஆபிஸர் கல்யாண் அலைய, திருடன் கல்யாணுக்கும், போலீஸ் கல்யாணுக்கு நடக்கும் கேட் & மவுஸ் கேமில் யார் வெற்றி பெற்றார்கள், ஏன் கல்யாண் திருடனானான்?. ஹீரோயினுக்கும் அவனுககும் திருமணம் நடந்தத.? என்பது தான் கதை.

ரவிதேஜா வழக்கம் போல அலட்டி கொள்ளாமல் நடித்திருகிறார். படம் முழுக்க அவரின் ட்ரேட்மார்க் காமெடி காட்சிகள்.  க்ளைமாக்ஸ் காட்சிகளில் கொஞ்சம் நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.

kickreview1

இலியானா கொஞ்சம் சதை போட்டிருக்கிறார். அழகாய் இருக்கிறார். ரவிதேஜாவுக்கும், அவருக்கும் நடக்கும் காதல் போட்டி காட்சிகளில் நடிக்கவும் செய்கிறார்

ரவிதேஜாவை துரத்தும் போலீஸ் ஆபீஸராய் நம்ம ஷாம். அந்த வேடத்துக்கு அருமையாய் பொருந்தியிருக்கிறார். படு ஹார்டான வாய்ஸை அவருக்கு டப் செய்திருக்கிறார்கள். அது தான் அவ்வளவாக பொருந்தவில்லை.
telugu-movie-kick-photo-gallery-_11_

வழக்கம் போல் ப்ரம்மானந்தம் தூள் பரத்துகிறார். அதிலும் ரவிதேஜாவிடம் மாட்டி கொண்டு அவர் படும் பாடும், அவரது ரியாக்‌ஷனும்.. இலியானா ரவிதேஜாவை வெறுப்பேற்ற இவரை காதலிப்பதாய் சொல்ல,  ரவிதேஷாவிடமே ஐடியா கேட்டு அது ஒவ்வொரு முறையும் சொதப்ப, காதல் வயப்படும் போதெல்லாம் பின்ணனியில் வயலின் வாசிக்கும் ஆட்கள் என்று சரி காமெடி.

ரசூலின் ஒளிப்பதிவில் குறையொன்றுமில்லை. எம்.எம் தமனின் இசையில் மூன்று பாடல்கள் ஓகே.

வழக்கமாய் பழிவாங்கும் ஆக்‌ஷண் படங்களையே இயக்கும் சுரேந்திரா ரெட்டி, இம்முறை காதலுக்கு முக்ய்த்துவம் கொடுக்கும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார். முதல் பாதி முழுவதும் ரவிதேஜா, இலியானா காதல் சம்பந்தபட்ட காட்சிகளில் திரைகதையின்  வேகம் அருமை.  இரண்டாவது பாதியில் நடுவுல் தொங்கினாலும், போலீஸ் ஆபீஸர், ரவிதேஜாவுக்கும் இடையே நடக்கும் கேட் அண்ட் மவுஸ் கேம் இண்ட்ரஸ்டிங்க். அவர் ஏன் கொள்ளைகாரனாய் மாறினார் என்பதற்கான காரணம் அரத பழசு. அதே போல் க்ளைமாக்ஸ் கொள்ளை காட்சிகள் காதில் பூ.

Kick -  ஒரு ‘கிக்’குக்காக பார்க்கலாம்





கொத்து பரோட்டா 08/05/09 வை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

May 8, 2009

கொத்து பரோட்டா – 08/05/09

சத்யராஜும், கவுண்டமணியும் ஒரு இடத்தில் சேர்ந்து இருந்தால் அந்த இடத்தில் கிண்டலுக்கும் நக்கலுக்கும் பஞ்சமேயிருக்காது. அப்படி ஒரு படப்பிடிப்பில் நானும் அவர்களுடன் நடித்து கொண்டிருந்த போது, ஷாட்டுக்கு இடையே இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

கவுண்டர் : ‘ஏம்பா.. நாளைக்கு நான் சூட்டிங்கு வர மாட்டேம்பா..:

சத்யராஜ்: “ஏன்?”

கவுண்டர் : “செக் பவுன்ஸ் ஆயிருச்சு.. அப்புறம் என்ன மசுத்துக்கு நடிக்கணும்?”

சத்யராஜ் : “அண்ணே… நீங்க வீட்டுல போய் என்ன செய்ய போறீங்க..? சும்மாதானே இருக்க போறீங்க.. அதுக்கு இங்க இருந்தாலாவது நம்ம ரெண்டு பேரும் பிஸியா இருக்கிறோம்னு சொல்லிகலாமில்லையா.. ஏன்னா எனக்கு கூட பவுன்ஸ் ஆயிருச்சு..” என்றார்.

****************************************************************************************************
திரையில் வெள்ளை போர்டில் கருப்பு எழுத்துக்களில் AIDS என்று எழுதபட்டிருக்க, அதை ஒரு கை 12 பிரேமில் அழிக்க, கடைசியாய் ஒரு கேப்ஷன் “USE RUBBER TO ERASE AIDS”  மிக குறுகிய செகண்டுகளில் அருமையான கருத்தை வெளிபடுத்திய  ஒரு குறும்படம். சத்யம் தியேட்டர்காரர்கள் தயாரித்திருக்கும் இந்த படம் அவர்களுடய திரையரங்குகளில் படம் போடுவதற்கு முன் காட்டுகிறார்கள். சூப்பர்ப்… அருமையான Concept. Excellent Execution.

*****************************************************************************************************

நீ காதலை பற்றியும் கல்யாணத்தை பற்றியும் படிக்க வேண்டுமானால், தனிதனியாய் இரண்டு புத்தகங்களை படிக்க வேண்டும் – ஆலன் கிங்

கல்யாணம் என்பது பேங்கில் பணம் போடுவது போல், ஆனால் எவ்வளவு  பணம் போட்டாலும், எடுத்தாலும் நமக்கு இண்ட்ரஸ்ட் இழப்பு நிச்சயம்.
*****************************************************************************************************
சமீப காலமாய் நம் பதிவர்கள் பல பேர் பல மீடியாக்களில் கலக்கி வருகிறார்கள். எம்.எம்.அப்துல்லா சொல்ல சொல்ல இனிக்கும் என்கிற திரைபடத்தில் ஒரு பாடலை குத்தியிருக்கிறார்.  நன்றாகவே பாடியிருக்கிறார். இப்பாடல் நன்றாக படம்பிடிக்க பட்டிருந்தால் நிச்சயம் ஹிட். நர்சிம், அதிஷா, லக்கிலுக் என்கிற யுவகிருஷ்ணா, போன்றவர்கள் பிரிண்ட் மீடியாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே தங்களுக்கென்று தனி முத்திரைகளை பதிவுலகில் பெற்றவர்கள். அவர்களின் எழுத்து மென் மேலும் சிறக்க வாழ்த்துவோம்.   எதிர்காலத்தில் நிறைய பதிவர்கள் பல துறைகளில் வெற்றி பெரும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதும் இவர்களின் முதல் அடியே மற்றவர்களுக்கு ஒரு உத்வேகமாய் அமையும் என்பது நிச்சயம்.

********************************************************************************************

ஏ ஜோக்

ஒர் இளம் பெண் தன் முத்ல் திருமணத்தின் மூலம் 13 குழந்தைகளை பெற்றாள், இரண்டாவது திருமனத்தின் மூலம் 10 குழந்தைகளையும், மூன்றாவது திருமணத்தின் மூலமாய் ஏழும், நான்காவது திருமணதின் மூலமாய் ஐந்து குழந்தைகளையும் பெற்று ஒரு நாள் இறந்தாள்.
அவளின் சவ அடக்கத்தின்  போது ஓருவர் “ அட்லீஸ்ட் இப்போதாவது அவர்கள் ஒன்றாய் இணைந்தார்களே? என்று சொல்ல, அருகிலிருந்தவர்,

” எந்த கனவருடன் இணைவாள் இவள்?”

அதற்க்கு முதலாமவர் “ நான் இணைந்தது என்று சொன்னது அவள் கணவர்களை பற்றியல்ல. அவளுடய கால்களை” என்றார்.


டீன் ஏஜ் பெண் தன் தாயிடம் “ என் ப்ரண்ட் ரீட்டா சொல்கிறாள். ஆண்கள் தங்கள் உறுப்பை வைக்கும் இடத்திலிருந்துதான் குழந்தை பிறக்கும் என்று அது உண்மையா..? என்று கேட்க, அம்மா, “ஆமாம் என்று சொல்ல..” மகள் “ அப்படின்னா எனக்கு குழந்தை பிறக்கும் போது என் பல் இடிக்காதா”?” என்று கேட்டாள்





Blogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

May 7, 2009

காதல், சுப்ரமணியபுரம் மாதிரி ஒரு லைவ் கதை பண்ணுவது எப்படி..?

விகடனில் தங்கள் முத்திரையை பதித்திருக்கும் நண்பர் நர்சிம், ஆதிஷா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

சேது வந்து ஹிட்டான காலத்தில் பல உதவி இயக்குனர்கள் அதே போன்ற கதைகளை வைத்துக் கொண்டு, சேது மாதிரி ஒரு சப்ஜெக்ட் சார் என்று சொல்லி அலைவது ஒரு காலமாய் இருந்த்து.

அதற்கு அப்புறம் காதல் வந்தது. அதற்கு அப்புறம் யாரை பார்த்தாலும் லைவாய் ஒரு ஸ்கிரிப்ட் காதல் மாதிரின்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. அவங்களை சொல்லி தப்பில்லை.. அதுக்கு அப்புறம் வந்த பருத்தி வீரன், சுப்ரமணியபுரம், வெண்ணிலா கபடிகுழு  போன்ற படஙகள் ஹிட் ஆக, தமிழ் சினிமாவே லைவ் கதைக்காகவே படைச்சா மாதிரி ஆயிருச்சு.

இப்போதைய தமிழ் சினிமா உலகமே ஒண்ணு பெரிய ஆர்டிஸ்டுகளை வைத்து தெலுங்கு பட உலகமே மறந்து போன கதைகளை பண்ணிட்டுருக்க, இன்னொரு பக்கம் ஷூ ஸ்டிரிங் பட்ஜெட்லனு சொல்லி ஹவாய் செப்பல் பட்ஜெட்ல படம் பண்ணிரலாம்னு சுத்திட்டிருக்கு. அதனால லைவ் படம் பண்ணுவதற்கான வழிமுறைகளை பற்றி ஏதோ என்னாலான ஒரு யோசனை.

கண்டிப்பா உங்க படத்தோட கதை மதுரை பக்கத்தில ஏதாச்சும் ஒரு கிராமத்துல நடக்கிறதா இருந்தாகணும். அடுத்து படத்து ஹீரோ கேரக்டர் பழைய வடிவேலு ரேஞ்சுக்கு அறுவது நாள் தாடி மீசையோட பார்த்தா வாந்தி வர லெவல்ல இருக்கணும். ஹீரோயின் மட்டும் கொஞ்சம் அழகா, லைட்டா மேக்கப் போட்டு விட்டுரணும். படம் பூராவும்  வட்டார மொழியை  ‘அங்கிட்டும்.. இங்கிட்டுமில்லாம படம் பூராவும் பேசவுடணும். கண்டிப்பா, மசுரு, குண்டி, போன்ற   வார்த்தைகளை ஆங்காங்கே படத்துல வர ஹீரோ, சைடு கேரக்டர்களை பேச வைக்கணும். எக்காரணத்தை கொண்டும் ஹீரோயின் இம்மாதிரி வசனம் பேசக் கூடாது. அப்பத்தா, மதனி, மாப்ள, என்பது போன்ற உறவுகளை சொல்லி பேசும் டயலாக்குகள் கண்டிப்பாய் தேவை.

ஹீரோ ஒரு வேலைக்கும் போகாம தண்ணிய போட்டுட்டு, கூட பெரிசுமில்லாம, சிறுசுமில்லா ஒரு ஆளை வச்சிட்டு அலம்பல் செய்யணும். ரவுடித்தனம் செஞ்சிட்டு திரிஞ்சாலும் அவனை ஒரு வீரன் ரேஞ்சுக்கு பேசணும். கண்டிப்பா கேமரா ஒரே இடத்துல வச்சு எடுக்க கூடாது, ஊருக்கு ஊடாலே சும்மா அலையிற நாய் கணக்கா ஒரு இடத்திலயும் நிக்காம  அலைஞ்சிகிட்டே இருக்கணும். அவைலபிள் லைட்டுல படமெடுக்கணும். பட்ஜெட் படம் பாருங்க. உத்து பார்த்தாதேன் யார் எவருனு தெரியணும்

கண்டிப்பா ஒரு அஞ்சாறு என்பது வயது கிழவன் கிழவி்ங்களை வச்சு ஒரு பத்து இடத்தில நடக்க விடணும். முடிஞ்சா அப்பத்தா கேரக்டர் ஒண்ணை எங்கிட்டாவது சொருவிவிட்டு, பேசிட்டே இருக்குறாப்புல சீன் வச்சிரணும். அப்பத்தான் நேட்டிவிட்டு பிச்சி எகிறும். ஸ்டில் செசன்ல நல்ல தந்தட்டி மாட்டின கிழவி, சுருட்டு பிடிக்கிறாப்புல இருக்கிற கிழவன்களை நல்ல க்ளோசப்புல எடுத்து வச்சிகிட்டா ரொம்ப நல்லது. உலக தரத்துல ஒரு லைவ்படத்துக்கான பில்டப் ரெடி. எப்ப எங்க பார்த்தாலும் அட்மாஸ்பியர்ல ஒரு நாலு கேரக்டர் பேசிட்டே இருக்கணும். அதை தவிர ஏதாவது  ஜாதியை உசத்தி வச்சு ”நாங்கெள்லாம் வீரய்ங்க தெரியுமா”  என்பது  போன்ற் டயலாக்  வச்சாகணும்.

படத்துல அரிவாளை தூக்கிட்டு ஹீரோவோ யாரோ ஒருத்தர் ஒரு சீன்லயாவது ஓடணும் ஒரு கட்டத்துக்கு அப்புறம் பாதி படத்துல காதல் வந்து எல்லா கிரகத்தையும் வுட்டுபுட்டு லவ் பண்ண ஆரம்பிக்கணும். கண்டிப்பா ஹீரோ திரும்பவும் தண்ணியடிச்சுபுட்டு தன் காதலியை பத்தி மாத்தி, மாத்தி புலம்புறா மாதிரி சீன் இருக்கணும். திருவிழா சீன் இல்லாம நீங்க கதை ரெடி பண்ணவே கூடாது. ஏன்னா அப்பத்தான் நீங்க லைவ் படம் பண்ணுறீங்கனு சொல்லிக்க முடியும்.

கண்டிப்பா படத்து பாட்டுல ஒரு திருவிழா பாட்டு இருந்தே ஆகணும்.  சின்னப் பொண்ணு, கொல்லங்குடி கருப்பாயி மாதிரி ஆட்களை விட்டு ஒரு பாட்டு பாடியே ஆகணும், அட்லீஸ்ட் பேக்ரவுண்டுலயாவது அந்த பாட்டு வந்தாகணும். ரீரிக்கார்டிங்க்ல கண்டிப்பா ஒரு உறுமி மேளமோ, ஒரு ஒப்பாரியோ ஓடிட்டேயிருக்கணும். இன்னொரு விஷயம் அருமையான மெலடியான ஒரு பாட்டை போட்டு ஊருக்குள்ள இருக்கிற ஒரு சந்தில்லாம, வெள்ளையடிச்சி, ஹீரோவையும், ஹீரோயினையும் ஓட விடணும். இது நெம்ப முக்கியம்.

க்ளைமாக்ஸுல ரெண்டு பேரும் சாவுற மாதிரியோ. இல்ல ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர் சாவற மாதிரி இருக்கணும் அந்த சாவுக்கு காரணமா இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தரா இருந்தா  படம் ஹிட்டுக்கு ஒரு கேரண்டி நிச்சயம். எப்பாடு பட்டாவது விகடன் போன்ற பத்திரிக்கைகளில், நல்ல கலர் போட்டோ கவரேஜோட, கரிசல் மண்ணின் வாசம், அவர்களோட வாழ்கை, திடீர்னு மன்சுக்குள்ள மொட்டு வெடிச்சா மாதிரியான நேட்டிவிட்டியோடு பேட்டி கொடுக்கணும்.

இதையெல்லாம் படிச்சிட்டு உங்கள்ல யாருக்காச்சும் லைவ் படம் பண்ணனுமின்னா என் கிட்ட கூட காதல், பருத்திவீரன், சுப்ரமணியபுரம் மாதிரி லைவா ஒரு சப்ஜெக்ட் இருக்கு சார். ரொம்ப சின்ன பட்ஜெட்டுதான் ஒருவாகுள்ள முடிஞ்சுரும். ரெட் ஒன்ல பண்ணிறலாம். கேட்குறீங்களா..?





Blogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

May 6, 2009

”என்னை பிடிக்கலையா..?” நி.க-1


“என்னை பிடிக்கலையா?.. நான் அழகாயில்லையா..?” என்று மோடாவில் என்னை சாய்த்து, தன் ’மெத்’ மார்பினால் அழுத்தி, என்னை ஆக்கிரமித்து, முகத்தை முட்டுகிற மூச்சு காற்றில் அவளின் மிண்ட் வாசனையுடன் கேட்பவளை பார்த்து என்ன பதில் சொல்வது?

“இ...இ..இல்ல அப்படி ஓண்ணுமில்...” என்று முடிப்பதற்குள்,

“இல்லையில்லை..இல்லையில்ல..”என்றபடி அழுத்தமான முத்தங்களை உதட்டிலும், முகத்திலும் மாறி, மாறி கொடுத்தாள். ஓரு விதமான வெறியுடன் என்னை இன்னும் இறுக்கி அணைத்தாள், விலகுவதா? அணைப்பதா என்ற குழப்பத்திலிருந்து விடுபடுவதற்குள் அவளின் அணைப்பும், நெருக்கமும் என்னை மேலும் ஸ்டுமுலேட் செய்ய, அவளை அப்படியே திருப்பி அணைத்து, அவளின் மார்புகளின் இடையே முகத்தை வைத்து முத்த்மிட்டு, அவளை அலேக்காய் அவளுடய பெட்ரூமுக்குள் தூக்கி சென்றேன். அவள் கண்களில் ஓரு பளபளப்பு இருந்தது.

ஐந்து வயதில் ஓரு பையன் இருக்கிறான் என்றால் நம்புகிற மாதிரியா இருக்கிறாள் இவள்?. நல்ல உருவி விட்டாற்ப் போல் உடல்.. நல்ல உயரம்.. நிற்கும்போது அவளை பார்ததைவிட, படுத்திருக்கும் போது அவள்து நீளமான கால்களும், தொடைகளும், என்னுள் அனலை மேலும் தகிக்க வைக்க, அவள் கலைந்திருந்த தன்னுடய மேலாடையை விலக்கி, சினிமாவில் வருவது போல் கைகளை விரித்து, கிறக்கமாய் பார்த்து, ஹஸ்கியாய் ”வா” என்றாள், சென்றேன்..

அவள் பெயர்.. அது எதற்கு உங்களுக்கு. அவள் என் ஹவுஸ் ஓனரின் மனைவி. நான் அவர்கள் வீட்டின் மாடியில் குடியிருக்கிறேன். ஓரு முறை அவளை பார்த்தால் கண்டிப்பாய் திரும்பி பார்க்காமல் போக மாட்டீர்கள். அசத்துகிற அழகில்லையென்றாலும் கவனிக்க தக்க அழகு, மிக எளிமையான உடைகளிலேயே ஆடம்பரமாய் தெரிவாள். சிவப்பும் இல்லாமல், கருப்புமில்லாமல் ஓரு மாநிறம். அவளிடமும், அவளின் செயகளிலிலும் ஓரு இண்டுசுவாலிடியும், சிம்பிளான அழகும் இருக்கும். யாரை பார்த்தாலும் சிரித்தபடி கண்களை பார்த்து பேசும் அவளுடய பேச்சு என்று அவளை பார்த்தால் எல்லாருக்கும் பிடித்துவிடும்.

அவள் பாடி நீங்கள் கேட்க வேண்டும், அதிலிருந்து தான் ஆரம்பித்தது. ஓரு முறை நான் மாடியிலிருந்து கீழிறங்கும் போது அவள் ”வசீகரா” பாடி கொண்டிருப்பதை நின்று கேட்டுவிட்டு, மெதுவாய் வீட்டு காலிங்பெல்லை அழுத்தி, அவள் மாவரைக்கும் கையோடு யாரோ என்று வர, என்ன பார்த்ததும்

“என்ன ரமேஷ்” என்றாள் கண்கள் விரித்து,

“ஒண்ணுமில்லை பாட்டு சூப்பர். அதிலேயும் ”எங்கேயும் போகாமல் என் வீட்டிலேயே நீ வேண்டும்”ன்னு நீங்க பாடினீங்களே.. என்னா பீல்.. கேட்டா.. எவனுக்கும் வீட்டை விட்டு போக மனசு வராது. சூப்பர்” என்று பாராட்ட, அவள் முகத்தில் சட்டென்று ஓரு அலையாய் வெட்கம் படர்ந்ததை தவிர்க்க நினைத்தது போல தன் மாவு கையுடன் முகத்தில் கை கொண்டு போக, முகத்தில் ஆங்காங்கே மாவாகி, “சே.. சாரி.. தேங்கஸ்.. தேங்க் யூ வெரி மச்.. “ என்று சொல்லியவாறு முகம் துடைக்க போனது, இன்னமும் என் கண்களிலே இருக்கிறது.

அன்றைக்கு மதியமே.. என்னுடய் செல்லுக்கு போன் செய்தாள்..

”ஹலோ.. இஸ் திஸ் இஸ் ரமேஷ்?’

“எஸ். சொல்லுங்க மேடம்.. என்ன விஷயம் திடீருன்னு போன்ல.. எனிதிங் சீரியஸ்?”

“சே...ச்சே.. அதெல்லாம் ஒண்ணுமில்லை... அது சரி எப்படி நான் தான்னு கரெக்டா கண்டுபிடிச்சீங்க..?”

“என்ன மேடம் .. உங்க குரல் எனக்கு தெரியாதா..? என்ன விஷயம் சொல்லுங்க? ”

“ஒண்ணுமில்ல.. ஜஸ்ட் லைக் தட்.. காலைல நீ.. சாரி.. நீன்னு சொல்லாமில்ல...? “

என்னுடய அனுமதிக்காக காத்திராமல்..

“ஓகே.. அதான் நீ காலையில என்ன ப்ரைஸ் பண்ணத்துக்கு, நின்னு ஒரு தேங்கஸ் கூட சொல்லல.. அதுக்குள்ள முகத்துல மாவு.., நீயும் கிளம்பிட்ட.. அதான்..?

“அதுக்காகவா போன் பண்ணீங்க.. எதுக்கு மே..”

“நோ மோர் மேடம்.. நிஜமாவேவா நான் நல்லா பாடினேன்.? சும்மா சொல்லு..”

” என்ன.. மேடம்.”

“ஏய்.. கட்தட்..மேடம்.. எனக்கு பேரில்லையா..? சும்மா. மேடம்.. ஆண்ட்டின்னுட்டு, டு யூ திங்க் ஐயம் ஓல்ட் இனப் டு பி கால்ட் லைக் தட்..?’ சொல்லு நிஜமாவே நான் நல்லாவா பாடினேன்?.”

நிஜமாகவே அவள் நன்றாகத்தான் பாடினாள்..

“டிவைன்.. கண்ண மூடிகிட்டு கேட்டா பாம்பே ஜெயஸ்ரீயே பாடினா மாதிரி இருக்கு..”

அதற்கு அப்புறம் பேசியது, எல்லாமே அவள் பாட்டு கற்றது, காலேஜ், கல்சுரஸில் பர்ஸ்ட் பிரைஸ், என்று அவ்ளை பற்றியே இருக்க.. முடிக்கும் போது “மீட் யூ இன் த ஈவினிங்” என்று போனை வைத்தாள்

கிட்டத்தட்ட 45 நிமிடம் பேசியிருக்கிறாள்.. எனக்கு தெரிந்து அவள் இவ்வளவு உற்சாகமாய் பேசி கேட்டதேயில்லை.

அதன் பிறகு அன்றைக்கு சாயந்தரமே.. என் வரவுக்காக, காந்திருந்தவள் போல் வாசலிலேயே நின்றிருந்தாள்.. எப்போதும் வழக்கமாய் நான் லெட்டர் பாக்ஸிலேயே எடுத்துக் கொள்ளும் என் கடிதங்களை அவள் கையிலே வைத்தபடி,

“ ஏய்.. ரமேஷ்.. இந்தா உன்னுடய் லெட்டர்ஸ்.. இப்போதான் வந்த்து.. வர டயமாச்சேன்னு கையிலேயே.. வச்சிருந்தேன்.’ கொடுத்தவள் “ வாயேன் உள்ள ஓரு கப் காபி சாப்ட்டு போலாம்..?”

இதற்கு அப்புறம், பல காப்பிகள், அவளுடனும், அவள் கணவனுடனும், அவளது வீட்டிலும், தனியாய் ரெஸ்டாரண்டுகளிலும், அவளுடய ஹஸ்பெண்ட் வேலை விஷயாமாய் திடீரென்று வெளியூர் போக வேண்டியிருந்ததால்.. அவருக்கும் சேர்த்து ரிசர்வ் செய்த படத்துக்கு அவளூடன் சென்றது. கணவனின் அனுமதியுடன்.

எனக்கும் அவளுக்கும் பிடித்த சுஜாதா, அயண் ராண்ட், மணிரத்னம், டாம்ஹாங்ஸ், கார்னாடக இசை.. உன்னி கிருஷ்ணன் என்று பல விஷயங்கள், எங்களுக்கு தினமும் பேச நிறைய இருந்த்து.. தினமும் ஓரு மணி நேரமாவது பேசவில்லையென்றால் எதையோ இழந்த மாதிரி இருப்பதாகவே சொன்னாள்.. தான் திரும்பவும் திருமணத்துக்கு முன்னே இருந்த் மாதிரியான ஓரு உணர்வு தனக்குள் வந்துவிட்டதாய் அடிக்கடி சொன்னாள்.. சில சமங்களின் ஓரு பதினெட்டு வயது பெண்ணைப் போல் என்னை பார்த்தும் ரொம்பவும் எக்ஸைட் ஆனாள்.. அப்படி ஆவது என்க்கு தெரிய வேண்டுமென்று மறைக்காமல் இருந்தது எனக்கு புரிந்த்து. இருவருக்கும் இடையில் அவ்வப்போது தொடுதல்களும், தலை தொட்டு பேசுவதும் இயல்பாய் நடப்பது போல பார்பவர்களூக்கு தெரியும். ஆனால் எனக்கும், அவளுக்கும் இடையே ஓரு நெருக்கம் உருவாவதை எனக்குள் உணர முடிந்தது..

அதை எப்படி தவிர்பது என்று யோசிக்கவே முடியாமல் அவளின் பேச்சு என்னை ராத்திரி அடித்த விஸ்கி போதையாய் ஆக்கிரமிக்க, மீண்டும் ’சே’ எதற்கு இந்த போதை என்று படுக்கும் போது நினைத்து காலையில் எழுந்தால் அவளின் ‘ஹாங் ஓவர்”. அவளால் ஏற்பட்ட ஹாங் ஒவரை சரி செய்ய அவளே வேண்டும்.

எவ்வள்வோ முயற்சிகள்.. அவளின் தனிமையை என்னுடன் கழிக்க, தெரிந்தே.. பல முறை தவிர்த்திருக்கிறேன். ஆனால் இன்று இவ்வளவு கிட்டத்தில், அந்த அனலான மூச்சில்,பஞ்சான மார்புகளின் அழுத்தத்தில், வியர்வையும் அவளும் சேர்ந்த வாசனையில், என்னால் முடியவில்லை.


‘எதுக்குகாக.. இத்தனை நாள் ரமேஷ்? என்னை பிடிக்கலையா.? நான் அழகாய் இல்லையா..?”

நான் அவளின் கன்னத்தை என் விரல்களால் வருடி,

‘உன்னை யாராவது பிடிக்கலைன்னு சொன்னா அவன் முட்டாள்.. இத தள்ளிப்போட எவ்வளவுநாள் ட்ரை பண்ணியிருக்கேன் தெரியுமா..?”

அவள் என்னை பார்த்து, ஓரு ஆச்சர்யத்துடன் “ ஸ்டுப்பிட்.. அப்போ தெரிஞ்சே.. என்னை அவாய்ட் பண்ணியா..? ஏன்..?” என்று என்னுள் மேலும் பரவ,

‘கேக்கிறேன்னு தப்பா நினைக்காதே.. அப்படி என்ன என்கிட்டே ஸ்பெஷல்..? உங்க ரெண்டு பேரையும் பார்த்தால் ‘மேட் பார் ஈச் அதர்’ன்னு தோணும். உனக்கும் உன் ஹஸ்பெண்டுக்கு எதாவத் பிரச்சனையா..?”

இந்த கேள்வியை கேட்டவுடன், சட்டென்று கோபத்துடன் எழுந்து உட்கார்ந்து..

”நீ ஏன் இந்த கேள்வியை என்கிட்ட படுக்கிறதுக்கு முன்னாடியே கேட்கல..?”

எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

”செக்ஸுக்காகதான் உன்னோட படுத்தேன்னு சொன்னா நி நம்புவியா..? நம்ப மாட்டல்ல..?”

“உண்மையை சொல்லணும்னா.. வெறுமை ரமேஷ்.. Vaccum between us.. யெஸ்.. நானும் அவரும் காதலித்துதான் கல்யாணம் செஞ்சிக்கிட்டோம். என்னோட பாட்டுன்னா அவருக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா..? என் பாட்டை கேட்டே என் பின்னே சுற்றி வந்து எங்க கல்யாணம் நடந்தது.. நான் பார்த்து, பார்த்து செய்யும், எல்லாத்தையும் அவர் பாராட்டற அழகுக்காகவே. இன்னமும் ஆசையா செய்வேன். அந்த நாட்களில் எவ்வளவு பேசியிருபோம், எவ்வளவு சந்தோஷம், எவ்வளவு சண்டைகள்.. எவ்வளவு சினிமா.. எவ்வளவு ரெஸ்டாரண்டுகள், அவுட்டிங், எவ்வளவு திகட்ட,திகட்ட... செக்ஸ்...

’இந்த ரெட் சூரிதார்ல யூ ஆர் Fabulous’

‘வாவ்.. எப்படி இருந்த ரூமை.. தலைகீழா மாத்திட்டே.. உனக்கு கிரியேட்டிவிட்டி ரொம்ப.. குட்.’

‘உன்னை போல் சமைக்க இன்னொரு ஆள் வரணும்’

‘தயவு செஞ்சி.. ஆபீஸ் போகும் போது, என்னை அப்படி பாக்காதே..’

‘இதோட.. மூணு வாட்டி..’

‘நீ பாடிட்டேயிரு.. நான் உன்னை வாசனை பாத்துகிட்டே...’



இப்படி எல்லாமே ஓரு வ்ருஷம் வரைக்கும் தான்.. அதற்கப்புறம்..? என்னை பாடச்சொல்லி கேட்கும் என் கணவன், காதலன் எங்கேனு தெரியல..?

‘பாடட்டுமா’

“சம் அதர் டைம்’’

’உங்களிடம் பேச வேண்டும்..’

”ஆபீஸ் மீட்டிங்.. நாளை முக்கியமான ஒர்க் இருக்கிறது..”

‘அப்போ.. நான் முக்கியமில்லையா..?’

“சாரி..டியர்.. ஐ டோண்ட் ஹேவ் டைம் டு பைட் வித் யூ.. சம் அதர் டைம்”

இதற்கும் “சம் அதர் டைம்”


”குழந்தை, சொந்த வீடு, பேங்க் பேலன்ஸ், கார் எல்லாம் இருக்கிறது.. நாங்கள் இயல்பாய் ஓருவருக்கு ஓருவர் பேசி எவ்வளவு வருஷமாகிவிட்டது? எங்களுக்குள்ள இருந்த அந்த இண்டிமஸி எங்க..? செக்ஸுல என்மேல அவருக்கு இருந்த ஆர்வம் எங்கே..? எல்லாமே ஓரு பார்மலா.. கடமைக்குன்னு நடக்க் ஆரம்பிச்சு 4 வருஷம் ஆச்சு.. அவருக்கு கம்பெனி, டார்கெட்,ஷேர்ஸ், வீக் எண்ட் பார்டீ, டிவி, பேப்பர், மாசத்தில ஓரு நாள் ரெஸ்டாரெண்ட், ஓரு நாள் செக்ஸ், அதுகூட சில சமயம் மிஸ் ஆயிரும். பார்மலா தினமும், டியர், லவ் யூ, ஊரூக்கு போயிட்டு வந்தா ‘மிஸ் யூ” மட்டும் போதல.

ஓரே புழுக்கமா இருக்கு ரமேஷ்.. I am suffocating. மூச்சடைக்கிறது, தினம் எழுந்தா சமையல், குழந்தை, ஸ்கூல், டிபன், அவருக்கு சமையல், லஞ்ச் பேக், வழக்கமான குட்மார்னிங், லவ் யூ.. எல்லாமே மெஷின் மாதிரி மொனாடனி ஆயிருச்சு..எனக்கும் மனசு இருக்கு ரமேஷ்.. வாழ்கையில எல்லாருக்கும் தங்களுக்கு, தான் செய்யிற ஒவ்வொரு செயலுக்கும் ஓரு அங்கீகாரம் தேவைபடுது.. அந்த அங்கீகாரம் தனக்கு தானா கிடைக்கணும், கேட்டு வாங்ககூடாது. ஓரு காதலியா இருந்தப்ப கிடைச்ச இம்பார்டென்ஸ், மனைவியாகிவிட்ட பிறகு எதிர்பார்க்க கூடாதா..? அவருக்கு ஓரு சந்தோஷம்னா, சந்தோஷப்பட்டுகிட்டும், கஷ்டம்னா, ஆறுதலா இருக்கறதுக்கு மட்டுமே பொண்டாட்டின்னா.. அவளுக்கு உணர்வுகளே இல்லையா..? why they always take us granted?.

ஆனா கேக்காமலே உன் மூலமா என்னுடய பல விஷயங்களுக்கு அங்கீகாரம், கிடைச்சது.. நீ என் கூட இருக்கறப்ப என்னால என் ச்ந்தோஷத்தை. .. என்னோட எக்ஸைட்மெண்டை, என்னால கண்ட்ரோல் பண்ண முடியல.” நீ என் கிட்ட ரசிக்கிற விசயங்கள் அதை நீ என்னிடம் சொல்ற முறை.. எனக்கு கொடுக்கிற இன்பார்டென்ஸ்ன்னு இப்படி எவ்வளவோ சொல்லலாம்.. யு நோ ஓன் திங்.. இப்ப கூட உன்கூட படுத்தது பத்தி ஓரு மூலைல உறுத்தினாலும்... என்னை, என் மனசை, உணர்வை மதிக்கிற ஓருத்தனோட படுத்தது.. என்னயே ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்குதான் I Felt like a girl. உனக்காவது புரியும்னு நினைக்கிறேன்.”

என்று போர்வையிலிருந்து நிர்வாணமாய் வெளியேறி, இயல்பாய் நைட்டியை மாட்டிக் கொண்டு, பாத்ரூமுக்குள் சென்றாள்.. அவள் உள்ளே சென்று மூடின கதவையே பார்த்து கொண்டிருந்தேன்.

ஓரு வேளை நான் அவளின் கணவனாய் இருந்திருந்தால், அவளின் அழகு, ஆசைகள், எல்லாவற்றையும் விட தன் குடும்பம், வேலை, பணம் என்று துறத்தி.. நானும் அவனை போல்தான் நடந்திருப்பேனோ..?


May 5, 2009

தமிழ் சினிமாவின் 30 நாட்கள்

தமிழ் சினிமாவின் 90 நாட்கள் என்கிற தலைப்பில் சில நாட்களுக்கு முன் எழுதிய பதிவிற்கு பலத்த வரவேற்ப்பை கொடுத்து ஏன் முப்பது நாட்களுக்கு ஒரு முறை எழுதகூடாது என்று கேள்வி எழுப்பிய லட்சகணக்கான வாசகர்களின்( அடங்கு.. அடங்கு,,) ஏகோபித்த ஆதரவிற்கு இணங்க.. இதோ.. தமிழ் சினிமாவின் 30 நாட்கள்.

ayan-stills-7 அயன்

இம்மாதம் பூராவுமே தமிழ் சினிமா காரர்கள் கொஞ்சம் குழம்பித்தான் போய்விட்டார்கள், தேர்தல், IPL, போன்ற ’திருநா’  கோலாகலங்களால் படங்களை வெளியிட தயங்கி கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் மீறி சன் பிக்சர்ஸ் வெளியீட்டில் ஏவிஎம்மின் ‘அயன்” இந்த  வருட சம்மர் ஸ்பெஷலாய் வெளிவந்தது.  வெளிவந்த முதல் நாள் முதல் படம் ஹிட் என்ற செய்தியை வழக்கம் போல் படம் ரீலீஸாகும் முதல் காட்சிக்கு முன்னமே தங்கள் தொலைக்காட்சியில் போட்டு விளம்பரபடுத்தி கொள்ளூம்  சன் டிவிக்கு அந்த வேலையே செய்ய அவசியமில்லாமல் செய்த முதல் நிஜ  வெற்றி படம்.  இந்த ஒரு மாதத்தில் அவர்களின் மார்கெட்டிங்கின் மூலம் அடைந்த வீச்சு அருமை.
anandha-thandavam-wallpaper07 ஆனந்த தாண்டவம்

அடுத்து வந்த ஆஸ்கர் ரவிசந்திரனின் தயாரிப்பில்,  சுஜாதாவின் கதை வசனத்தில், ஏ.ஆர்.காந்திகிருஷ்ணாவின் இயக்கத்தில் வெளிவந்த “ஆனந்த தாண்டவம்” படம் ஒரு சின்ன ஸ்டெப் கூட வைக்காது தாண்டவம் நின்றுபோனது.
karthik-anitha-stills54
கார்த்திக் அனிதா

அதே வாரத்தில் வந்த கார்த்திக் அனிதா  புது முகங்கள், இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாள்ர் என்று முக்கால்வாசி பேர் புதுமுகங்களை கொண்டு வெளிவந்த திரைப்படம். படத்தின் விளம்பரத்துக்கும், ஸ்டில் செஸனுக்கும் க்வனம் செலுத்திய அளவுக்கு, இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் கண்டிப்பாய் கவனிக்கபட்டிருப்பார். இயக்குனர்.
kk090209_2 குங்குமபூவும் கொஞ்சும்புறாவும்

குங்குமபூவும் கொஞ்சும் புறாவும்.. வெளிவந்து ஒரு வாரமே ஆகியிருக்கிறது. மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்த படம், பெரிய லெட் டவுன். ஒண்ணூம் சொல்லிக்கும்படியா இல்லை.

மரியாதை

மரியாதை. விஜயகாந்த் நடிச்சு ராஜ்டிவியின் வெளியீட்டில், டி.சிவாவின் தயாரிப்பில், விக்ரமன் இயக்கத்தில், சுமார் ஆறு கோடி ரூபாய்க்கு முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ப்டம்.  வழக்கமான விக்ரமன் படம்.பெரிசா மரியாதையா சொல்லிக்கிறா மாதிரி ஒண்ணுமில்லைன்னு கேள்வி..

நாளை நமதே 
மலையாள இயக்குனர் வினயனின் இயக்கத்தில் “நாளை நமதே” என்றும் ஒரு படம் ஜனசேவா என்கிற நிறுவனம் தயாரித்து வெளிவநதிருக்கிற படம். செலவு செய்த பணம் ஜனசேவைக்காக போயிற்று.

இதை தவிர எங்க ராசி நல்ல ராசி என்று தமிழ் சினிமாவின் நிரந்தர யூத் முரளி நடித்து ரவிராஜா என்று இரட்டை இயக்குனர்கள் இயக்கிய ஒரு படமும் வெளிவந்திருக்கிறது.

போன மாதத்திய ஹிட்டுகளான அருந்த்தியும், யாவரும் நலமும், இம்மாதமும் தொடர்கிறது.  ஏப்ரல் மாதத்திய நிலவரப்படி ஆறு படங்கள் வெளிவந்திருக்கிறதுல் அதில் ஒரே ஒரு சூப்பர் ஹிட். அயன்.

Technorati Tags:




Blogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

May 4, 2009

நியூட்டனின் 3ஆம் விதி - திரைவிமர்சனம்

newtonin-moondram-vidhi

For every Action there will be a  Equal and Opposite  Reaction. இதுதான் படத்தின் அடிப்படை. இதை வைத்து மிக அருமையாய் திரைக்கதை அமைத்து விளையாடியிருக்கிறார்  இயக்குனர் தாய் முத்துசெல்வன்.

குருவும் பிரியாவும் காதலிக்கிறார்கள், குரு ஒரு ஆடை வடிவமைப்பாளன், ப்ரியா ஈகிள் டிவி காம்பையர். இருவருக்கும் தனியாட்கள், திருமணம் செய்ய விரும்பி நாள் அன்று, ப்ரியா தூக்கிலிட்டு செத்திருக்கிறாள். தன் சாவுக்கு காரணமான வில்லனை வீடியோ கேமரா மூலமாய் அடையாளம் காட்டிவிட்டு போயிருக்க.. அவள் இறந்த அதே நாளில் அவளின் சாவுக்கு காரணமான  ஈகிள் டிவி ஓனர் ஜேப்பியை கொல்ல நாள் குறிக்கிறான்.  அதை அவனுக்கும் சொல்லி விடுகிறான். அவன் குறித்த நேரத்தில் ஜேப்பியை கொன்றானா..? இல்லையா ஜேப்பி குருவிடமிருந்து தப்பிக்க  என்ன செய்தான் என்பதுதான் கதை.
newtonin-moonram-vidhi-12

வழக்கமான பழிவாங்கும் கதையை திறமையான திரைக்கதையாலும், மிகைபடுத்தாத சூர்யாவின் நடிப்பாலும் அனல் பறக்க விட்டிருக்கிறார்கள். ஜேப்பிக்கும், குருவுக்கும் நடக்கும் கேட் அண்ட் மவுஸ் கேம் அசத்தல் ரகம். அதிலும் முதல் பாதி பூராவும் ஜேப்பியை பொறைக்கு அலையும் நாயை போல .. ஓட விட்டே பீதியை கிளப்புவதும், அவன் மூலமாகவே அவனின் கருப்பு பக்கத்தை மீடியாவுக்கு வெளியிட வைப்பதும்,  தன்னை அலைக்ழிப்பவன் யார் என்று தெரியாமல் நொந்து போயிருக்கும் நேரத்தில் தெரிந்தத்வுடன் ஜேப்பி ‘டேய் பர்ஸ்ட் ஆப் உன்னோடதா இருக்கலாம்.. செகண்ட் ஹாப் என்னுது” என்று உறுமும் இடத்தில்  நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகிறது திரைக்கதை.
newton-02

இயக்குனரின்  நடிகராய் எஸ்.ஜெ.சூர்யா..  ஒரு ஹீரோவாய் பறந்து பறந்து சண்டை போட ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் அடக்கி வாசிக்க வைத்திருக்கும் திரைகதையால் உணர்ந்து செய்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் ஜேப்பியை கட்டி போட்டு அவர் பேசும் சில வசனங்கள் அருமை..  அட எஸ்.ஜே.சூர்யாவா இது.

புது இந்தி நடிகை.. சாயாலி ஓகே. கண்களை அகல விரித்து பயப்படுகிறார். பாடல்களில் கவர்ச்சி காட்ட பிரயத்தனபடுகிறார்.  பாவம் இருந்தால்தானே. சிரிக்கிறார், ஆடுகிறார், இறக்கிறார். 
newtonin-moonram-vidhi-08
வில்லன் ஜேப்பியாய் ஆஹா படத்தின் கதாநாயகன் ராஜீவ் கிருஷ்ணா.. டிபிகள் கார்பரேட் வில்லனாய் வலம் வருகிறார். அருமை. முதல்லேர்ந்து அவரோட பல்லுதான் அவருக்கு பிராப்ளம்.

சூர்யாவின் நண்பன், போலீஸ் ஆபீஸர் தலைவாசல் விஜய், தாரிகா, ராஜ்காந்த், வில்லனின் அடியாள் யுகேந்திரன் என்று எல்லோருமே குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். அதிலும் போலீஸ் ஆபீஸரின் போனை தன் போன் என்று நினைத்து உடைக்க போகும் இடத்தில் “சார்.. அது என் போன் “ என்பது போல படம் பூராவும் இயல்பான நகைச்சுவை கலந்த வசனங்கள்.   மிகையில்லாத ஒளிப்பதிவு. எடிட்டிங். என்று எல்லாமே நிறைவு.

வினயின் இசையில் பாடல்களை விட பிண்ணனி இசை படத்திற்க்கு பெரிய பலம்.

இயக்குனர் தாய்முத்துசெல்வனின் திரைகதைதான் படத்திற்கு பலமே. அதை திறம்பட செய்திருக்கிறார். கொஞ்சம் மெனக்கெட்டிருந்து பாடல் காட்சிகளை தவிர்த்திருந்தால் இன்னும் பரபரப்பான படம் கிடைத்திருக்கும். க்ளைமாக்ஸ் உத்தி புதிது.

உபரி தகவல் இயக்குனர் விஜய் டிவியில் முதலில் வந்த காத்து கருப்பு சீரியலின் இயக்குனர்.

நீயூட்டனின் 3ஆம் விதி -  புயல் வேக திரைக்கதைக்காக.. 





Blogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

May 3, 2009

மே –10 டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினியுடன்..

வரும் மே 10 தேதி டாக்டர் ருத்ரனும், டாக்டர் ஷாலினியும் child abuse பற்றியும்,  குட் டச், பேட் டச், போன்றவற்றை பற்றி கலந்துரையாட சம்மதித்திருக்கிறார்கள்.

இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் உங்களுடய வருகையை கீழ்காணும் மெயிலில் உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ள படுகிறார்கள்.

weshoulddosomething@googlemail.com

நர்சிமின் பதிவை படிக்க இங்கே அழுத்தவும்

லக்கியின் பதிவை படிக்க இங்கே அழுத்தவும்.

May 2, 2009

பசங்க - திரைவிமர்சனம்

pasanga2

தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கென்று ப்ரத்யோகமாய் படங்கள் வருவதில்லை. நாம் குழந்தைகளுக்கு வழக்கும் படஙக்ள் பெரியவர்களுக்கான படங்கள் தான் அந்த வகையில் குழந்தைகளை  வைத்து நம்மை போன்ற பெரியவர்களுக்குமான படத்தை தந்திருக்கிற இயக்குனர் பாண்டிராஜையும், தயாரித்த இயக்குனர் சசிகுமாரையும் பாராட்ட வார்த்தைகளேயில்லை.

pasanga

ஒரு கிராமத்து போலீஸ் ஸ்டேஷனில் ஊரில் உள்ள சில பேர் மூன்று பேரை பற்றி புகார் சொல்ல ஆரம்பிக்கிறது கதை.  ஆறாம் வகுப்பு போகும் ஜீவா, பகடா, குட்டைமணி ஆகியோரின் சேட்டைகளை தாங்க முடியாமல் புலம்பும் அளவிற்கு சேட்டை காரர்கள்.  ஒவ்வொருத்தனும் ஒரு டெரர் என்றால் அது மிகையாகாது. ஜீவாவின் அப்பா ஸ்கூல் டீச்சர்.  அவனுக்கு ஒரு அக்கா அவள் தான் கிண்டர்கார்டன் டீச்சர்.
pasanga3

எதிர்வீட்டுக்கு வரும் அன்புகரசன் என்னும் பையன், அதே பள்ளியில் சேருகிறான் தன்னுடய புத்திசாலிதனத்தால் எல்லாரையும் கவரும், அவனால் ஜீவாவுக்கு, அவனுக்கும் தகராறு. ஒரு கட்டத்தில் உன்னை பள்ளிகூடத்தை விட்டே  போக வைக்கிறேன் என்று ஜீவா சபதம் போட, நீ என்னை ப்ரெண்டா ஏத்துக்கன்னு கெஞ்ச வைக்கிறேன் என்று அன்புகரசு சபதம் போட நடந்ததா என்பது கதை.  இதற்கு நடுவே அன்புவின் சித்தப்பாவுக்கும், எதிர்வீட்டு ஜீவாவின் அக்காவுக்கும் காதல். இவர்கள் சண்டையில் இருவர் குடும்பங்களிடையே பூசல் வேறு. என்னடா இது ஒரே ரிவென்ஞ் கதையா இருக்கே என்று நினைக்காதீர்கள்.. வாழ்க்கையில்  நாம் தாண்டி வந்த பல விஷயங்களை நமக்கே திரும்ப காட்டியிருக்கிறார்கள் உயிரோட்டமாய்.
pasanga4

படம் பூராவும் நடித்திருக்கும் சிறுவர்கள் நடித்த மாதிரியே தெரியவில்லை. அவ்வளவு இயல்பான நடிப்பு. நம் கண் முன்னே வாழ்கிறார்கள். கதை நாயகர்களாய் வரும் இரு சிறுவர்களை தவிர, பகடா எனும் ஜால்ரா பையன், ஏத்திவிட்டே இருக்கும் மணி,  சோடாபுட்டி அப்பத்தா சிறுவன், ஜீவாவின் அத்தை பெண், அன்புவின் கடைசி தம்பி அந்த நண்டு, அவன் அடிக்கும் லூட்டியை ரசிக்காமல் இருக்க முடியாது.  இருவரின் பெற்றோர்களாய் வருபவர்கள் மிக இயல்பாய் நடித்திருக்கிறார்கள். செல் போன் ரிங்டோனை வைத்து வரும் காதல் காட்சிகள் புதுசு. இருவரின் காதல் காட்சிகள் மிக இயல்பு.
pasanga5

புதிய ஒளிப்பதிவாளர் ப்ரேம்குமாரின் ஒளிப்பதிவு அருமை.. கேமரா  பசங்களோடே ஓடுகிறது, நடக்கிறது, நிற்கிறது, மூச்சிரைக்கிறைது,  சைக்கிள் ஓட்டுகிறது ஒரே அட்டகாசம் செய்திருக்கிறார். பலே ப்ரேம்குமார்.
pasanga7

யோக பாஸ்கரின் எடிட்டிங் அருமை. ஜேம்ஸ் வசந்தனின் பிண்ண்னி இசை ஒகே. பாடல்கள் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை. பாலமுரளியின் குரலில் வரும் பாடலும் அதை படமாக்கிய விதத்தால் ஒகே. ஜேம்ஸ் வசந்தனும், ஜோஸ்வா ஸ்ரீதர் போல் ஒன் ப்லிம் ஒண்டர் ஆகிவிடுவாரோ..?
pasanga11

இயக்குனர் பாண்டிராஜை எவ்வளவு பாராட்டினாலும் தகும். முதல் படத்திலேயே குழந்தைகளை மையமாய் வைத்து ஒரு படம் எடுக்க துணிவு வேண்டும்.  அதில் வெற்றி பெற்றிருக்கிறர் என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு சம்மர் வெக்கேஷனில் படம் ஆரம்பித்து அடுத்த இறுதியாண்டுக்குள் நடக்கும் விஷயங்களை  மிக இயல்பாய் திரைக்கதை அமைத்து, அதில் நைசாய் பெரியவர்களுக்கான ஒரு கதையையும், குழந்தைகளின் வாழ்கை பெரியவர்களால் எவ்வாறு பாதிக்கபடுகிறது என்பதை வாழைபழ ஊசியாய் சொருகியிருக்கிறார். 
pasanga10
ஜீவாவின் அப்பா, அன்புவின் அப்பாவிடம் பேசும் காட்சியிலும், அன்புவின் அப்பா தன் மனைவியிடம் பேசும் காட்சியிலும் பெரியவர்களுக்கான சாட்டை.. கொஞ்ச்ம் நீளம் என்றாலும் தேவையே. எந்த இடத்திலும் சிறுவர்களை இரட்டை அர்த்த வசனங்களை பேசவைக்காமல் மிக இயல்பாய்  வந்திருக்கிறது அவரின் வசனங்கள்.  இன்றைய குழந்தைகள் மனதில் சினிமா எந்தளவுக்கு ஆழமாய் ஊடுருவியிருக்கிறது என்பதை மிக அருமையாய் ஒரு பாடலின் மாண்டேஜில் காட்டிவிடுகிறார். அதே போல் அந்த கைதட்டல் காட்சியும், அதற்கான க்ளைமாக்ஸும் சூப்பர்.

படத்தில் குறைகளாய் ஆங்காங்கே சிற்சில விஷயஙகள் இருந்தாலும் சொல்ல மனசில்லை..   படம பார்த்துவிட்டு கைதட்டி ஆரவாரித்து இயக்குனரையும், தயாரிப்பாளரையும் உற்சாகபடுத்துங்கள். நிச்சயமாய் இவர்களுக்கு அந்த தகுதியுண்டு. 


பசங்க – எல்லோருக்கும் (கண்டிப்பாய் குழந்தைகளுடன் பார்கணும்)



Blogger Tips -பெ’ண்’களூரை படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..