அயன் – திரைவிமர்சனம்
பரபரவென ஒரு ரோலர் கோஸ்டர் ரைட் போன்ற படம் பார்க்க வேண்டுமா.? யஹிஹே ரைட் சாய்ஸ் பேபி. படம் ஆரம்பம் முதல் கடைசி வரை சும்மா தூள் பரக்க அடித்து ஆடியிருக்கிறார்கள்.
கள்ளக்கடத்தல் செய்யும் தாஸின் சகாவான சூர்யா, புத்திசாலி, படிப்பாளி, ஸ்மார்டானவன். ஒவ்வொரு முறையும் அவன் கடத்தி வரும் பொருட்களூக்கு எப்பாடு பட்டாவது எந்த்வித பாதகமில்லாமல் கொண்டு வந்து சேர்ப்பவன். அம்மா மீது பாசக்காரன். அப்பா போன்ற தாஸின் அன்புக்கு கட்டுப்பட்டவ்ன்.
தாஸின் புது எதிரியாய் சவுகார்பேட்டை வில்லன், நடிப்பில் இன்னும் கொஞ்சம் மெனகெட்டிருக்கலாம். ஒவ்வொரு முறையும் போட்டு கொடுக்க, அதிலிருந்து ஒவ்வொரு முறையும் தாஸும், சூர்யாவும், தப்பிக்க், பரபர கேட் அண்ட் மவுஸ் கேம்.
கேமின் உச்சகட்டமாய் திருடனை வைத்தே திருடனை பிடிக்கும் டெக்னிக் அருமை. காங்கோவில் நடக்கும் சண்டை காட்சிகளாகட்டும், தமன்னாவுடன் காதல் செய்வதகட்டும், படம் முழுக்க சூர்யா துள்ளித்திறிகிறார்.
ம்ஹூஹூம்.. ஸ்டாபரி ஐஸ்கிரிமாய், சாக்லெட்டாய், கோடை மழையாய், குளிர்கால வெயிலாய், தமன்னா, அவருடய கேரக்டர் பெரிதாக இல்லாவிட்டாலும், படம் முழுக்க, நம்மை உருக்குகிறார். என்னா ஒரு இன்னொசென்ஸ் அவர் முகத்தில். ஆனந்த தாண்டவம் மதுமிதாவுக்காக காத்திருக்கிறேன்.
விஜய் டிவி நண்டுக்கு நல்ல பலமான கேரக்டர், உணர்ந்து செய்திருக்கிறார். என்ன அண்ணன் தன் தங்கையிடம் ஓரிடத்தில் உன்னை ஐயிட்டம்னு நினைச்சிட்டான் என்று சொல்கிறார். படம் முழுக்க அவர் தமன்னாவுக்கு அண்ணன் என்பதைவிட மாமாவாக வைத்திருந்தால் ஏற்றுபுடையதாய் இருந்திருக்கும்
படத்திற்கு மிகப்பெரிய பலம் புத்திசாலிதனமான திரைக்கதை, கடத்தல் செய்ய கையாளும் புதிய வ்ழிமுறைகளும், அதிலிருந்து தப்பிக்க செய்யும் வழிமுறைகளும் அருமை. அதிலும் எப்படி தப்பித்தார்கள் என்பதற்க்கு அதற்கான காட்சிகளை ப்ளாஷ்கட்டில் காட்டும் உத்தி நன்றாகவே உள்ளது.
படத்தில் ஒவ்வொரு சீனுக்கும் ஒரு டிவிடி கேட்டு வரும் இயக்குரை காட்டும் இப்படத்தின் இயக்குனர் கிண்டல் செய்திருக்கிறாரா..? அல்லது வருத்தமா..? இரண்டு உணர்வு என்றாலும் தவறானதே. இப்படத்தின் அடித்தளமே ஸ்பீல்பெர்க்கின் “Catch Me If You can” திரைப்படத்தின் தழுவல்தான். அதிலும் காங்கோவில் நடக்கும் மயிற்கூச்செரியும் சண்டைகாட்சி District B13 இன்ஸ்ப்ரேஷன். எதுக்கு அட்வைஸோ, கிண்டலோ, இயக்குனரே.
படத்தில் பிரபு, வில்லன் நடிகரின் கணக்காளராக வரும் பரத்வாஜ், கருணாஸ், என்று அனைவருமே உணர்ந்து நடித்திருக்கிறார்கள். வில்லனுக்கு பிண்ணனி குரல் கொடுத்த கோலங்கள் புகழ் அஜய்யின் குரல் செமையாய் செட்டாகியிருக்கிற்து.
ஹாரிஸ் இந்த படத்தில் கொஞ்சம் சொதப்பிவிட்டிருக்கிறார். வில்லன் ஒவ்வொரு முறை தோற்கும்போதும் ஒரு டாம் ஆண்ட் ஜெர்ரி டைப் பிண்ணனி இசை போட்டிருக்கிறார். ஒரே ஒரு பாடல் சுகம், மற்ற்படி சொல்லிக்கிறபடியா இல்லை.
எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு சூப்பர்ப்.. என்பது சாதாரண வார்த்தை, முக்கியமாய் பாலைவனத்தில் எடுக்கப்பட்ட பாடலாகட்டும், காங்கோவில் எடுக்கப்பட்ட சண்டை காட்ச்சிகளாகட்டும் மனுஷன் பின்னி பெடலெடுத்திருக்கிறார்.
கே.வி.ஆனந்த, சுபாவின் திரைக்கதை, வசனம் படத்திற்க்கு மிகப்பெரிய பலம்.அதே போல் ஆண்டனியின் எடிட்டிங்கில் இரண்டாவது பாதியில், கொஞ்சம் நறுக்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த். சன் டிவியின் முதல் நிஜ வெற்றி நடை போடப்போகும் வெளியீடு.
அயன் - நயன்
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
’கனா கண்டேன்’ எனக்கு ரொம்ப பிடிச்ச படம் சங்கர். ஆனா அது வெற்றிப்படமா? வேற மாதிரி படிச்ச நியாபகம்!
விமர்சனம் கலக்கல்!!! ஆனா சூர்யா பத்தி ஒரே லைன்ல சொல்லி முடிச்சிட்டீங்க. :-(
ஷாபி விமர்சனம் படிக்காமயே பின்னூட்டம் போடுவீங்க போலிருக்கு. நான் நல்லாருக்க்னுதானே சொல்லியிருக்கேன். பாட்டு மட்டும்தான் எனக்கு அவ்வளவா பிடிக்கலை. ஒரு வாட்டி முழுசா படிச்சிருங்க..
போயி உக்காருங்க!
கனா கண்டேன் சூப்பர்ப்பான படம். அப்படி ஒரு வில்லனை (பிருத்விராஜ்) யாரும் காட்டவில்லை. ஆனால் அது வெற்றிப் படமா?
இன்னொரு விஷயம்..
கே.வி.ஆனந்த் என் நண்பர்!
இந்த கொடுமை வேறயா ..????
ஹீ..ஹி.ஹி
எனக்கு படம் பிடித்திருந்தது. நீஙக்ள் சொன்னது போல் செகண்ட் ஆப் கொஞ்சம் இழுவைதான்.. கத்திரி போடலாம்.விஜய். ந்னறி உங்கள் வருகைக்கும், கருத்தூகும்
District B13 chasing scene
//
படிச்சிட்டேன் சுரேஷ்.. ஆனா ஏதோ ப்ராப்ளம் பின்னூட்டம் போடறதுக்கு.. நல்லாருக்கு உங்க விமர்சனம்.
:-)))
சூர்யா, வழக்கம் போல பின்னி பெடலெடுத்துட்டார். அப்புறம் தமன்னா ம்ம்ம் என்ன சொல்ல (எதோ சிந்தி பொன்னாமா? கலர் மட்டும் கண்ணா விட்டு போகமாட்டேங்குது)
"வாழ்த்துகள் கே. வீ சார். ஐயா பரிசல் சொல்லிடுங்க"
இப்ப செலவை வைச்சிட்டீரே கேபிளாரே..! ஒழுங்கு மருவாதையா டிக்கெட்டு எங்கிட்டாச்சும் ஏற்பாடு பண்ணிக் கொடும்..!
எல்லாம் ஒரு நண்பர் கொடுத்த பட்ம் கொடுத்து புண்ணியம் பண்ணினாரு.. நீஙக் சந்தோஷமாயிருந்தா அதுவே என் சந்தொஷம்.
ஹாட் ஸ்பாட் படம் தானே மாயாவி.
நிச்சயமாய் பாருங்கள் சார். ஒண்ணும் பழுதில்லை.
அப்படின்னும் சொல்ல முடியாது பப்பு. ஒரு மசாலா ஹிட்
i expect your review yesterday night, but u failed in future dont be late . nice review and film
//ஒரு ரோலர் கோஸ்டர் ரைடில் ஏறியதை உணரலாம்.//-ன்னு நான் Fast & Furious- விமர்சனத்தை முடிச்சிருக்க,
//ஒரு ரோலர் கோஸ்டர் ரைட் போன்ற படம் பார்க்க வேண்டுமா.? // -ன்னு நீங்க ஆரம்பிச்சி இருக்கீங்க..!
வாவ்..!! :)
அப்படின்றிங்க அப்ப சரியாத்தான் இருக்கும் கேபிள்
வாழ்த்துக்கள் 250 வது பதிவிற்கு !!
சந்திப்பில் சந்திப்போம்
:)))))))))))))
//
கே.வி.ஆனந்தின் நண்பர் பரிசல்காரன் என் நண்பர்
:)
:)//
ஆமாம்
:)))))))))))))//
மிக்க நன்றி அக்னிபார்வை..
தமன்னாவுக்காகவே படம் பாத்திருப்பீங்க போல
பின்னே..
//
நன்றி அத்திரி.. உஙகள் வாழ்த்துக்கும், வருகைக்கும்.
I think "AYAN" screenplay & dialogues are by writer SUBA (Suresh & Balakrishnan). They have written a story named "MAADIPPADI KUTRANGAL". This movie is inspired by that story or fully adapted from that story.
Hope its clear to you now. May be you can read that novel / story - MAADIPPADI KUTRANGAL.
Even, K.V.Anand enquired with writers SUBA about the similarity in their story and the movie CATCH ME IF YOU CAN is what i read in one of their novels, long before.
மிக்க நன்றி கோபி.. உங்கள் தகவலுக்கு.. கேட்ச் மீ ஃப்யூ கேன் படம் இன்னும் நம்மிடயே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவரது நிஜக்கதை. படமாய் வெளிவருவதற்கு முன்பே அவருடய வாழ்க்கையை பற்றி புத்தகமாய் வெளிவந்திருக்கிறது. மே..பி. படத்தின் இன்ஸ்ப்ரேஷனாய் இல்லாமல் புத்தகத்தின் இன்ஸ்பரேஷனாய் கூட இருக்கலாம். ஆனால் நான் அதை குறை கூறவில்லை. படத்தில் குறைகூறுவது போல் காட்சியமைத்திருந்ததினால்தான் சொன்னேன். மிக்க நன்றி கோபி..
நேற்று படம் பார்த்து விட்டதால் மீள்பதிவு போல் மீள் மறுமொழி
//தவிர, சுபாவின் கதைகள் பல ஆங்கில நாவல்களின் அப்பட்டமான காபி என்று என் கல்லூரி நண்பர்கள் சொல்லக் கேள்வி, நான் சாட்சி பார்த்தது இல்லை!//
எனக்கென்னவோ இது அதிகப்படியாக தோன்றுகிறது.
சுபா, இந்திரா சௌந்திரராஜன், பி.கே.பி, ராஜேஸ்குமார் எழுத்துக்களை 20 வருடங்களாக வாசித்து வருகிறேன்.
எனக்கு தெரிந்து ஆங்கில நாவல்களின் காப்பி உள்ளது போல் தெரியவில்லை
இப்படி பொத்தாம் பொதுவாக கூறுவதற்கு பதில்
இந்த ஆங்கில நாவல் - இந்த தமிழ் நாவல் என்று ஒரு 5 உதாரணங்களை அடுக்கினால் நலம்
எனக்கு தெரிந்து ஆங்கில நாவல்களில் இருந்து அதிகம் காப்பி அடித்த தமிழ் எழுத்தாளர் யாரென்று கூறினால் ஐகாரஸ் பிரகாஷ் கோபித்துக்கொள்வார் :) :) :)
அவர்களும், பி.கே.பியும் சேர்ந்து நடத்தில் பாக்கெட் நாவலில் அவர்கள் புகுத்திய உத்திகள் பல
சில componentsகளில் வெகுஜன பத்திரிகைகளை விட அவர்கள் முன்னால் நின்றனர் என்று கூட சொல்லலாம்
சுபா நாவல்களின் பின்னால் அவர்களின் அபார உழைப்பு தெரியும்.
அவர்களும், பி.கே.பியும் சேர்ந்து நடத்தில் பாக்கெட் நாவலில் அவர்கள் புகுத்திய உத்திகள் பல
சில componentsகளில் வெகுஜன பத்திரிகைகளை விட அவர்கள் முன்னால் நின்றனர் என்று கூட சொல்லலாம்"
எனக்கு தெரிந்து பாக்கெட் நாவல் ஐ நடத்தி வருபவர் அசோகன் தவிர அந்த காலத்திலேயே தமிழிலில் வேலை வாய்ப்பு தொடர்பான மாத பத்திரிகை jobguidlines நடத்தியவரும் அவர் தான். 20 வருடங்களாக மாத நாவல்கள் படித்து வரும் உங்களுக்கு இது தெரியாதது ஆச்சர்யம் தான்